November

November

முஸ்லிம் சமூகத்தை ஏளனம் செய்த பொன்சேகா வெட்டும் குழியில் எவரும் வீழ்ந்து விடவேண்டாம் அலவி மௌலானா கோரிக்கை

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்றும் நாட்டின் நிருவாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்று முஸ்லிம் சமூகத்தை அவமதித்து ஏளனம் செய்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா என கண்டனம் தெரிவித்திருக்கும் மேல்மாகாண ஆளுநர் அலவிமௌலானா அவரால் வெட்டப்படும் குழியில் எவரும் விழுந்து விடக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

தற்போது உருவாகியுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் மக்களின் கவனத்துக்கென ஆளுநர் அலவிமௌலானா ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது நமது நாட்டில் நடந்து முடிந்துள்ள யுத்தத்தினாலும், பல்வேறுபட்ட பொருளாதாரச் சிக்கல்களினாலும் திணறிக்கொண்டிருக்கும் எமது மக்கள் இன்று படிப்படியான முன்னேற்றங்களை கண்டு வருகின்றனர். சமூகங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இனவாத வித்துக்களைக் களைந்து ஒரே நாடு ஒரே மக்கள் என்ற விழிப்புணர்விற்கான செயற்திட்டங்களை அரசு முனைப்புடன் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் முன்னேற்றத்தில் சிந்தித்தேனும் அக்கறை கொள்ளாத சக்திகள் மீண்டும் மக்களை குழப்பி சதிசெய்து, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றக் கனவு கண்டு கொண்டிருக்கிறது. மக்களாகிய நீங்கள் இந்த சதி வலையில் சிக்கிக் கொள்ளாது சதிகாரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் உங்கள் வசம் மிக விரைவில் வந்தடையும்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறிது காலத்துக்கு முன்பு வெளியிட்ட கருத்து சிறுபான்மை மக்களிடையே பெரும் மனக் கிலேசத்தினை ஏற்படுத்தியதை நாம் மறந்து விடமுடியாது. அவர் படைத் தளபதியாக இருந்த காலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்று ஏழ்மை செய்தார். அவர்கள் நிர்வாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்றும் அவதூறு செய்தார். இவர் வெட்டிய குழியில் எவரும் விழுந்து விடக்கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற ரவூப் ஹக்கீம், மனோகணேசன் போன்றவர்களும் அதிருப்தி அடைந்தவர்களாக அன்று காட்டமான அறிக்கைகளை விட்டிருந்தனர் என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்குமான ஆக்கபூர்வமான கருத்துகளை இவர்களினாலும் இன்னும் முன்வைக்க முடியாமல் உள்ளது. எவ்வழியிலேனும் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டால் போதும் என்ற மனப்பான்மையை எதிர்க்கட்சிகளிலும், சுயநலத் தலைவர்களிடத்தும் மேலோங்கி இருப்பதை அறிவு சார்ந்த மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு,மேற்கு என்ற புவியியல் கோடுகளை களைந்து நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறும் காலம் உதயமாகியுள்ளது. சுதந்திர இலங்கையில் சமூகங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலுப்பெறச் செய்வதற்கும் நாடு எவரிடமும் தங்கி நிற்காது. பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைவதற்கும் நாட்டின் அனைத்து மக்களும் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற மனப்பான்மையோடு செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

2001 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசினால் பேசப்பட்ட போலி சமாதானத்தில் முஸ்லிம் சமூகத்தை மோசமாகக் கையாண்டதில் சிறுபான்மை மக்களிடையே பெருமளவிலான எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பை சமாளிக்கத் தக்க வகையில் முஸ்லிம் தரப்பை மூன்றாம் தரப்பாக்கி, ரவூப் ஹக்கீமை பேச்சு மேசைக்கு ஓட்டிச் சென்றதை ரவூப் ஹக்கீம் மறந்தே போய்விட்டார்.

புலிகளினால் முஸ்லிம் சமூகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த காலத்தில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நியாயத்தினை முதன்மைப்படுத்தி மர்ஹும் அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், ரணிலின் தலைமையை ஏற்றுக் கொள்ளவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டுக்குள்ளோ செல்லவேயில்லை. அவ்வாறு மர்ஹும் அஷ்ரப்பினால் ஒதுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டில் ஹக்கீம் சங்கமமாவதால் முஸ்லிம் சமூகம் என்ன நன்மையடையப் போகிறது? என்பதை ஹக்கீம் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்லாதிருப்பது ஏன் என்பதை முஸ்லிம் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் நன்மைகளை விட திரைமறைவில் மோசமான கழுத்தறுப்புகள் நடத்தப்பட்டதை இங்கு பட்டியலிடலாம். துயரம் என்னவென்றால் ஹக்கீம் கோடரிக் காம்பாகி இருப்பதுடன் தனது சுயநல அரசியலுக்காக முஸ்லிம்களை கறிவேப்பிலையாக்கிக் கொண்டிருப்பதேயாகும்.

சியோனிசக் கதிரையில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களை இன்று முஸ்லிம்கள் நன்கு இனம் கண்டு வைத்துள்ளனர். வரலாறு இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்பதை இவர்கள் மறந்து விடக்கூடாது.

நடிகை மாலினிக்கு பெருவரவேற்பு

malini.jpgஇத்தாலியின் லெவன்ட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கு கிடைத்த விருதுடன் நடிகை மாலினி பொன்சேகா நேற்று இலங்கை வந்துசேர்ந்தார். அவரை வரவேற்பதற்காக சக நடிக, நடிகையர் பலரும் திரையுலக பிரமுகர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதான கேயின் ‘ஆகாசகுசும்’ (ஆகாயப் பூக்கள்) திரைப்படத்தில் நடித்தமைக் காகவே மாலினி பொன்சேகா வுக்கு இந்த விருது கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவில் இதே படத்துக்காக சிறந்த நடிகை விருதை மாலினி பெறுவது இது இரண்டாவது தடவையாகும்.

நாளை நடப்பதை யார் அறிவார்? பிரதமராவது பற்றி ராகுல் காந்தி கருத்து

19rahul.jpgவருங்கால பிரதமராக தன்னை நினைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எவராலும் கணிக்க முடியாது. அப்படியிருக்க வருங்கால பிரதமராக எப்படி என்னை நினைக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். விஜயவாடாவில் புதன்கிழமை கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். அப்படியிருக்கையில் தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம் என்றார். தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். சிறந்த பிரதமர் நிறைவேற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்” என்றார்

திருகோணமலையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தமிழ்ப்பிரிவு அலுவலகம் திறப்பு விழா

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் திருகோணமலை அலுவலகம் நாளை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட உள்ளது

செல்வநாகபுரம் பிள்ளையார் வீதியில் அமையவுள்ள சுதந்திரக்கட்சியின் தமிழ்ப்பிரிவு அலுவலகம் நாளை 19ம்திகதி மாலை 3.30 தணிக்கு ஆரம்பித்து வைக்கப்படும். கட்சி காரியாலயம் தேசநிர்மான அமைச்சரும் திருமலை சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமாகிய திரு புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண அமைச்சர் திரு நவரத்தினராசா உட்பட வேறு முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த காரியாலயத்தை முன்னாள் சிறீரெலோ உறுப்பினர்களான சிவம் மற்றும் அவரது தோழர்களால் நிர்வகிக்கப்படும். சுதந்திரக்கட்சியின் திருகோணமலை தமிழ்ப்பிரிவு அமைப்பாளராக திரு கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரன் (சிவம்)செயற்படவுள்ளார். நாளை முதல் திருகோணமலைப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் சமூகப்பிரச்சினைகள் கடந்த 30 வருடங்களாக கவனிக்கப்படாத மற்றும் உருவான பிரச்சிகைளுக்கும் இந்த காரியலயத்தில் பொறுப்பு எடுக்கப்பட்டு அதற்கான உதவிகள் வழங்கப்படும் எனவும் அமைப்பாளரான சிவம் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகம் நாளை சைவ முறைப்படி ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை சுவிஸ்ல் நடைபெவுள்ள மாநாட்டில் சிறிரெலோவின் சார்பாக லண்டனில் இருந்து சிலர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அடைமழை – நாடெங்கும் வெள்ளம்.

021009monsoon-rains.jpgநேற்றிரவு பெய்த அடை அழையால் நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது புறக்கோட்டை, மருதானை, மாளிகாவத்தை, மகரகம, தெஹிவளை, கடுவெல ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இவை தவிர நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையைப் போன்றே கொழும்பில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததாகவும், ரத்மலானையில் 210 மிமீ., கொழும்பு மாநகரப் பகுதியில் 207மிமீ., கண்டியில் 93 மிமீ. மழை பதிவாகியுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

புலிகள் எடுத்த அவசர முடிவுகளே இன்றைய விளைவுகளுக்குக் காரணம் – கருணாநிதி

karunanidhi.jpgவிடு தலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று முதல்வர் கருணாநிதி  கூறியுள்ளார் .

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ள கட்டுரை பின்வருமாறு

ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய குரலும் – இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் – நடத்திய அறப்போராட்டங்களும் – சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் – சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்த நிலைகளும் – ஏன்; இருமுறை ஆட்சியையே இழந்த சரித்திரச் சம்பவங்களும் –

தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள்; செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும் –

“டெசோ” இயக்கத்தின் சார்பில் – நானும், தமிழர் தலைவர் வீரமணியும், பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து; 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணிய சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டிற்கு பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு போராளிகளிடையே அடிக்கடி எழும் புயல் குறித்து விவாதித்து; அதனை நிறுத்த சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள் என்பதும்,

ஆனால் அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் தான் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை என்பதும்;

அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை இந்தியாவிற்கு திரும்பி வந்ததை வரவேற்க செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வும் – இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் விடுதலைப் படைமுகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு – தளபதிகளுக்கு – தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன் படுத்திய அளவுக்கு; இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்.

எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ; என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்தபோது கூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றதையும் – நடைபெற்றதற்கான காரணத்தையும் – நான் அல்ல; என்னைப் போன்றவர்கள் அல்ல; இதோ மவுன வலி உணர்ந்து, அதனை நமக்கு உரைக்கும் அருமை நண்பர்களாம், தமிழ் எழுத்தாளர்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தன்மானத் தோழர், கோபாலுக்கு; அண்மையில் சென்னைக்கு வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இன்றைய இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே 18-11-2009 தேதியிட்ட நக்கீரன் வார இதழுக்காக அளித்த பேட்டியில்,

“இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன். 2003-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார்.

2005-ல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.

மேலும் 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்; பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்.”

என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்;

டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்;

பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்தும்;

தொடக்க காலத்திலிருந்து போராளிகளின் துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் இந்த நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக பலியாக்கியும்;

டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம்தம்பிமுத்து, கலாதம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும், மரணக் குழியிலே தள்ளியும்;

தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்தப் போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது.

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. இலங்கையில் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் – 9-4-2004 அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் – பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும், 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக – நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டது மாத்திரமல்ல – முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் – நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் – நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களை இழந்த அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சைகளாக, பராரிகளாகச் செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையைத் தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரனின் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதி தான் என்ன? இப்படி எத்தனை குடும்பங்கள்? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து – தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் – தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுத நேரிட்டது. வாழ வேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் இதனை எழுதுகின்றேன்.

என்னையும், மாறனையும் 15-3-1989 அன்று; அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து – விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப் பிரச்சினை குறித்தும் இரண்டு நாள் உரையாடி – அதுபற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்கு தெரிவித்து – நீங்களும், மாறனும், வைகோவும் தேவைப்பட்டால் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு – பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து விரிவாகப் பேசுங்கள், எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள், இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை நான் இங்கிருந்து செய்து தருகிறேன், அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்ன என்பதை விவரமாகத் தெரிந்து கொள்ளுங்கள், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் – என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அந்த சம்பவமும் ஈழ விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்பதை உலகம் மறந்து விடவில்லை.

இதோ ஒரு நிகழ்ச்சி. 17-11-2005 அன்று இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 13 பேர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் முக்கியமாக போட்டியிட்டார்கள். அந்த தேர்தலை சிறுபான்மையினரான தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப்புலிகள் அறிவுறுத்தினர். அந்த தேர்தலின்போது, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார் ரணில். அப்போது ரணில் சொன்னதைத் தான் இப்போதும் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியிலும், “2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2005-ம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில், இலங்கையின் ஐந்தாவது அதிபராக, பிரதமராக இருந்த ராஜபக்சே வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது – விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருணாநிதி வேதனைக்கு என்ன காரணம்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு தரப்பினரும் ஈழம் குறித்த தங்களது கருத்துக்களைக் கவிதைகளாக பதிவு செய்துள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் முதல்வர் கருணாநிதி தனது வேதனையை வெளிப்படுத்தி தற்போதைய கடிதத்தை முரசொலியில் எழுதியுள்ளார்.

யாழ் கொழும்பு பயணத்துக்கு இன்று முதல் அனுமதி தேவையில்லை! வடமாகாண ஆளுநர்

chandrasiri_governer.jpgயாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்புப் பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவை தேவையில்லை எனவும்  வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பாதுகாப்புப்பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதென,  வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார். அதன்படி இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த கிளியரன்ஸ் நடைமுறை புதன் கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழிலிருந்து கொழும்ப செல்வோர் தமது அடையாள அட்டையின் மூன்று போட்டோப் பிரதியினை காண்பித்துக் கொழும்பு செல்ல முடியும்.

மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் கனரக வாகனங்கள்; நாவற்குழி அரச களஞ்சிய சாலையில் அனுமதியினைப் பெற்று வாகனத் தொடர் அணியுடன் கொழும்பு செல்ல முடியும்” என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பிறந்த நளையும்  ஜனாதிபதியாகப் பதவியேற்று நான்கு வருடப் பூர்த்தியையும் முன்னிட்டு யாழ் பிரதேச மக்களுக்கு வழங்கும் பரிசாக  இந்தத் தடையை நீக்க அனுமதித்துள்ளார் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை அணி முன்னிலையில் – மஹேல இரட்டை சதம்

mahela-jayawardene.jpgஇலங்கை – இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களைப் பெற்று மூன்றாவது நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

ஸ்கோர் விபரம் வருமாறு

Sri Lanka in India Test series – 1st Test
India 426
Sri Lanka 591/5 (160.0 ov)
Stumps – Day 3

Sri Lanka 1st innings R M B 4s 6s SR
TM Dilshan  c Dravid b Khan  112 
 NT Paranavitana  c †Dhoni b Sharma  35 
 KC Sangakkara*  c Tendulkar b Khan  31 
 DPMD Jayawardene  not out  204 
 TT Samaraweera  c Yuvraj Singh b Sharma  70 
 AD Mathews  c Gambhir b Harbhajan Singh  17 
 HAPW Jayawardene†  not out  84  
 Extras (b 5, lb 13, w 3, nb 17) 38     
      
Total (5 wickets; 160 overs) 591 (3.69 runs per over)
To bat KTGD Prasad, HMRKB Herath, M Muralitharan, UWMBCA Welegedara 
Fall of wickets1-74 (Paranavitana, 16.5 ov), 2-189 (Dilshan, 43.1 ov), 3-194 (Sangakkara, 45.3 ov), 4-332 (Samaraweera, 86.4 ov), 5-375 (Mathews, 96.2 ov) 
        
 Bowling
 Z Khan 30 4 93 2 
 I Sharma 28 0 108 2
Harbhajan Singh 39 3 151 1
 A Mishra 43 6 152 0 3. 
 Yuvraj Singh 13 1 49 0 
 SR Tendulkar 7 0 20 0

ஆசிரியர் வழிகாட்டி கைநூல்கள்; 20 ஆம் திகதி முதல் விநியோகம் – கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நடவடிக்கை

261009school_child_dp.jpgஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவசப்பாடப் புத்தகங்கள் இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலவசப் பாடப்புத்தகங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக மட்டத்தில்  விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   
தரம் 12இல் கற்பிக்கவுள்ள ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு,  தயார் செய்து கொள்ள வசதியாக ஆசிரியர் வழிகாட்டி  கைநூல்கள் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் என அச்சிடப்பட்டுள்ள ஆசிரியர் வழிகாட்டிகைநூல்கள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் சகல பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது. 

மீள்குடியேற்ற செயற்பாட்டுக்கு மேலும் ரூ. 75 கோடி – பாராளுமன்றத்தில் நேற்று குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

parliament.jpgமீள்குடி யேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு 75 கோடி ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட மேற்படி குறைநிரப்பு பிரேரணையை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் சர்ப்பித்துப் பேசினார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பேசும் போது:-

எமது அமைச்சு இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது. வடபகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள் 21 நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் துரித வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் மீளக் குடியர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேரே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் 12 நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர். இவர்களும் விரைவில் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர். இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மீளக்குடியமர்த்தும் போது 25 ஆயிரம் ரூபா வழங்குகின்றோம். அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்குரிய உலர் உணவு, விவசாயம், மீன்பிடித் தொழில் என்பவற்று க்கான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் சொந்த இடங்களில் மீளக்குடியமரக் கூடிய வாய்ப்பு 19 வருடங்களின் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை யிட்டு வட மாகாண முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிக்கடன்பட்டவர்களாக உள்ளனர். வெளியேற்றப்பட்ட வவுனியா முஸ்லிம்கள் ஏற்கனவே அவர்களது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர் என்றார்.