25

25

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. கட்சியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா

sarathfonseka.jpgஎதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  ஜெ வி பி கூறியுள்ளது. ஜே.வி.பி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இத்தகவலை வெளியிட்டுள்ளார்

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.  அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.

பட்டதாரிகள் வேலைவாய்ப்பு வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆகக் கூடிய வய தெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டு ள்ளதென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதற்கான வயதெல்லை 35 ஆகும். இதனை அதிகரிப்பதற்கான வேண்டு கோளை அமைச்சர் முரளிதரன் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தார் இதற்கமைய இந்த வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்

commander.jpgமுன்னாள் இராணுவ தளபதியும், கூட்டுப்படை தலைமையதிகாரியுமான, சரத் பொன்சேகா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் படைத்தளபதியான தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும், உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.
 
சரத் பொன்சேகா, பதவியில் இருந்த போது அவருக்கு சுமார் 750 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் அந்த பாதுகாப்பு தற்போது 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், அவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கள், பெண்கள் உட்பட 21 பேர் பிலிப்பைன்ஸில் படுகொலை தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யச் சென்றவேளை சம்பவம்

பிலிப்பைன்ஸின் மகுண்டனோ மாகாணத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டோர் மகுண்டனோ மாகாண உள்ளூர் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களுமாவர். உள்ளூர் ஆட்சி தேர்தல்களுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாத அமைப்பு கடந்த திங்கட்கிழமை இவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய பொலிஸார் இவர்களில் 13 பேர் பெண்களென்றும் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுத்ததாகவும் கூறினர். பிரேதங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டும், உருக்குலைந்த நிலையிலும் காணப்பட்டன.

கொலைசெய்யப்பட்டோரில் உள்ளூர் அரசியல் வாதியின் மனைவியும் அடங்குகின்றார். மாகாண ஆளுநருடன் தொடர்புகொண்ட ஆயுததாரிகள் இவர்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவதை ஆளுநர் முற்றாக நிராகரித்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென முஸ்லிம் அமைப்பொன்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகப் பொலிஸார் கூறினர்.

அரசியல் நோக்கங்களுக்காக இக்கொலைகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பிலிப்பைன்ஸ் அராசங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதை முன்னிட்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் சில மாகாணங்களில் நடத்தப்படவுள்ளன. இத் தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோ கூடாதென பிரிவினைவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.

நோர்வே தமிழர் அவையில் அரை அவியல்கள் : குலன்

Aravinthan_Ki_PiBallotsBox_VKR1976சந்திரனுக்கு நாய், குரங்குகளை அனுப்பிப் பரிசோதிப்பது போல் ஈழத்தமிழர் பிரச்சனைகள் நோர்வேயில் தான் பரீட்சிக்கப்படுகின்றன. காலாவதியான வட்டுக்கோட்டையைக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு மக்களை ஏமாற்றி மாறிமாறி ஓடப்போகிறீர்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டுதிரிந்த கி.பி அரவிந்தனே அதை கிழித்து பிரித்து எறிந்துவிட்டாராம். இதற்கு அவையினரின் அவியல் என்னவென்றால் கிபியை யாரோ வாங்கிவிட்டார்கள் என்பதுதான். புலியின் காலத்தில் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களைத் துரோகிகள் என்றார்கள். இன்று விலைபோனவர்கள் என்கிறார்கள். இப்படிக் காலத்திற்குக் காலம் கடைவிரித்து நன்றாகவே புலிவியாபாரம் செய்கிறார்கள். இறுதியில் புலம்(ன்)பெயர்ந்தவர்கள் புலிகளையே வித்துவிட்டார்கள்.

நோர்வேயில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கதாசிரியர்கள் என்று பலர் இருந்தபோதிலும் சென்ற 15.11.2009 நடைபெற்ற சுத்தமாத்துத் தேர்தலை மக்கள் மத்தியில் போட்டுக் கிழிப்பதற்கு ஒருவரும் முன்வராதது வேதனைக்குரியது. ஆயுதக் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த பின்பும் மௌனமாக இருக்கும் நோர்வே எழுத்தாளர்களே! உங்கள் வாய்களையும் கைகளையும் உணவுண்ண மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நாளை உங்கள் கதவுகள் தட்டப்படும், பின் உடைக்கப்படும். அப்போதும் பேசாமல் இருங்கள்.

ஈழத் தீர்மானத்தை எடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினரே சிந்தனை வாதங்கள் ஜதார்த்தத்துக்கு உதவாது என்று அதைக் கைவிட்டு வேறு பல தீர்மானங்களுக்கும், ஒப்பந்தங்களுக்கும் உடன்பட்டார்கள். திம்புகூட அப்படியாக உருவான ஒன்றுதான். தமிழீழம்தான் முடிந்தமுடிவு என்று நின்ற புலிகளே திம்புத் தீர்மானத்துக்கு ஒத்துவருகிறோம் என்றார்கள். இறுதியில் தமிழர்களுக்கு தருவதைத் தாருங்கள் என்று நின்றார்கள். இதுகூடத் தெரியாமல் புலமும் புலனும் பெயர்ந்த புண்ணாக்குகள் புலிவாலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்களே. தமிழீழத்துக்காக ஜனநாயகவழியில் போராடிய கூட்டணியினரோ புலிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். இதன்பின் புலத்தில் என்ன புதிதாக ஜனநாயகம் வேண்டி இருக்கிறது? ஜனநாயக, ஆயத போராட்டங்கள் இரண்டுமே தோல்வியில் முடிந்த ஜதார்த்தங்கள். இதைக்கூட புரிந்துகொள்ள அறிவில்லாதவர்களை புலன்பெயர்ந்தவர்கள் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. அவர்களுக்கு எதற்கு அரசியல். அரை அவியலைத்தான் தின்னப்போகிறோம் என்று அடம்பிடித்தால் நீங்கள் வாழும் நாடுகளில் ஈழம்கேளுங்கள். வன்னி மக்களை விட்டுவிடுங்கள் வன்னிப்போருக்கு என்றும் வன்னிமக்களுக்கு என்றும் திரட்டிய பணங்கள் எங்கே. அதைக் கொண்டு வாருங்கள் முதலில். அன்பின்பு பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசலாம்.

நோர்வேயில் நடைபெற்ற அரை அவியல்களின் மந்தைகளுக்கு தேசியப்பட்டியல் பிராந்தியப்பட்டியல் என்று பட்டிகட்டி விட்டார்கள். அதற்குள் நின்று சிலர் பா பா என்று கத்தினார்கள். இவர்கள்தான் தேசியபட்டியல்காரர்கள். தேசமே இல்லாத மோசமான தேசியவாதிகள். பிறதேச பிரஜாவுரிமை கொண்டவர்கள்.

NorwayElection_NCET_National_List(Photos: TamilNet)இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியதுமான தகவல்கள் தேசத்திலோ வேறு இணைத்தளங்களிலோ தொடர்ந்தும் வரலாம். இவர்கள்தானாம் நோர்வேயின் பிராந்தியக் கட்டுப்பாட்டாளர்கள். முஸ்லீம்களையும், சிங்களவரையும் வடக்கு கிழக்கில் இருந்து கலைத்துவிட்டு தமிழீழம் கேட்டு நந்திக்கடலில் குதித்தோரின் வாரிசுகள். நோர்வேயிய மக்களை கலைத்துவிட்டு நோர்வேயில் ஈழம் அமைக்கப்போகிறார்களா? நோர்வே மக்களுக்கு இனி வாழ்க்கை நோ வேதான் (No-way). இந்த நோர்வே அவையின் கூத்துக்களை நோவேயிய அரசுக்கும் நோர்வே மக்களுக்கும் சரியாக எடுத்துக் கூற ஒரு சரியான ஆள் நோர்வேயில் இல்லையா? பிரிவினைவாதிகளால் நோர்வே சட்டத்தை அனுசரித்துப் போக முடியாதாம்; மக்களிடையே ஒற்றுமை பேணவேண்டும் என்கிறதாம் சட்டம். அவையின் திட்டம் அதுவல்லவே.

இந்தத் தேர்தலை வைத்து எந்தப் பாராளுமன்றத்துக்குப் போகப்போகிறார்களோ தெரியவில்லை. இங்குள்ள மக்களையோ ஈழத்திலுள்ள தமிழர்களையோ பிரதிநிதித்துவப் படுத்த நீங்கள் யார்? இந்தச் சர்வாதிகார உரிமையை தந்தது யார்? இவர்கள் கிட்லரை விட மோசமான நாசிகள் என்பதை ஏன் நோர்வேவாழ் தமிழ் தங்கங்களால் சொல்ல முடியவில்லை. அங்குள்ள மக்களின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து அவர்களுக்காகப் போராட அங்கே மக்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் அங்கேயே உருவாகுவார்கள். பிரபாகன் என்ற தமிழ்இனஅழிப்பாளனும், கொலை வெறியனும், உங்கள் பிரதிநிதிகளும் அங்கே அம்மக்களிடையே தான் உருவானார்கள். புலம்பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழ் தொழிலாளர்களை போர், விடுதலை என்று சுரண்டி தம்மை வளர்த்த புலிகளையும், பிரபாகரனையும் அழித்ததோடு நின்றுவிடாமல் இன்று நோர்வே நாட்டு மக்களுக்குப் படங்காட்டவும் நோர்வே நாட்டை நாசம் செய்யவும் தலைமை, பிரதிநித்துவம் என்று கொடி கொண்டு கோலோச்சத் திரிகிறார்கள் இந்தக் கொடியவர்கள். இவர்களுக்குக் கொம்பு சீவுபவர்கள் இருக்கும்வரை இவர்கள் காட்டில் மழைதான். இவர்களின் உண்மை முகங்களை அறிந்தும் இவர்களுக்கு தூபங் காட்டுபவர்களை என்ன என்று சொல்வது? கெடப்போகிறேன் பிடி பந்தயம் என்றால் யார் இவர்களைத் தடுக்க முடியும்?

