11

11

தமிழ்!! – இனியவன் இஸாறுதீன்

tamilதமிழ்

மொழியெனப் படுவது
இதயங்களின்
உணர்வுத்தானம்

உணர்வுகளின்
இதயப்பாலம்

ஒருவரது சிந்தனையை
இன்னொருவர் அடைந்துகொள்ள
உதவும் வாகனம்

இத்தனை பயனைப் பெற்ற மாந்தர்
தங்களது தாய்மொழிக்குப்
பாராட்டுவிழா நடத்தினர்

அரேபியர் தங்கள் மொழியை
ஆன்மீகமொழி என்று
அறைந்தனர்

ஆங்கிலேயர் தங்கள் மொழியை
வணிகமொழி என்று
வாழ்த்தினர்

இத்தாலியர் தங்கள் மொழியை
இசைமொழி என்று
இயம்பினர்

பிரெஞ்சுக்காரர் தங்கள் மொழியை
காதல்மொழி என்று
கூவினர்

உருதுக்காரர் தங்கள் மொழியை
கவிதைமொழி என்று
‘கஜல்’ பாடினர்

ஆனால் தமிழே
உன்னைத்தான் உலகத்தமிழர்
இதயமொழி என்றே
இயங்குகின்றனர்

முத்துச் சிரித்தால்
உன்னை
முல்லைத்தமிழ் என்போம்

கண் மொழிந்தால்
உன்னை
கன்னித்தமிழ் என்போம்

பரஸ்பரம் நிகழ்ந்தால்
உன்னை
பிள்ளைத்தமிழ் என்போம்

ஆறுதல் வார்த்தையே
உன்னை
அன்னைத்தமிழ் என்போம்

உன் சுவாசம் இல்லையேல்
எம்மிடம்
இல்லை உயிர் என்போம்

தேகமெல்லாம் தித்திக்கும்
தாய்மொழியே

நீ
உதடுகளுக்கு
உண்மையளிக்கிறாய்

உள்ளங்களுக்கு
விருந்து வைக்கிறாய்

உணர்வுகளுக்கு
ஊட்டமளிக்கிறாய்

செவிகளுக்கு
மதுரமாகிறாய்

விழிகளுக்கு
சிற்பமாகிறாய்

உரைத்தால்
இதய நரம்புகளைத்
தித்திக்க மீட்கிறாய்

வரைந்தால்
விழி வழியே
வானவில்லாகிறாய்

இப்படி
உன் செப்படிவித்தையை
செப்புவதெப்படி
ஓ…
எத்தனை அற்புதம் தமிழே

தொன்மைக்காலத்துப் பிறப்பு நீ
மானுடஇதயங்களில்
முளை விட்டாய்

இலக்கியக்கிளைகளில்
வான்தொட்டாய்

இலக்கணத் தளைகளால்
விருட்சமிட்டாய்

அழகியல்க(இ)லைகளில்
நிழல் விட்டாய்

மானுடக்கலையை
மேம்படுத்தி மேம்படுத்தி
மானுடத்திலேயே
மகத்துவமுற்றாய்

எழுதுகோல் உழுதால்
நீ
எழுத்தாய் முளைப்பாய்

எழுத்துக்கள் முளைத்தால்
சொல்லாய் செழிப்பாய்

சொற்கள் செழித்தால்
வார்த்தையாய் விளைப்பாய்

சிந்தனை விளைந்தால்
அறிவாய் கிளைப்பாய்

அறிவாய் கிளைத்தால்
கேள்வியாய் வரமளிப்பாய்

உயிரோடு மெய்புணர்வாய்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாய்
ஜீவன் ததும்பும் சொற்கலையில்
ஓவியம் கொணர்வாய்

உன் ஒலிவடிவம்
இதயம் தொடும்போது
வரிவடிவங்களுக்கு
வனப்பும் கொடுப்பாய்

கற்றால்
எங்கள் கல்விக்கு
நீ
மெய்ஞானம் ஆவாய்

கேட்டால்
கேள்விக்கு
நீ
விஞ்ஞானம் ஈவாய்

மானுட உதடுகள்
இதயத்தில் செதுக்கிய
இதிகாசக் கல்வெட்டு நீ

உன் நயத்தால்
எங்கள் வாழ்வை
வளப்படுத்துகிறாய்

உன் நயனத்தால்
எங்கள் நாவுகளை
நெறிப்படுத்துகிறாய்

எதுவாயினும்
நீ
இதயங்களை
இணைக்கும்போதுதான்
நாங்கள்
பரவசமடைகிறோம் தமிழே

-இனியவன் இஸாறுதீன்-

Sri Lanka: A Bitter Peace : INTERNATIONAL CRISIS GROUP

Colombo/Brussels, 11 January 2010: No matter which of the two main Sinhalese candidates wins Sri Lanka’s 26 January presidential election, the international community must take steps to ensure he addresses the marginalisation of Tamils and other minorities in the interest of peace and stability.

Sri Lanka: A Bitter Peace,* the latest briefing from the International Crisis Group, examines how eight months after the military victory over the Liberation Tigers of Tamil Eelam (LTTE), the post-war policies of President Mahinda Rajapaksa have deepened rather than resolved the grievances that generated and sustained militancy. Though the election campaign between Rajapaksa and retired General Sarath Fonseka has now opened up some new political space, Sri Lanka has yet to make significant progress in reconstructing its battered democratic institutions or establishing conditions for a stable peace.

“The victory over the LTTE will remain fragile unless Sinhalese-dominated political parties make strong moves towards a more inclusive and democratic state”, says Donald Steinberg, Crisis Group’s Deputy President for Policy. “Donor governments and international financial institutions should strengthen voices for reform by collectively pressing for democratisation and demilitarisation throughout Sri Lanka, but especially in the north and east”.

The return to their home districts of most of the quarter million Tamils displaced from the Northern Province, and the increased freedom of movement for the nearly 100,000 still in military-run camps, are important steps forward. The resettlement process has failed to meet international standards for safe and dignified returns, however, and the damage from the government’s humiliating internment will require much work to repair.

The brutal nature of the conflict has undermined Sri Lanka’s democratic institutions and governance. All ethnic communities are suffering from the collapse of the rule of law. Disappearances and political killings associated with the government’s counterinsurgency campaign have been greatly reduced since the end of the war. Some Tamil prisoners held under emergency laws have begun to be released. However, impunity for abuses by state officials continues, and fear and self-censorship among civil society and political activists remain widespread. Rajapaksa’s government continues to maintain and use the Prevention of Terrorism Act and Emergency Regulations to weaken its political opposition.

Clear international support for reforms that all Sri Lankans would benefit from and might be willing to support are crucial. These include: ending emergency rule, establishing the Constitutional Council and independent commissions, depoliticising the judiciary, preventing everyday police torture and curbing impunity for state offences. International actors need to press for accountability for abuses by both sides during the war, as well as challenge the government’s post-war policies. Donors should condition further development assistance on governance reforms designed to curb impunity and make the government accountable to citizens of all communities.

“There have been no investigations into any of the credible allegations of violations of human rights law by senior government and the LTTE leaders over the course of the war”, says Robert Templer, Crisis Group’s Asia Program Director. “But only when political and legal reforms have begun will there be any chance at a true accounting for the terrible violence that all communities in Sri Lanka have undergone”.

ஆசியாவிலேயே சுபீட்சம் அடைந்த நாடாக இலங்கை உருவாக்கப்படும்! மஹிந்த சிந்தனை 2 வெளியீட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனை 2 இன்று முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரை நிகழ்த்தினார்.

ஆசியாவிலேயே சுபீட்சம் அடைந்த நாடாக இலங்கையை விளங்கச் செய்யும் வகையிலான திட்டங்களை உள்ளடக்கியதாக மஹிந்த சிந்தனை 2 வகுக்கப்பட்டுள்ளது.

உணவில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றியமைத்தல்

சட்டம்,  ஒழுக்கம் மற்றும் நேர்மையுள்ள சமூகத்தை உருவாக்கல்

அனைவருக்கும் வசிப்பிடம்,  குடிநீர்,  மின்சாரம் மற்றும் தொடர்புசாதன வசதிகள் கொண்ட நாடாக மாற்றியமைத்தல்

முன்னேற்றம் காணப்பட்ட வகையிலான நெடுஞ்சலைகளுடன் அனைவருக்குமான போக்கு வரத்து வசதியுள்ள நாடாக உருவாக்கல்

வெற்றிகொண்ட நாட்டை மீண்டும் பிரிய விடாமல் ஒரே நாடாக கட்டிக் காப்பது

அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துதல்

காடுகளையும் விலங்கினங்களையும் சுற்றாடலையும் பாதுகாக்கப்பட்ட இலங்கையை உருவாக்கல்

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முதலிடம் வழங்குதல்
போன்றவை உட்பட பல முக்கிய வடயங்கள் மஹிந்த சிந்தனை 2இல்உள்ளடக்கப்பட்டுள்ளன.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு : தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையில் இருத்தல் வேண்டும் – தமிழரசுக் கட்சி

யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தமிழ் மக்கள் தொடர்பாகவும் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் இந்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினை தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்தீர்மானங்கள் வருமாறு;

