மக்களின் அழைப்புக்களுக்கு பதிலளிக்கவும் என்.பி.பி அமைச்சர்களுக்கு உத்தரவு !
முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தின் போது அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி அனுர குமார