பியோனார் முக்ஸ்னெஸ்: இவர் ஒரு நோவேயியர் சிவப்புச் சட்டைக்காரர். பெரும்பாலும் இவர் சார்ந்தகட்சி கட்டுக்காசை இழந்தே வந்திருக்கிறதாம். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பிறப்பில் தமிழராகவோ, தமிழர்களுக்குப் பிறந்தவர்களாகவோ அல்லது தமிழர்களைத் திருமணம் செய்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதுதான் அவையின் அரையவியல் சட்டம். தாம் உருவாக்கிய யாப்பையே மீறி ஒரு நோவேயியரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது அரை குறை அவை. இந்த முக்ஸ்னெஸ் என்பவர் எந்தத் தமிழிச்சியையும் திருமணம் செய்ததாகத் தெரியவில்லை. காந்தர்வமணங்கள் கணக்கில் எடுக்கப்படமாட்டா. வாக்களிக்கவே தகுதியற்றவர் எப்படி தேர்தலில் நிற்கமுடியும்? இதைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத அரையவியல்கள் தேர்தல் நடத்தினார்களாம். இனி அவையின் காட்டில் பணமழைதான்.

இந்த முக்ஸ்னெஸக்குத்தான் அதிகவாக்குக்கள் (1864) பதிவாகியிருந்தன. தமிழே தெரியாத ஒருவன் தமிழர்களுக்கு தலைமை தாங்கப்போகிறானாம். இவருக்கு எம்பிரச்சனைகளைச் சொல்ல மொழிபெயர்பாளர்களை அல்லவா கொண்டு திரியவேணும். இங்கேயும் அதிகார வெறியைப் பாருங்கள்; நோர்வே மொழி தெரிந்த தமிழர்கள்தான் பிரச்சனையை கூறலாம் என்ற நிலை வந்துள்ளதா இல்லையா? இதில் இருந்து என்ன தெரிகிறது. வல்லமையுள்ளது தான் வாழவேண்டும் என்ற புலிக்குணம் தெரியவில்லையா? எம்மை ஆழ்வதற்கு வெள்ளையன் ஒருத்தன்தான் சரியானவன் என்பது தெரியவில்லையா? 500 வருடங்களுக்கு மேல் வெள்ளையர்களுக்கு கீழ் அடிமையாக இருந்து அடிமை உணர்வில் ஊறிப்போய் வெள்ளையனுக்கு அடிமையாகியே நாறிப்போன சமூகத்தின் வேடிக்கைகளை உலகமக்களே பாருங்கள். இவர்களுக்கு சுதந்திரம் விடுதலை ஒரு கேடா. சுயமாகவே தன்னுள் விடுதலையடைய முடியாதவர்களுக்கு எதற்கு விடுதலை, சுதந்திரம். இச்சொற்களையே உச்சரிக்க அருகதையற்றவர்கள் இவர்கள்.

ஆதித்தன்: இவரோ ஒரு சுதந்திரமாகத் திரியும் சுத்துமாத்து. தமிழ்முரசம் எனும் புலிகளின் பிரச்சாரப்பீரங்கில் இப்படியொரு வெடிவைத்தாராம். ”தான் போராளியும், முதன் முதலில் சயனைட் உண்டு உயிர்நீர்த்த உரும்பிராய் சிவகுமாரனின் நண்பராம்”. இந்த ஆதியெனும் பொய்யன் பிறந்தது 1967ல். சிவகுமாரன் இறந்ததோ 1974ல். சிவகுமாரன் இறக்கும்போது இவருக்கு 7வயது. சிவகுமாரன் இவருக்கு சிலவேளை தூக்கி வைத்துப் பால் குடுத்திருக்கலாம். சிவகுமாரன்தான் தனது தந்தை என்று கூறியிருந்தால் கூட நம்பியிருக்கலாம். பெயருக்கும் புகழுக்குமாக மாற்றுக்கருத்தாளிடம் இருந்து மாறிப்போன ஆதி போன்றவர்களின் பொய்களை நம்பும் மக்கள் இருக்கும் வரையும் அவர்கள் காட்டில் மழைதான். அரசியல் அறிவிலும் ஆதிக்குப் பாதியில் வந்ததால் எல்லாமே பாதிதானாம். அரசியல் என்று வந்தபின் சபையில் சொல்லும் பொய்களை அவையில் போட்டு உடைப்பது கடமையல்லவா.

ரமணன்; தர்மசீலன்: இவர்களுக்கு ஏன் வோட்டுப் போட்டார்கள் என்று பார்த்தால் அவன் டொக்டர் இவன் இஞ்சினியராம். இஞ்சினியர் டாக்குத்தர்களுக்குத்தான் எல்லாம் உண்டு என்று அவர்களுக்கு மட்டும் தான் பெண்குடுக்கும் கலாச்சார வாரிசுகள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான். இனி டாக்குத்தருக்கும் இஞ்சினியருக்கும்தான் அரசியலும் தமிழ்ஈழமும்.

இதுபோலவே ஏதோ தேர்தல் எண்டார்கள் போட்டோம்: என்ன புள்ளடிதானே போட்டால்போச்சு: அவர் எனக்கு நல்லபழக்கம், இவர் வரச்சென்னார் போய் போட்டனான்: தமிழ் மக்களுக்காக பேசப்போகிறோம் என்றார்கள் அதனாலை போட்டனான்: எனக்கு ஒரே குழப்பமாய்தான் இருந்தது. அவை எங்களோடை நல்லமாதிரி அதனாலை போனனாங்கள் என்பது போன்ற காரணங்களுக்காகவும் வோட்டு வேட்டு வைத்தார்கள். எதற்கு வோட்டுப் போடுகிறறோம் என்று தெரியாமலே வோட்டுப் போட்டவர்களை மந்தை என்று வர்ணிக்காமல் வேறு எப்படி அழைக்கமுடியும். முக்கியமாக ஜெயசிறீ என்பவரைத்தவிர அரசியல் அனுபவமுள்ளவர்கள் இப்பட்டியலில் யாரும் இல்லை என்கிறார்கள்.

