யாழ் நகரின் நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் ! என்பிபி கபிலன்

யாழ் நகரின் நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் ! என்பிபி கபிலன்

யாழ் நகர மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்குகின்ற, கடந்த காலங்களில் தீர்க்கப்படாத: நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் என என்பிபி யாழ் மாநகர முதல்வUf;fhd வேட்பாளர் விரிவுரையாளர் கபிலன் சுந்தரமூர்த்தி தெரிவிக்கின்றார். நேற்று ஏப்ரல் 23 இரவு தேசம்நெற்க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“உள்ளுராட்சி அமைப்புகளின் தேர்தல் முறைமையில் ஒரு தனிக்கட்சி வெற்றபெற்று ஆட்சி அமைக்கின்ற வாய்ப்புகள் இல்லை. தமிழ் தேசியக் கட்சிகள் என்பிபி ஆட்சியைக் கைப்பற்ற தாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்பதில் மிக உறுதியாக உள்ளனர். அப்படியிருக்கையில் உங்களுடைய கனவுத் திட்டங்களை எப்படி நடைமுறைச் சாத்தியமாக்க முடியும் ” எனத் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த முதல்வர் வேட்பாளர் எஸ் கபிலன், “யாழ் மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய பூரண ஆதரவைத் தந்து தேசிய மக்கள் சக்தியை மிகப் பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்ய வேண்டும். வெற்றியடையச் செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வருக்கான வேட்பாளர் அனுராவின் நிதி தேவையில்லை. அது இல்லாமலேயே நாங்கள் யாழ் மாநகரத்தை கட்டியெழுப்புவோம்’ எனச் சூளுரைத்து இருந்தார். அத பற்றி கபிலனிடம் கேட்ட போது, “அப்படியென்றால் ஏன் இவ்வளவு காலமாக அவர்கள் அதனைச் செய்யாமல் இருந்தனர். இவர்களுக்கு செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தும் இவர்கள் செய்யவில்லையே. இப்ப இவர்கள் தேர்தலுக்குப் பிறகு சேருவோம் என்று சொல்வது கூட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. தேசிய மக்கள் சக்தி வந்து அபிவிருத்தியைச் செய்துவிடாமல் தடுப்பதற்கே” எனத் தெரிவித்தார் கபிலன்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் நாங்கள் அளித்த உறுதிமொழிக்கு அமைய அனைத்தையும் சாதித்துக் காட்டுவோம். அப்படிச் செய்ய முடியாது போனால் அதற்கான முழுப்பொறுப்பையும் நான் எடுப்பேன். நாங்கள் எங்கள் மக்களுக்குச் சாதித்துக் காட்டுவோம். உள்ளுராட்சி, நகராட்சி, மாநகராட்சி எப்படி இயங்கும் அதில் எதையெல்லாம் சாதிக்கலாம் என்பதை மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பார்ப்பார்கள்” எனத் தெரிவித்தார் கபிலன்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *