அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

ஜனவரி 21 தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர அரசியை பதுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நீக்க அஅரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்றாத போது அரிசி அறுவடையாகி களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்படும் வரை இராணுவ கண்காணிப்பு போட வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி அனுரா.

இனிமேல் அரிசிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை விட ஒரு சதம் கூட அதிகமாக விற்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் கடும்தொனியில் எச்சரித்தார் ஜனாதிபதி அநுர.

நாட்டில் அவசரநிலை காலங்களில் இராணுவ உதவி பெறப்படுவது வழமைதான் என்கிற போதும் அரிசிப் பிரச்சினையை தீர்க்க காத்திரமான வேறு பல பொறிமுறைகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெறலாம் அல்லது முன்னெடுக்கலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *