2010

2010

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 12 அகதிகள் பலி

இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 12 அகதிகள் பாதகமான காலநிலை காரணமாக கடலில் மூழ்கி காணாமல் போய் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

அவர்களில் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களெனவும், அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படும் நோக்கில் பெரிய கப்பலில் இருந்து மீன்பிடி படகுக்கு மாற்றும் போது ஏற்பட்ட பாதகமான காலநிலை காரணமாக அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர்களிடமிருந்து பணம் வசூல்; 5 உத்தியோகத்தர்கள் வேலை நீக்கம்

வர்த்தகர்களிடம் சட்ட விரோதமாக பணம் வசூலித்த குற்றத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஐந்து உத்தியோகத்தர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி ஐவரையும் உடனடியாக வேலை நீக்கம் செய்யுமாறு கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகார சபைத் தலைவர் ரூமி மர்சூக்கைப் பணித்துள்ளார். மேற்படி ஐவரும் அநுராதபுர மாவட்டத்தின் பதவிய சிறிபுர, பராக்கிரமபுர மற்றும் கெப்பித்திகொல்லாவ பகுதிகளில் வர்த்தகர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலித்துள்ளனர்.

இவர்களை பதவிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் உத்தியோக த்தர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பின் அதிகார சபை அவர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இவர்கள் வவுனியாவிலுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபைக் கிளையில் பணிபுரிந்தவர்களாவர்.

மைதானத்தில் கடும் இரைச்சல் : உவுசலா தடை செய்ய பீபா ஆலோசனை

ftfa.jpgமைதா னத்தில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் தென்ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக்கருவியான உவுசலாவுக்கு தடை விதிக்க ‘பீபா’ ஆலோசித்து வருகிறது.

 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக்கருவியான உவுசலாவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எடுத்து வருகின்றனர். மைதானத்தில் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஊதித்தள்ளும் போது கடும் இரைச்சல் ஏற்படுகிறது என்று டி.வி.ஒளிபரப்பாளர்களும் வீரர்களும் புகார் செய்தனர்.இதனால் உவுசலாவுக்கு தடை விதிக்க ‘பிபா’ ஆலோசித்து வருகிறது.

இது குறித்து உலக கோப்பை போட்டிக் குழு தலைவர் டேனி ஜோர்டான் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் ”உவுசலா பற்றி புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் ரசிகர்களின் உற்சாகத்தை குறைக்கும் முடிவுகள் எடுப்பதில் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.

நூல்களின் வரவு இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்ப அடித்தளமாகும் – தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் மத்தியில் ஜனாதிபதி

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான நூல்களின் வரவானது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக அமையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் எழுத்தாள ர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் சாகித்திய நூல்கள் நேற்று ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டன. அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல்களைக் கையேற்று உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

மக்களின் மொழியூடான அறிவு வளர்ச்சியானது இனங்களுக்கிடையில் அன்னியோன்ய புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதுடன் அதன் மூலம் அமைதியான அபிவிருத்தி நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது தமிழ், சிங்கள மொழி மூலமான 17 நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும, லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார ஆகியோர் கலந்து கொண்டதுடன் எழுத்தாளர்களான தெனகம சிறிவர்தன தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, திக்குவல்லை கமால், ஏ.கே.ஏ. ரஸாக், பத்மா சோமகாந்தன், ரவி ரத்னவேல், மொகமட் ராசிக், எஸ்.அரியநாதன், எல்.டீ.எஸ். உபயரத்ன, வஜிர பிரபாத் விஜேசிங்க, டெனிசன் பெரேரா, அமரசிங்க குடகல்ஆர, மடுளுகிரிய விஜேரத்ன, உபாலி லீலாரத்ன, எம்.எல்.விதான பதிரண, சிறிசுமன கொடகே, கமல் பெரேரா ஆகியோர் தம்படைப்புகளை ஜனாதிபதிக்கு கையளித்தனர்.

காதலியின் கணவரைக் குத்திக் கொன்ற இலங்கை இளைஞருக்கு மரணதண்டனை

கொலைக்குற்றத்திற்காக ஆயுள்தண்டனை வழங்கிய இலங்கையரொருவருக்கு டுபாயின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது. தனது காதலியின் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈசா ஷெரீப் மரணதண்டனை வழங்கித் தீர்பளித்துள்ளார்.

இச் சம்பவத்தில் பலியானவரும் இலங்கையராவார். நீதிமன்றம் ஏப்ரல் 5இல் பிரதிவாதிக்கு ஆயுள்தண்டனை வழங்கியதுடன் அதன்பின்னர் அவரை நாடுகடத்தும் தீர்ப்பையும் வழங்கியிருந்தது. பிரதிவாதி இறந்தவரின் மனைவியுடன் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் அவரைக் கொலைசெய்ய திட்டமிட்டிருந்ததாகவும் நம்பப்பட்டது. கணவன் அவரின் காதல் வாழ்வுக்குத் தடையாக இருந்ததால் அவரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாக நம்பப்பட்டது. கடந்த வருடம் பெப்ரவரி 26 இரவு அவரை பல தடவைகள் குத்தியதாகவும் உடலின் பலபகுதிகளில் காயமேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர் அன்றைய இரவு இரத்தவெள்ளத்தில் காணப்பட்டதாக பொலிஸ் அதிகாரி விசாரணையாளர்களுக்கு கூறியுள்ளார். அச்சமயம் அங்கிருந்த மனைவியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது தனது கணவனை ஆபிரிக்க மனிதர் ஒருவர் குத்தியதாக அப்பெண் கூறியுள்ளார். வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது வழியில் குத்தியதாக அப்பெண் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பெண் உடனடியாகவே தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டதாகவும் பிரதிவாதி தனது கணவரைக் குத்தியதாகவும் பின்னர் அவர் தெரிவித்துள்ளார். பிரதி வாதி தான் வேலை செய்யும் இடத்தில் தொழில் பார்ப்பவர் என்றும் அப்பெண் கூறியிருந்தார். குத்தியதற்குக் காரணம் பொறாமை என்று அவர் தெரிவித்துள்ளார். பின்னர் பிரதிவாதியை பொலிஸார் கைது செய்தனர்.

இந்தக் குற்றச்செயல் நடந்த இடத்தில் அன்றைய இரவு இருந்த டக்ஸி சாரதி கூறுகையில்; அல்யாப்ரியா பகுதிக்கு ஆட்களை தான் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இரண்டு ஆண்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும் பெண்ணொருவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததையும் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர்களிலொருவர் மற்றவரை அவர் கீழே விழும் வரை குத்தினார். மற்றவர் மார்பில் குத்திக் கொண்டிருந்தார் என்று சாரதி தனது சாட்சியத்தின் போது தெரிவித்ததாக கலீஜ் ரைம்ஸ் தெரிவித்தது.

யாழ்ப்பாணத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை!

School_Girlsயாழ்ப் பாணத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களின் செயல்களைக்  கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீதியில் செல்லும் இளம்பெண்கள் குறிப்பாக, பாடசாலை மாணவிகள், தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் ஆகியோரிடம் தகாத முறையில் சில இளைஞர்கள் நடந்து கொள்ளும் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமை தொடர்பாக பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

மாணவிகள் பாடசாலைகளுக்குச் செல்லும் வேளைகளிலும், பாடசாலை விட்டு வீடு திரும்பும் வேளைகளிலும் வீதிகளில் நின்று சே~ட்டைகளின் ஈடுபடும் இளைஞர்களின் செயற்பாடுகள் அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கட்டாக்காலிகள் போல் திரியும் இளைஞர் குழுக்கள் பல வீதிச் சண்டைகளில் ஈடுபடுவதையும் காணக் கூடியதாகவுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள வீதிகளில் பொலிஸார் தற்போது அதிகளவில் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதே வேளை, குடாநாட்டில் முறையான ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரங்களின்றி வாகனங்களைச் செலுத்துவோர் மீதும் பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வன்னி, யாழ்ப்பாணத்திற்கு ஜே.வி.பியினர் மூன்று நாள் விஜயம்.!

Chandrasekaran JVPஜே.வி.பி கட்சியின் குழுவினர் June 14 2010 வன்னிப் பகுதிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்வையிட்டுள்ளனர். ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர் சந்திரசேகரன், பிமல் ரட்ணாயக்க உட்பட்ட குழுவினர் இதில் அடங்குகின்றனர். வன்னியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்சினைகளை ஜே.வி.பியனரிடம் கூறி கண்ணீர் வடித்ததாக ஜே.வி.பியின் தமிழ் உறுப்பினர் ஆர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமான இவர்களின் பயணம் மூன்று தினங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதோடு, யாழ்ப்பாணத்திற்கும் இவர்கள் பயணம் செய்யவுள்ளனர். வவனியா அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட தாம் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மின்சார பாவனை அகற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர்ப்பகுதியில்  இராணுவ மினி முகாம்களிலும், காவலரண்களிலும்  மின்மானி (மீற்றர்) பொருத்தாமல் பெறப்பட்ட மின்சார விநியோகம் அகற்றப்பட்டுள்ளன. நகர்ப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரிலேயே மின்சார சபை ஊழியர்களினால் இவை அகற்றப்பட்டுள்ளன. 