அரையவியல்களின் அவை யாப்பின்படி 50 சதவீதமானவர்கள் வோட்டுப் போட்டால் மட்டுமே இந்த தேர்தல் செல்லுபடியாகும் என்றார்கள். அவையின் அவியல்படியே 18வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் சிங்களவருடன் 8772 என்பதாகும். நோர்வே அரசின் புதுப்பிக்கப்படாத கணக்குப்படி 8582 என்பது அரச அறிக்கை. புதுப்பிக்கப்பட்டால் இது 10000தைத் தாண்டும் என்பது வேறுகணக்கு. நோர்வேக்கு தமிழர்கள் வரத்தொடங்கியதே 1960ல். தொழிலுக்கு என்றும், பாடசாலை பல்கலைக்கழகம் பின் அகதி என்று தமிழர்கள் காலம் காலமாய் நோர்வேயில் கொட்டுண்டார்கள். நோர்வேயில் ஈழத்தில் பிறந்த 18வயதுக்கு மேற்பட்ட தமிழர்கள் விசா இன்றி சட்டவிரோதமாக இருப்பவர்களே 3000 மேல் என்கிறது பொலிஸ் அறிக்கை. இவர்கள் மட்டுமே வோட்டுப்போட்டிருந்தால் அவைக்கு அவித்தவர்களை விட வோட்டுக்கள் கூட விழுந்திருக்கும்.

அவையின் கணக்குப்படியே நாம் கணக்கெடுத்தாலும் 50சதவீதத்தை எட்டாது. புதுப்பிக்கப்படாத கணக்குப்படி இலங்கைத் தமிழர்கள் ஆண்கள் 4491 பெண்கள் 4101. மொத்தம் 8582. அவைக்கு வந்த வோட்டுக்கள் அவையின் கணக்குப்படியே 2767. வீதாசாரப்படி 32.2 வீதம். அவையின் அவியல்களைப் பாருங்கள் கீழே.

NorwayElection_NCET_Eastern_Region(Photos: TamilNet)இவர்கள்தான் நோர்வேயின் பிராந்திய பருந்துகள். இந்த அரசியல் சூனியங்கள்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போகிறார்களாம். பணருசி கண்ட பூனைகள் சும்மாவா இருக்கப் போகின்றன. நோர்வே தமிழ்தங்கங்களே பணங்களை எடுத்துத் தயாராக வைத்திருங்கள் மாவீரர் தினத்துக்கு குலுக்கிக்கொண்டு வருவார்கள். எல்லா நாட்டிலும் குலுக்கத் தொடங்கி விட்டார்கள்.

மேலுள்ளவர்களுக்கான அவையின் பட்டியல்:
Votes polled: 2076
• Sivaganesh Vadivelu (1600)
• Rajendhrum Ponnuthurai (1597)
• Sivarajah Vallipuram (1546)
• Kannan Nagendram (1523)
• Mary Florida Judin Francis (1470)
• Rajaratnam Veluppillai (1465)

கணிதம் தெரிந்த சிறுவர்களிடம் இந்தக் தொகையைக் கூட்டச்சொல்லுங்கள் 2076 வருகிறதா என்று பார்ப்போம். ஒருவருக்கு 5 வோட்டு என்றால் சுமார் 10380வோட்டுக்கள். சரி 7 வோட்டு என்றால் 14532 வோட்டுக்கள். இங்கே களிவுகள் வந்ததாகத் தெரியவில்லை. களிவுகளுக்கு எப்படிக் கழிவு வரும் என்று கேட்கக்கூடாது. இவர்கள் பிணங்களை எண்ணி எண்ணியே கணக்குப் போடப் புலிகளால் பழக்கப்பட்டவர்கள் இப்படித்தான் போடுவார்கள். அவை சொல்வதை அப்படியே நீங்கள் கேட்க வேண்டியதுதான். ஏன் எதற்கு என்று தெரியாமல் வோட்டுகளையும் போடவேண்டியதுதான். இதுதான் புதிய ஜனநாயகம். இத்தேர்தலிலுள் பெரிய தில்லுமுல்லு என்னவென்றால் ஒருவர் பிராந்தியதுக்கு 7 வோட்டும், பிரதேசத்துக்கு 5 வோட்டும் போடலாமாம். அப்போதுதானே தொகையைப் பெரிதாகக் காட்டலாம். வோட்டுப் போடப் போனவர்களுக்கும் இந்தவிசயம் தெரியாதாம். மேலுள்ள எண்களோ கணக்குகளோ சோடிக்கப்பட்டதல்ல. அவையை ஆட்டித்திரியும் தமிழ்நெட்டில் இருந்தே எடுக்கப்பட்டது.

மேற்குப் பிராந்தியத்தில் பிராக்குப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜயசங்கர் அசோகன் என்பவரும் வெள்ளிபார்த்துப் போட்டியிட்டு வென்றுள்ளாராம். வெள்ளிபார்க்கும் வெங்காயங்கள் இருக்கும் வரையும் இவர்கள் காட்டில் பணமழைதான். இனி எல்லோரும் தேர்தல் நடத்தலாம். தேர்தலில் நிற்கலாம். ஏன் எதற்கென்று தெரியாமல் வோட்டும் போடலாம்.

நோவேயிய குடியுரிமையை வைத்துக் கொண்டு வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்களிடமே போராட்டம் என்று பணம் திரட்டி தம்வங்கி வைப்பகங்களை நிரப்பும் இவர்கள் வன்னி மக்களைப்பற்றிப் பேசவோ பிரதிநிதப்படுத்துவோ அருகதையற்றவர்கள். நோர்வேயில் அடித்த காசுகளைப் மனச்சாட்சிப்படி கொடுக்க வக்கில்லை, வன்னிமக்களைப் பற்றிக் பேசுவதற்குப் புறப்பட்டு விட்டார்கள். புலிக்கென்று வாங்கி தங்கள் பணமூட்டையை நிரப்பிய பணங்களை எடுத்த முதலில் வன்னிமக்களுக்கு அனுப்புங்கள். அதன்பின் அவர்களைப்பற்றிப் பேசலாம்.

இந்தியாவையும் ஒரு வெள்ளைக்காரிதான் ஆளுகிறாள்; இலங்கைத் தமிழர்களை நோர்வேயில் ஒரு வெள்ளைக்காரன் ஆட்சிப்பொறுப்பு ஏற்றிருக்கிறான். காலணித்துவம் எம்மிடையே கால்கடுக்க நிற்கிறது. உயிர் கொடுத்து உயிர் பிழைத்து நிற்கும் ஈழம்வாழ் எம்முறவுகள் புலம்பெயர் புண்ணாக்குகளுக்கு சரியான பாடம் புகட்டுவார்களா? இன்று இவ்வளவு மக்களையும் அனாதைகளாக்கிக் கொன்று குவித்தது துவைத்தது அவையினர் என்பதை யார் எப்போ உணரப்போகிறீர்கள். இந்த வைரசுகள் எந்தநேரம் எப்படி வருவார்கள் என்பதை யாராலும் உணரமுடியாது. வைரசுகளுக்கு மருந்தும் இல்லை. தொற்றினால் தொற்றியதுதான். முடிவு சாவுதான். நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை பன்றிக்காச்சல் போல் எம்நாடுகளுக்குள்ளும் பரவும் சாத்தியங்கள் அதிகமாகவே உண்டு. இந்தச் சாத்தான்களை நாட்டுக்குள் அனுமதிப்பதே அவமானம். இந்த மனிதவிரோதிகளை ஆணிவேருடன் அறுத்து விட முயற்சியுங்கள்.

மாவீரர் தினம் வருகின்றது. புலிகளால் பலாற்காரமாக அல்லது புலிகளை இரட்சகர் என்று நம்பி ஏமாந்து தன்னுயிர் நீர்த்த வீரர்களுக்குமாய் எங்கள் கண்கள் கசியும். புலிகளால் கொன்று குதறப்பட்ட ஒவ்வொரு மாற்று இயக்கத்தவர்களுக்குமாகவும், போரில் அப்பாவிகளாய் உயர்நீர்த்த எம் உடன்பிறப்புக்களுக்காகவும், புரியாது புலிப்பாசறைக்குப் போன பிள்ளைகளுக்காகவும், ஒரு நாள், ஒரு பொதுநாள் தெரிவு செய்யப்பட்டு துக்கதினம் அனுஸ்டிப்பது முக்கியமானது.

Tamil Parties Recognize Need for Unity and Consensus for Durable Solution : TIC Press Release

tic_logoAfter a three-day conference in Switzerland, the political parties of the Tamil speaking peoples of Sri Lanka, recognizing the need for unity and consensus, committed themselves to the engagement by all segments of society towards a just and durable political solution in the island through a dignified, respectful and peaceful process. The parties also agreed to continue the discussions.

The conference from 20 to 22 November 2009, titled “The role of the elected representatives of Sri Lanka’s Tamil and Muslim population in a process of national reconciliation, reconstruction and reform” was jointly organized by the Tamil Information Centre (TIC), the International Working Group on Sri Lanka (IWG) and the Initiative on Conflict Prevention through Quiet Diplomacy (ICPQD) at the University of Essex. It was hosted by the Swiss Federal Department of Foreign Affairs. The following Tamil parties were represented at the conference: All Ceylon Muslim Congress, All Ceylon Tamil Congress, Ceylon Workers Congress, Democratic Peoples Front, Eelam People’s Democratic Party, Eelam People’s Revolutionary Front, Eelam Revolutionary Organisation of Students, Ilankai Tamil Arasu Kadchi, Pathmanabha Eelam Peoples‘, Revolutionary Liberation Front, People’s Liberation Organisation of Tamil Eelam, Sri Lanka Muslim Congress, Tamil Eelam Liberation Organisation, Tamil Makkal Viduthalai Pulikal , Tamil National Alliance, Tamil United Liberation Front and Up-Country Peoples Front.

The conference was arranged in a climate of extreme unease in Sri Lanka and abroad in relation to the future of the Tamil speaking peoples in the island. Five months have elapsed since the Sri Lanka government announced the military defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), but despite the assurances of the government, little visible progress has been made towards addressing minority rights and grievances. Some suspect that there is no serious intention to implement meaningful reforms in the long-term and fear further erosion of minority rights. The most egregious sign of a lack of progress is the treatment of 300,000 internally displaced Tamil civilians, many of whom continue to be held against their will in miserable inhuman conditions. The political opposition, civil society and journalists who call for the protection of the IDPS or minority rights are portrayed as enemies of the state and have been silenced through assassination, violence and imprisonment or forced to flee the country.

Under these circumstances it is essential for the representatives of the Tamil speaking peoples to unite to develop an effective common programme to hold the government accountable for the protection of minorities, and to act as a serious and dependable negotiating partner representing the demands of minorities in the development of meaningful proposals for reform in Sri Lanka.

In this light, the short and long-term aims of the conference were as follows:

*  To provide a safe and facilitated space for dialogue and engagement between the representatives of Sri Lanka’s main political parties of the Tamil-speaking peoples;

*  To build on preparatory discussions with and between the parties aimed at  bridging divides and identifying common ground on substantive issues; 

*  To explore the possibilities for future cooperation towards the development of a common political platform for the representation of Sri Lanka’s Tamil speaking peoples within the political framework of pre and post-election Sri Lanka;
 
*  In the long-term, to support Sri Lanka’s Tamil speaking political parties to play a meaningful role in a process of national reconciliation and a programme of political, institutional and constitutional reform aimed at addressing their grievances and preventing a return to armed conflict.

The meeting was conducted in a spirit of openness, mutual respect and constructive debate.  The representatives expressed their full commitment to unity and to a common forum to seek a just and durable political solution. The participants obtained important clarifications and achieved common understanding. They also pledged commitment to continue their discussions in the interest of achieving full respect for the rights of the Tamil-speaking peoples and to building a peaceful, dynamic and prosperous society.

Among the issues discussed were shared concerns of the long, medium and short-term.  These included an in depth discussion on the evolution of an acceptable, inclusive political solution to the conflict. Also discussed were principles for and solutions to urgent matters such as the situation of internally displaced persons, Muslim IDPs, detainees and the disappeared, demilitarisation and the rule of law.  Also discussed was the urgent need for the facilitation of voluntary return of all internally displaced persons to their homes and land in conditions of safety and dignity, and to expeditiously provide for their housing and livelihood requirements under competent and independent civilian supervision. 

At the end of the conference, the participating political parties issued the following joint statement:

Joint Statement

We, the representatives of the political parties of the Tamil-speaking peoples unanimously:

Affirm the historic meeting enabling an exchange of views, and express a full commitment to a common forum among representatives of all Tamil-speaking peoples

Recognize ‘Tamil-speaking peoples’ comprise three distinct peoples: Tamils, Muslims, and Tamils of Indian origin

Respect the distinct and separate identities, interests and positions of the parties

Recognize and affirm the need for unity and consensus among the Tamil-speaking peoples while acknowledging differences with regard to some issues and the paths to pursue them

Commit to the engagement by all segments of society towards a just and durable political solution through a dignified, respectful and peaceful process;

Agree and commit to continuing our dialogue.

Names:

Mr. Veerasingham Anandasangaree, Tamil United Liberation Front

Mr. Periyasamy Chandrasekaran, Up-Country Peoples Front

Mr. Douglas Devananda, Eelam People’s Democratic Party

Mr. Abdul Rauff Hakeem, Sri Lanka Muslim Congress

Mr. Mohamed Hizbullah, All Ceylon Muslim Congress

Mr. Mano Ganeshan, Democratic  Peoples Front

Mr. Kulasekaram Mahenthiran, Tamil Eelam Liberation Organisation

Mr. Sivasubramaniam Nanthakumar, Eelam Revolutionary Organisation of Students

Mr. Gagendrakumar Ponnambalam, All Ceylon Tamil Congress

Mr. Suresh Premachandran, Eelam People’s Revolutionary Front

Mr. R. Sampathan, Tamil National Alliance

Mr. Sivanesathurai Santhirakanthan, Tamil Makkal Viduthalai Pulikal

Mr. Mavai S. Senathirajah, Ilankai Tamil Arasu Kadchi

Mr. Dharmalingam Sithadthan, People’s Liberation Organisation of Tamil Eelam

Mr. Thirunavukarasu Sritharan, Pathmanabha Eelam Peoples‘ Revolutionary Liberation Front

Mr. Arumugan Thondaman, Ceylon Workers Congress

Tamil Information Centre
Thulasi
Bridge End Close
Kingston Upon Thames KT2 6PZ
(United Kingdom)

Telephone: +44 (0)20 8546 1560    +44 (0)20 8546 1560
Fax: +44 (0)20 8546 5701
E-mail: admin.tic@sangu.org
Related Articles:

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

”மக்கள் எம்மோடுதான் இருக்கிறார்கள். ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்” கிஷோர் : பி.வீரசிங்கம்

kishoor.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.

சிவநாதன் கிஷோர் வன்னி மாவட்ட மக்களைப் பொறுத்தவரையில் நன்கு அறிமுகமானவர். வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் சமாதான நீதவானாகவும் மக்களால் அறியப்பட்டவர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளைத் தலைவராகவும், வடக்கு கிழக்கு இணைப்பாளராகவும், கொழும்பு ஆளுநர் சபையில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஓரேயொரு தமிழ் உறுப்பினராகவும், வவுனியா ரோட்டரி கழகத் தலைவராகவும் இருந்தவர். போர்ச் சூழல்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றியவர்.

கேள்வி: பொதுச் சேவையில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிர்கள். அரசியலில் பிரவேசிப்பதற்கான காரணம் என்ன?

பதில்: கடந்த 14 வருடங்களுக்கு மேலாக மக்களுக்காக சேவையாற்றி வருகிறேன். யுத்த காலத்தில் போக்குவரத்து செய்ய முடியாதிருந்த போது செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு உதவிகளைச் செய்தேன். இந்நிலையில் 2004ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு மக்களுக்கான எனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறேன்.

மே மாதம் 19ம் திகதிக்கு முன்னர் ஒரு கஷ்டமான நிலையில் எதையும் செய்ய முடியாதிருந்தது. கஷ்டங்களுக்கு மத்தியில் சேவையாற்றினேன். இப்போது நிலைமைகள் மாறியுள்ளன.

கேள்வி: நிவாரணக் கிராமங்களுக்கும் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் நீங்களும் இடம்பெற்றிருந்தீர்கள். தற்போது அங்கு நிலைமைகள் எப்படியிருக்கின்றன?

பதில்: வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்கள் இடம்பெயர்ந்த அவ்வேளையில் ஜனாதிபதியையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து அவர்களைச் சென்று பார்ப்பதற்கு அனுமதி கோரினேன். அவர்களும் அனுமதியளித்தார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்போதுதான் முதல் தடவையாக முகாம்களைப் பார்வையிட்டுள்ளது.

இந்தளவு தொகையில் மக்கள் இடம்பெயர்ந்து வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை. மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்ததால் அங்கு இடநெருக்கடி, உட்பட பல பிரச்சினைகள் அப்போது காணப்பட்டன.

இந்தத் தடவை சென்று பார்த்த போது நிலைமை முற்று முழுதாக மாறியிருக்கிறது. மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையை அரசாங்கம் செய்து வருகிறது. இதனால் இடப்பிரச்சினை இல்லை. குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறார்கள். எது எப்படியிருப்பினும் இருக்கும் அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமென்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.

கேள்வி: மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன?

பதில்: அரசாங்கம் இவ்வளவு விரைவில் மக்களை மீளக்குடியமர்த்தும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கொடுத்த அழுத்தங்கள், அவர்களுடன் அடிக்கடி நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக துரிதமாக மக்கள் மீளக்குடியமர்த்தப் படுகிறார்கள் என அறிகிறேன். தை மாதம் 30ம் திகதிகளிடையில் எஞ்சிய மக்களை மீளக்குடியமர்த்தப் போவதாக கூறியிருக்கிறார்கள். அது நல்ல விடயம்.

அந்த மக்களுக்குப் பல தேவைகள் இருக்கின்றன. உயிர், உடைமைகளை இழந்து வந்திருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் புது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். தங்களது புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கட்டம் இது. இப்போது முகாமிலிருந்ததை விட மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மீள்குடியேறுவோருக்கு இருபத்தையாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக ஐயாயிரம் ரூபா, வங்கிக் கணக்கில் இருபதாயிரம் ரூபா இடப்பட்டுள்ளது. அது போதாது, என்றாலும் இது தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவிடம் பேசிய போது மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதி யான வீடுகளை வெகுவிரைவில் நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். முதலில் அவர்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் படிப்படியாக அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உதவி செய்வதாக அவர் கூறினார்.

கேள்வி: மீள்குடியேறிய மக்களை சந்தித்தீர்களா?

பதில்: மக்கள் தங்களுடைய வீட்டிற்குச் சென்று கஞ்சியை குடித்தாலும் சந்தோஷமாக இருப்பார்கள். முகாம்களில் என்னதான் பிரியாணியை கொடுத்தாலும் அது குறைவாகவே இருக்கும். மீளக்குடியேறிய மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

கேள்வி: அந்த மக்களின் மனநிலைகள் எப்படியிருக்கிறது?

பதில்: கடந்த 33 வருடங்களாக அந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பல இழப்புகளை சந்தித்தவர்கள். பல கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்தவர்கள். உறவுகளை உடைமைகளை இழந்து அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்வதென்பது சாதாரண விடயமல்ல. என்றாலும் தாம் உயிர் தப்பியிருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

கேள்வி: அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

பதில்: அரசாங்கம் அகதிகள் விடயத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் வரவேற்கக் கூடியது என்றே கூற வேண்டும். என்றாலும் இன்னும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அனைத்தும் நன்றாக இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.

ஐந்து, பத்து வருடங்கள் முகாமில் இருக்கப் போகிறோம் என்றிருந்த மக்களை மீளக்குடியமர்த்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

தொண்ணூறில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் வவுனியா, பூந்தோட்டம் பகுதி முகாம்களில் இருக்கின்றனர். அவற்றுடன் ஒப்பிடுகையில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவது என்பது பெரிய விடயமே! நான் எதைப் பார்த்தேனோ அதையே பீறினேன். சரி என்றால் சரியென்றுதானே கூற வேண்டும். அகதிகள் விடயத்தில் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானவையே.

