என்பிபி வெல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என கூறவில்லை ! ஜனாதிபதி

என்பிபி வெல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என கூறவில்லை ! ஜனாதிபதி

உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது கருத்து எதிர்க்கட்சிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தலவாக்கலயில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். என்பிபி கட்சி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கு அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என ஜனாதிபதி அச்சுறுத்தி வாக்குச் சேகரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன் இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்றும் முறையிட்டிருந்தன.

இவற்றுக்கெல்லாம் பதிலழித்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க மத்திய அரசு திருடாது. ஆகவே உள்ளூராட்சி சபைகளும் திருடக் கூடாது என தான் நான் கூறினேன். என்பிபி வெற்றியடையாத சபைகளுக்கு நான் நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டேன் என நான் கூறவில்லை எனக் குறிப்பிட்டார். ஊழலற்ற ஆட்சியையே தான் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *