இனவாதம் பேசிவந்த டான் பிரியசாத் மீது துப்பாக்கிச்சூடு !
கொழும்பில் வெல்லம்பிட்டியப் பகுதியில் தனது நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யததாக கூறப்படுகிறது. அரசியல் செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தும் இவர்
நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் ஆவார்.
காயமடைந்த பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
டான் பிரியாத் முஸ்லீம் மக்கள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக இனவாதம் பேசி கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.