கேள்வி: யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் பல விதத்திலும் நொந்து போயிருக்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசுவதென்பது சாத்தியமா?

பதில்: இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசுவதற்கு இது நேரமல்ல. மக்கள் முற்று முழுதாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். சொந்த இடங்களில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் மேம்பாடடைச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக நீடீத்த இந்த யுத்தம் ஒரு முடிவு மில்லாமல் போய்விட்டது. இனப்பிரச்சி னையின் தீர்வுக்கான தீர்வுத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

எம்மைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வென்ற பின்னர் ஒரு முடிவை எடுப்பார். நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றை கொடுக்க வேண்டுமென பல தடவைகள் கூறி வந்திருக்கிறார். பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனம் என்றில்லை என பகிரங்கமாக கூறியிருக்கிறார். எங்கு சென்றாலும் தமிழ் மொழியிலும் உரையாற்றுவது நல்லதொரு விடயம். இதனை செயலிலும் அவர் காட்டுவார் என நம்புகிறோம். யுத்தம் முடிந்து நாடு சுமுகமானதொரு நிலைக்கு வந்திருக்கிறது. ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இந்த இனப்பிரச் சினைக்கு ஒரு தீர்வைக்காண முடியுமென நம்புகிறேன்.

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் கூட்டமைப்பின் பலம் எவ்வாறு இருக்குமென கருதுகிர்கள்?

பதில்: மக்கள் எம்மோடுதான் இருக்கிறார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் எல்லாவற்றையும் இழந்திருந்த போது உள்ளூராட்சி தேர்தல் வந்தது. இதனை ஒரு பரீட்சார்த்தமாகவே அரசாங்கம் நடத்தியது. வவுனியா நகர சபைக்கு யாழ். மாநகர சபைக்கும் என நடத்தப்பட்ட தேர்தலில் நாங்கள் வவுனியா நகர சபையை வென்றோம். யாழ். மாநகர சபையையும் வெல்லக்கூடிய நிலை இருந்தது. மக்கள் வாக்களித்திருந்தால் அது பெரிய வெற்றியாக இருந்திருக்கும். அப்படியிருந்தும் எட்டு ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தோம். இது எங்களுக்குப் பெரிய வெற்றி என்றே கருதுகின்றோம்.

கேள்வி: கடந்த காலங்களைப் போலவே யுத்தம் முடிவடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தற்போதும் தமிழ் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதாகத் தெரியவில்லையே?

பதில்: கடந்த காலங்களில் பல குழுக்களாகப் பிரிந்து நின்றாலும் ஒரு குறிக்கோளுடன் போராடினர். பின்னர் அவர்களுக்குள் இன்னும் பல குழுக்களாகப் பிரிந்து சண்டைகள், கொலைகள் எல்லாம் நடந்துமுடிந்து விட்டன. மே 19ம் திகதிக்குப் பின்னர் நாங்கள் பல தடவைகள் பேச்சுக்களை நடத்தினோம். ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினோம். எமது மக்கள் ஒன்றாக இருந்த வரலாறு இல்லை. எமது முயற்சி களைக் கைவிட வில்லை. அனைவரும் ஒன்றிணைந்தால் பலமாக இருக்கும். அதற்கான காலம் வெகு விரைவில் வரும் என்றே நினைக்கின்றேன்.

கேள்வி: தேசிய அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாததன் காரணமாக தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணைந்து தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக் கைகளை முன்னெடுக்க முடியாதிரு ப்பதாக கருத்து நிலவுகிறது. தேசிய அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளா திருப்பதற்கான காரணமென்ன?

பதில்: எமது அரசியல்வாதிகள் மத்தியில் இவ்வாறான நிலை இருப்பது உண்மைதான். அரசின் பக்கம் போனால் மக்கள் நிராகரித்து விடுவார்கள் எனக் கருதுகின்றனர். ஆனால் நான் பாராளுமன்றத் தேர்தலில் வந்ததன் பின்னர் அரசுடன் சேர்ந்து பல விடயங்களைச் செய்திருக்கிறேன். வவுனியா மாவட்டத்தில் ஒரு தாதியர் பயிற்சிக் கல்லூரியை கொண்டு வந்திருக்கிறேன். மன்னார் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, 150 ஏக்கர் நிலப்பரப்பில் வவுனியாவுக்கான வளாகத்தை நிறுவவும் அதனை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கடந்த காலங்களில் எமது மக்கள் கைது செய்யப்பட்டு கொழும்புக்கும் அநுராதபுரத்திற்கும் கொண்டு செல்லப்பட்டனர். இப்போது வவுனியாவிலேயே நீதியமைச்சினால் கட்டப்பட்டுள்ள சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான வேலைகளை நாம் அவர்களுடன் இணைந்து தான் செய்ய முடிகிறது.

அவர்களுடன் பேசி நல்ல விடயங்களைச் செய்யலாம். அதற்கு அவர்கள் முழு ஆதரவையும் செய்திருக்கிறார்கள். தெற்கிலுள்ள அரசியல் தலைமைகளுடன் இணைந்து ஒரு உறவுப் பாலம் அமைக்க வேண்டியது அவசியமாகும்.