இராணுவத்தின் 522 ஆவது படையணியின் மக்கள் தொடர்பாடல் கூட்டத்தில் சட்டவிரோத மின் பாவனையால் சீரான மின் விநியோகத்தை வழங்க முடியாமை குறித்து மின்சார சபையின் சாவகச்சேரி மின் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்தே படையதிகாரியினால் இவற்றை அகற்ற மின்சார சபைக்கு பணிக்கப்பட்டது.  இதனையடுத்து இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 32 மின் தொடர்புகள் அகற்றப்பட்டன. இனிவரும் நாட்களில் சட்டபூர்வமாக மின்மானிகள் பொருத்தப்பட்டு குறித்த இடங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதே வேளை, தென்மராட்சிப்பகுதியில் சட்டவிரோத மின்சார பாவனையாளர்களை கண்டுபிடிக்கவும்  படைத்தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த முறையற்ற மின் பாவனையை படையதிகாரி உடனடியாக அகற்ற முன்வந்தமை ஒரு முன்மாதிரி நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் எதிர்கால செயல் திட்டங்களுக்கென இந்தியா 1250 மில். அமெரிக்க டொலர் நிதியுதவி

g.jpgஇலங்கை யின் எதிர்கால செயற்திட்டங்களுக்கென இந்தியா 1250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்குக் கிடைத்த பிரதிபலனாக இதனைக் குறிப்பிட்ட அமைச்சர்; ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் வடக்கில் ரயில் பாதைகள் நிர்மாணம் மற்றும் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளுக்கும் இந்நிதி உபயோகப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்க மளித்த அமைச்சர்; 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான செயற்திட்டத்தை மேற்கொள்வது டன் 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஓமந்தை-பளை, மடு-மதவாச்சி, மடு-பளை ஆகிய ரயில் பாதைகளே இந்நிதியில் நிர்மாணிக்கப்பட வுள்ளன. அத்துடன் சம்பூர் மின்சார நிலைய நிர்மாணிப்புக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் இந்தியா இலங்கைக்கு எதுவித அழுத்தத்தையும் வழங்கவில்லையெனவும் இலங்கை தனித்து தீர்மானமெடுப்பதையே இந்தியா விரும்புகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதேவேளை; இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியின் பயன் ஏனைய அயல்நாடுகளுக்கும் உபயோகமாக வேண்டும் என்பதே இந்தியப் பிரதமரின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பெற்ற 53 ஜோடிகளுக்கு பம்பைமடுவில் நேற்று திருமணம். விவேக் ஒபரோயும் கலந்து சிறப்பித்தார்

marage.jpgவவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ் வளிக்கப்பட்ட 53 ஜோடிகளுக்கு நேற்று அரச அனுசரணையில் திருமணம் செய்துவைக்கப்பட்டது. வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாம் மைதானத்தில் நேற்றுக் காலை இந்நிகழ்வு விமரிசையாக நடைபெற்றதுடன் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரிசாத் பதியுதீன், டியூ குண சேகர ஆகியோரும் கலந்துகொண்டு சாட்சிக் கையொப்பமிட்டனர்.

marage.jpgஇந்நிகழ்வில் பிரதியமைச்சர்களான டிலான் பெரேரா விஜித் விஜயமுனி சொய்ஸா, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பதிதிகளாகக் கலந்துகொண்டுள்ளதுடன் அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகள், மதத் தலைவர்கள், மணமுடித்த தம்பதிகளின் பெற்றோர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வைபவத்தின் போது 40 ஜோடிகளுக்கு இந்து மத முறைப்படியும் மேலும் 13 ஜோடிகளுக்கு கிறிஸ்தவ மத முறைப்படியும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதுடன் திருமணப் பதிவு சான்றிதழ்கள் உடனடியாகவே கையளிக்கப்பட்டன. புதுமணத் தம்பதிகளுக்குத் தலா 10,000 ரூபா வழங்கப்பட்டது இதனை கொழும்பிலிருந்து வருகை தந்த ஸ்ரீ அம்மா பகவானின் இயக்கத்தினர் வழங்கினர்.

இவர்களுக்கான வைப்புக்கணக்கு வவுனியா மக்கள் வங்கிக் கிளையில் ஆரம்பிக்கப்பட்டு இந்தப் பணம் அதில் வைப்பிலிடப்பட்டது.  ட்ரைஸ்டார் நிறுவனம் 53 ஜோடிகளுக்கும் கைக்கடிகாரங்களைப் பரிசாக வழங்கியதுடன் புதுமணத் தம்பதிகளுக்கு மேலும் பல பரிசுப் பொருட்களும் இவ்வைபவத்தின் போது வழங்கப்பட்டன. நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த புதுத் தம்பதிகளுக்கு தற்காலிகமாக தங்குவதற்கென தனித்தனி வீடுகளும் வழங்கப்பட்டன.

இத்திருமண நிகழ்வில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபரோயும் கலந்து சிறப்பித்தார். அவருடன் இலங்கையின் முன்னணி நடிகை அனோஜா வீரசிங்கவிடம் நடனப் பயிற்சிபெற்ற ஜோடிகளும் இணைந்து நடனமாடியமை திருமண வைபவத்தை மேலும் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது