காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் – 26 பேர் பலி !

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் – 26 பேர் பலி !

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்பயணிகள் மீதான தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் கோடை காலத்தில் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருவது வழமையாகும். கடந்த 22 ஆம் திகதி ஏப்பிரல் பஹல்கமுக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரி உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செயல்படும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் இத் தாக்குதலைத் தொடர்ந்து பெரிய அளவிலான தேடுதல் வேட்டையைஅப்பகுதியில் ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தொடங்கியுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இத்தாக்குதலை கண்டித்துள்ளனர். அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தனது எக்ஸ தளத்தில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

“இந்தியாவில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் இதயங்கள் உள்ளன. இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *