ஜே.வி.பி கட்சியின் குழுவினர் June 14 2010 வன்னிப் பகுதிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்வையிட்டுள்ளனர். ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர் சந்திரசேகரன், பிமல் ரட்ணாயக்க உட்பட்ட குழுவினர் இதில் அடங்குகின்றனர். வன்னியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்சினைகளை ஜே.வி.பியனரிடம் கூறி கண்ணீர் வடித்ததாக ஜே.வி.பியின் தமிழ் உறுப்பினர் ஆர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமான இவர்களின் பயணம் மூன்று தினங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதோடு, யாழ்ப்பாணத்திற்கும் இவர்கள் பயணம் செய்யவுள்ளனர். வவனியா அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட தாம் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.