சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்

commander.jpgமுன்னாள் இராணுவ தளபதியும், கூட்டுப்படை தலைமையதிகாரியுமான, சரத் பொன்சேகா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் படைத்தளபதியான தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும், உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.
 
சரத் பொன்சேகா, பதவியில் இருந்த போது அவருக்கு சுமார் 750 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் அந்த பாதுகாப்பு தற்போது 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், அவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *