மே தின ஊர்வலத்தில் அதிரடித் தகவலை ஜனாதிபதி வெளியிடலாம் ! உள்ளுராட்சி சபைகளில் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளை NPP எதிர்பார்க்கின்றது !

மே தின ஊர்வலத்தில் அதிரடித் தகவலை ஜனாதிபதி வெளியிடலாம் ! உள்ளுராட்சி சபைகளில் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளை NPP எதிர்பார்க்கின்றது !

 

மே 6 இல் நடக்கவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரையான வாக்குகளைப் பெற்று இலங்கையில் சரித்திரம் படைக்க முற்பட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி. கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களில் உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவது என்பதற்கும் அப்பால் தனது வாக்கு வங்கியை மிகப் பலமானதாகக் கட்டியெழுப்பும் பணிகளில் தேசிய மக்கள் சக்தி கவனம் செலுத்தி வருவதாக அதனுடன் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன.

மே முதலாம் திகதி நடைபெறவுள்ள மேதினக் கொண்டாட்டங்கள் வரலாறு காணாத மக்கள் செல்வாக்குடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொழும்பு காலிமுகத்திடல் மே தினக் கூட்டம் மிகப் பிரமாண்டமான அளவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

இந்தப் பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க சில முக்கிய தகவல்களை வெளியிட உள்ளார். இதில் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு பின்னால் இருந்தவர்கள் என்பதைக்காட்டிலும் நாட்டைச் சூறையாடியவர்கள் தொடர்பில் சில முக்கிய தகவல்களை ஜனாதிபதி வெளியிடலாம் எனத் தெரிகிறது. ஈஸ்டர் குண்டுவெடிப்போடு தொடர்புடைய இதுவரை வெளிவராத சில தகவல்களும் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

மே முதலாம் திகதி வெளிவரவுள்ள தகவல்களும் பிரம்மாண்டமான மே தினக் கொண்டாட்டங்களும் மே ஆறாம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜனாதிபதித் தேர்தலில் என்பிபி 57 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 42 சதவிகிதம். பாராளுமன்றத் தேர்தலில் என்பிபி தனது வாக்கு வங்கியை 62 சதவிகிதமாக அதிகரித்து 68 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. உள்ளுராட்சித் தேர்தலிலும் என்பிபி உடைய வெற்றி மிகப்பலமாக இருக்கும் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சித் தேர்தலில் 80 லட்சம் முதல் ஒரு கோடி வாக்குகளை என்பிபி எதிர்பார்க்கின்றது என்பது அவர்களுடைய அதித நம்பிக்கையாகவும் அமையலாம். அவர்கள் தங்கள் இலக்குகளில் மிகத் தெளிவாக உள்ளனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் தேசியக் கட்சிகள் தங்களுடைய இருப்புக்காக படாதபாடு படுகின்றனர்.

புதிய முற்போக்கான மாற்று அணி ஒன்றே தேசிய மக்கள் சக்திக்கு எதிர்காலத்தில் சவாலாக முடியும். பிற்போக்குத் தேசியவாதிகள் அவர்கள் தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் என்ற அடிப்படை பிற்போக்குவாதக் கட்சிகள் முயவரியற்றுப் போகும் காலம் ஆரம்பித்துவிட்டதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *