வாக்கு வங்கியற்றவர்கள் கஜாவோடு சைக்கிளில் டபிள்ஸ் – றிபிள்ஸ் ஓடுகிறார்கள் !

வாக்கு வங்கியற்றவர்கள் கஜாவோடு சைக்கிளில் டபிள்ஸ் – றிபிள்ஸ் ஓடுகிறார்கள் !

தமிழ்த்தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் தம்மை பாதுகாக்கலாம் என யாழ் முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் முஸ்லீம் மக்கள் ஒன்றியம் ஆதரவு கொடுப்பதாக யாழ் ஊடக அமையத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ளூராட்சித் தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழரசுக் கட்சியில் தனியொரு நபர் ஆதிக்கம் செலுத்துகிறார். தமிழரசுக் கட்சி தன்னை தள்ளி வைத்து விட்டதாகவும் சரவணபவன் வருத்தம் தெரிவித்தார். எச்சூழலிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலின அணியினரே தொடர்ந்து தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதாகவும் பாராட்டினார். அதனாலேயேயும் தனது அரசியல் எதிர்காலம் கருதியும் சைக்கிளை ஆதரிக்கும் முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *