12

12

மடு வீதி; 24 மணி நேரமும் மக்கள் பாவனைக்கு- இராணுவப் பேச்சாளர் தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgமடு வீதி இன்று முதல்  24 மணி நேரமும் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நானாயக்கார தெரிவித்தார்.

மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க யாத்திரீகர்களுக்கு தடையின்றி மடு புனித தேவாலயத்துக்கு யாத்திரை மேற்கொள்ள இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

sampanthar.jpgஇலங்கை யின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி கட்சிகளின் கூட்டமைப்பு வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வவுனியா பிரதேசத்திற்கான தனது முதலாவது பரப்புரையை நேற்று ஆரம்பித்திருக்கின்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தமது முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நீண்ட உரையின் மூலம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விளக்கமளித்ததன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு நீதிமன்றம் பிணை

tissanayagam.jpgஇலங் கையில் இருபது வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்திபிணையில் செல்ல கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. .

திஸ்ஸநாயகத்தின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திற்கு கையளிக்க வேண்டுமென்றும் திஸ்ஸநாயகத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தவிர 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக திஸ்ஸநாயகம் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
 

விசாரணைகளின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார்கள்

வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவ ர்களும் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்ட மாஅதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார். எனவே தற்போது சிறைகளில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் தமது போராட்டத்தைக் கைவிடுமாறு சட்ட மாஅதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மிகக்குறைந்த எண்ணிக்கையிலானோருக்கே வழக்கு பதிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் சட்ட மாஅதிபர் கூறினார்.

சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அடங்கலாக சுமார் 600 பேர் வரை விடுதலை செய்யப்படவுள்ளதாகக் கூறிய அவர், கைதிகளின் விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். வழக்குகள் எதுவுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக 11 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழு ஆராய்ந்து வருகின்றது. இதன்படி மிகக் குறைவானோருக்கே வழக்குப் பதிவு அவசியமாகுவதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லையென சட்ட மாஅதிபர் கூறினார். நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் 577 பேர் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.  கொழும்பு மகசீன், சீ.ஆர்.பீ, வெலிக்கடை, யாழ்ப்பாணம், அநு ராதபுரம், கண்டி ஆகிய சிறைச் சாலைகளில் கைதிகள் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இவர் களுள் சிலர் தளர்வடைந்ததா கவும் அவர்களை மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் சிறைச் சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ் பல்கலைக்கழகத்தில் வடமாகாண அபிவிருத்தி மாநாடு – புலம்பெயர் குழுவும் கலந்துகொள்கின்றது : வி அருட்செல்வன்

இன்று டிசம்பர் 12ல் Conference on Rehabilitation Reconstruction and Development என்ற மாநாடு யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுக்கொண்டு உள்ளது. இம்மாநாடு சமூக சேவைகள் சமூகநலத்துறையினால் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாட்டுக்கு பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நோர்வே, ஆகிய நாடுகளில் இருந்து 20 பேர்வரை கலந்துகொள்கின்றனர். இம்மாநாடு யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம் தலைமையில் இடம்பெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

புலம்பெயர்ந்த மக்களின் உதவிகளைக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதேசங்களில் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் உயர்மட்ட மாநாடு ஒன்று இன்று காலை 8.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் நோக்கம் வெளிநாடுகளில் குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் உள்ளவர்களையும் வடக்கு கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களையும் அவர்களது அனுபவங்களையும் பகிர்வதன் மூலம் அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதாகும். இம்மாநாட்டின் இணைப்பாளராக கனடாவில் இருந்து யாழ் சென்று செயற்படுகின்ற மித்திரன் மரியாம்பிள்ளை இருக்கின்றார்.

மேற்படி மாநாட்டில் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மற்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும் பேராசிரியர் என். சண்முகலிங்கன், பேராசிரியர் எஸ். சிவச்சந்திரன், பேராசிரியர் எஸ். சத்தியசீலன், கலாநிதி நொயெல் நடேசன், திரு. ஏ. சந்திரஹாசன், கலாநிதி என். நரேந்திரன், பேராசிரியர் எம். சின்னத்தம்பி திரு. டெரின் கொன்ஸ்டன்டைன், பொறியியலாளர் எம். இராமதாஸன், பேராசிரியர் வி. பி. சிவநாதன் ஆகியோர் நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர்.

இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்:

Conference on Rebuilding Jaffna with the Sri Lankan Diaspora
Tuesday, January 12, 2010
Venue – Jaffna University Auditorium

Agenda

(இந்நிகழ்சி நிரலில் இறுதிநேர மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது என்பதை கவனத்திற்கொள்ளவும்.)

Opining Session with the Vice Chancellor of the Jaffna University 08.00 am – 08.15 am
Welcome speech by Minister Douglas Devananda  08.20 am – 08.40 am
Introduction by the Coordinator  Dr. Noel Nadesan  08.45 am – 08.55 am
Rebuilding Jaffna Mr. A. Chandra Hassan (Architect)  09.00 am – 10.00 am 

Coffee break and Interactive session 10.00 am – 10.25 am

Presentation by participants and discussion  10.30 am – 12.00 noon

Lunch break 12.00 noon – 1.00 pm 

Jaffna University and Expatriates contribution   Dr. Narendran  1.15 pm – 2.00 pm 
Interactive session with submissions by delegates/ guests   2.00 pm – 3.00 pm 
Tourism prospective Mr. Tarrin Constantine   3.00 pm – 3.30 pm

Tea break and Interactive session 3.30 pm – 4.00 pm

Suggestions/proposals by participants  4.00 pm – 5.30 pm 
Closing Remarks by Hon Minister Douglas Devananda  5.30 pm – 5.45 pm 
Vote of Thanks  by the Jaffna Mayor 5.45 pm – 6.00 pm