கனடியத் தேர்தலில் தமிழ் தரப்பு எதிரும் புதிருமான இரு கட்சிகளிலும் நால்வர் போட்டி !

கனடியத் தேர்தலில் தமிழ் தரப்பு எதிரும் புதிருமான இரு கட்சிகளிலும் நால்வர் போட்டி !

ஏப்ரல் 28 இல் நடைபெறவுள்ள கனடியத் தேர்தலில் எதிரும் புதிருமாக உள்ள ஆளும் லிபிரல் கட்சியில் இருவரும் எதிர்க்கட்சியான பழமைவாத கொன்சவேடிவ் கட்சியில் இருவருமாக நால்வர் போட்டியிடுகின்றனர். நீதி அமைச்சராகவுள்ள ஹரி ஆனந்தசங்கரியும் கனடா தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் ஜொவனிற்றா நாதனும் லிபரல் கட்சியில் போட்டியிடுகின்றனர். லைனல் லோகநாதனும் நிரான் ஜெயநேசனும் கொன்சவேடிவ் கட்சியில் போட்டியிடுகின்றனர்.

மார்க் கார்னி தலைமையிலான லிபிரல் கட்சி விரல் விட்டு எண்ணும் விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றார். ஜஸ்ரின் ரூடோர் தலைமையில் லிபிரல் கட்சி ஏற்கனவே இரு தடவைகள் ஆட்சியில் இருந்ததில் மக்கள் மத்தியில் சலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனக் காரணமாக கொன்சவேடிவ் கட்சி முன்னணியில் இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம் ஜனாதிபதியாகி கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலம் எனத் தெரிவித்ததும் கனடாவுக்கு எதிராகவும் வர்த்தக வரிகளைப் பயன்படுத்தியதும் கனடாவில் டொனால் ட்ரம்முக்கு எதிராக மார்க் கார்னியின் கருத்துக்கள் வரவேற்பபைப் பெற்றது. சரிந்திருந்து லிபிரல் கட்சி கிசுகிசுவென மேல்நிலைக்கு வந்து தற்போது மூன்று புள்ளிகளால் மட்டும் முன்னணியில் உள்ளது.

டொனால் ட்ரம் உடைய கருத்துக்களோடு ஒத்துப் போகின்ற கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் பஃரே பொலிவ்ரே தேர்தல் நெருங்கும் தருவாயில் தொழிலுலகிற்குள் நுழையும் இளவயதினரின் ஆதரவை கணிசமான அளவில் பெற்றுவருவதாக அரசியல் சமூக ஆய்வாளர் நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்களுக்கான வரிகளைக் குறைப்பதும் குடிவரவாளர்களைக் கட்டுப்படுத்துவது போன்ற இறுக்கமான வலதுசாரிக் கொள்கைகளை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

கனடாவுக்கு முந்திச் சென்றவர்கள் கொன்சவேடிவ் கட்சியை ஆதரிப்பதாகவும் பிந்திச் சென்றவர்கள் தங்களுடைய குடியுரிமை மற்றும் உரிமைகளுக்காக லிபிரல் கட்சியை ஆதரிப்பதாகவும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தற்போது குடியேறுபவர்களின் வருகையால் வீட்டு வசதி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான போட்டி ஏற்பட்டுள்ளதால் குடிவருவோர் பற்றிய தப்பபிப்பிராயங்கள் பரவலாகக் காணப்படுவதையும் நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசமாக கனடா உள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களதும் மொத்த சனத்தொகைக்கு ஒப்பான தொகையான தமிழ் மக்கள் கனடாவில் வாழ்கின்றனர். இத்தேர்தல் கனடாவில் உள்ள தமிழ் மக்களை மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலிருந்து கனடாவுக்குச் செல்வதற்கு பாரிய தடைகள் இருக்கவில்லை. வருகின்ற ஆட்சி மாற்றம் இவ்விடயத்தில் தாக்கத்தைச் செலுத்த வாய்ப்பு உள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *