நேற்றிரவு பெய்த அடை அழையால் நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது புறக்கோட்டை, மருதானை, மாளிகாவத்தை, மகரகம, தெஹிவளை, கடுவெல ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இவை தவிர நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையைப் போன்றே கொழும்பில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததாகவும், ரத்மலானையில் 210 மிமீ., கொழும்பு மாநகரப் பகுதியில் 207மிமீ., கண்டியில் 93 மிமீ. மழை பதிவாகியுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.