1. பொருளாதார தீர்மானம்

கடந்த முப்பது ஆண்டு காலமாக இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக சிதைந்து, சின்னாபின்னப்பட்டு, சீரழிந்து நிற்கும் வடக்குகிழக்கு பிரதேச உட்கட்டுமானங்களை மீள்வித்து; வாழ்வாதாரங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும், வன்னி மக்கள் உள்ளிட்ட சகல மக்களது வாழ்வாதாரங்களை மீள்வித்து; எமது பிரதேசத்து உற்பத்தி வளங்களை இனங்கண்டு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு; எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பு உருவாக்குதலுக்கும் உழைத்தலுக்கும் இந்த செயற்பாடுகளைத் திட்டமிடவும் அமுலாக்கவும் கண்காணிக்கவும் கூடிய நிபுணத்துவ தகமை பெற்றவர்களின் சேவைகளை அணிதிரட்டி நடவடிக்கை எடுக்கவும்; உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டார்களை ஊக்குவித்து தொழில்துறை மேம்பாட்டிற்காக உழைக்கவும், இழந்தவற்றை மீள்வித்து அபிவிருத்திப் பாதையில் முன் செல்லவும் அவற்றிக்காக அரசசார்பற்ற நிறுவனங்களதும் சர்வதேச சமூகத்தினதும் ஒத்துழைப்பைப் பெறவும் காத்திரமான நடவடிக்கைகளை இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொள்ள வேண்டும் என இச்சபை தீர்மானிக்கிறது.

2. அரசியல் பிரேரணை

தமிழ்த் தேசிய இனத்தின் நியாயபூர்வமான அபிலாசைகளை உள்வாங்கிக் கொள்ளும் அரசியல் யாப்பு இந்நாடு சுதந்திரமடைந்த காலத்திலோ அன்றிப் பின்னரோ நடைமுறையில் இருக்கவில்லை. இதனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே இற்றை வரை நிலவுகிறது. மாறிமாறி வந்த அரசுகள் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் பற்றிப் பிரஸ்தாபித்தது மட்டுமன்றித் தமிழ்த் தரப்புடன் ஒப்பந்தங்களையும் செய்து கொண்டாலும்கூட இவை யாவும் செயல் வடிவம் பெறவில்லை.

இதனால் தமிழர் தரப்பின் அரசியல் போராட்டம் சாத்வீக ரீதியிலும் ஆயுதப்போராட்ட ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்த இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகிறது. இத்தகைய தீர்வும் தமிழ் மக்கள் காலாகாலமாக முன்வைத்த தமது அபிலாசைகளான தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையில், எம் மக்களிடமுள்ள இறைமை அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் இருத்தல் வேண்டும் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சி வற்புறுத்துகிறது.

3. உயர் பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்பட வேண்டும்.

இரு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் தேசிய இன மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படாமையால் ஏற்பட்டிருந்த போராட்டங்களினாலும் ஆயுதப் போரினாலும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டு இடம்பெயர்ந்து, அகதிகளாய் அலைகின்றனர். தமிழர் தாயகப் பிரதேசங்கள், கடல் பிரதேசங்கள் அரச இராணுவப் படைகளினால் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்து விட்டதாக அரசு அறிவித்துவிட்டது. எனவே உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக நீக்கப்பட்டு மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கி வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். ஐ.நா. அகதிகள் புனரமைப்பு, மீள் குடியேற்றங்களுக்கான பிரகடனங்களும் தரமும் மீள்குடியேற்ற நடைமுறைகளில் பின்பற்றப்பட வேண்டும்.

மீள் குடியேற்றப்படும் போது உடன் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபா குடும்பமொன்றிற்கு வழங்க வேண்டும் என்றும் தங்கள் வீடுகள், உடைமைகள், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும், உயிர் இழந்தோர், அங்கவீனமானோர், விதவைகளானோர், நோய்வாய்ப்பட்டுள்ளோர்களுக்கும் நட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தகுந்த நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு அரசை வற்புறுத்துகிறது. சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது.

4.
தமிழர் தாயகப் பிரதேசத்திலிருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய ஆயுதப் படைமுகாம்களும் ஆயுதப்படையினரும் விலக்கப்பட்டு தமிழர் தாயக மக்கள் சுதந்திரமான நடமாட்டம் அரசு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

5.
இலங்கையில் குறிப்பாக ஜனநாயக அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், மக்கள் உயிர் வாழும் உரிமை பாதுகாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

6.
அரசியல் காரணங்களுக்காவும் காட்டிகொடுப்புகளினாலும் வெறும் சந்தேகத்தினாலும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவும கூட விசாரணையின்றி தடுப்புக் காவலிலுள்ள சிறைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்கிறது இம்மாநாடு.

7.
போர் முடிவுற்ற நிலையில் அரசிடம் சரணடைந்த 12,000 க்கும் அதிகமான இளைஞர்களின் பெயர் விபரங்களை உடன் பகிரங்கப்படுத்தபட வேண்டுமென்றும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்பதுடன் அவர்கள் புனர்வாழ்வுக்காகவும் புதிய வாழ்க்கையின் பொருட்டும் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு வற்புறுத்துகிறது.

8.
போரில் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென்பதுடன், அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் போதிய நட்டஈடு வழங்கப்படுதலும் வேண்டும் எனவும் அழிக்கப்பட்ட மக்களின் உடைமைகள் மதிப்பிடப்பட்டு அவற்றிற்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்றும் இம் மாநாடு வற்புறுத்துகிறது.

9.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இந்துக் கோவில்கள் சூறையாடப்பட்டு பௌத்த சின்னங்கள் நிலைநாட்டப்படும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாலும் தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் மொழி, கலை, கலாசாரங்கள் சீர்குலைக்கப்பட்டுத் தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் பௌத்த சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாலும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெரும் நிலப்பரப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஆயுதப் படைகளின் கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாலும் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மைத்துவம் வீழ்த்தப்பட்டும், பலவீனப்படுத்தப்படும் வகையில் பிரதேச மற்றும் இனக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் அரசின் நேரடியான மறைமுகமான இத்தகைய நிகழ்ச்சித் திட்டத்தை உடன் தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

10.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்குறித்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் தேவைப்பட்டால் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானங்களின் அடிப்படையிலும் கொள்கை அடிப்படையிலும் அணிதிரளக்கூடிய தமிழ்,முஸ்லிம் மக்களின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டுமென்றும் புலம்பெயர்ந்த தமிழர் தாயக மக்களின் அமைப்புகளையும் கூட்டிணைக்க வேண்டுவதுடன், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் நாடுகளிடமும் ஐ.நா. அமைப்புகளிலும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினைத் திரட்டுவதற்குப் பொருத்தமான தக்க நிபுணத்துவம்,ஆற்றல், அனுபவம் மிக்கவர்களையும் ஈர்த்துத் தமிழ் பேசும் மக்களின் விடிவையும் விடுதலையையும் ஈட்டுவதற்கு உறுதிபூண வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

11.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த ஆறுமாத காலத்துள் மேற்குறித்த தீர்மானங்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதுடன், தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்குமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் எதிர்கால அரசை வற்புறுத்துகின்றது இம்மாநாடு.

அவ்வாறு குறித்த காலத்துள் தீர்வுகள் எட்டப்படாதுவிட்டால் சிறப்புத் தேசிய மாநாட்டைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென்பதுடன், அவ் இலக்குகளை அடைவதற்கு மக்களை அணிதிரட்டும் பொருட்டு ஜனநாயக மற்றும் சாத்வீக வழி முறைகளில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

12.
போரினால் பேரவலத்தில் வீழ்ந்து கிடக்கின்ற தமிழ் பேசும் மக்களினதும் தாயகப் பிரதேசங்களிலும் பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்கவும் விருத்தி செய்யவும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டவேண்டுமென்றும் சம கல்வி,சம வேலைவாய்ப்பு எனும் திட்டங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் பொருத்தமான நிபுணத்துவத்தை ஈர்க்க வேண்டுமென்பதுடன், மனிதவளம்,ஆற்றல்,கடின உழைப்பு மிகுந்துள்ள எம் மக்களிடம் வேலைவாய்ப்பினை உருவாக்கவும் தொழில்நுட்பத்தைப் பெருக்கவும் பொருத்தமான சிறு மற்றும் பெருந்தொழில்களைத் தமிழ் பேசும் மக்களின் பிரதேசத்தில் உருவாக்குவதற்கும் தேசிய மட்டத்தில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு

mahinda_jaffna.jpgதமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். அதேநேரம் சகல மாகாண சபைகளும் அங்கம் வகிக்கக்கூடிய வகையில் புதிதாக மேல் சபையொன்றும் அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் ஏற்கனவே தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இனிமேல் இந்த நாட்டில் அகதிகள் யுகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எவரும், எங்கும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக சென்று வரலாம். இதில் எதுவிதமான கட்டுப்பாடுகளுமே இராது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியற் பீடம், விவசாயப் பீடம் என்பனவற்றை உள்ளடக்கிய முழுமையான பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ். குடாநாட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழ் மொழியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் என முழு நாட்டு மக்களும் அச்சம், பீதியின்றி நிம்மதியாக வாழுகின்றார்கள். மத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், சந்தைகள் என எல்லா இடங்களுக்கும் பயமில்லாமல் சென்று வருகின்றனர். ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கின்ற அதே சுதந்திரத்தையும், உரிமைகளையும் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பகுதி மக்களும் அனுபவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக உள்ளோம். மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும். அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. தென்பகுதி நதியொன்றை திசை திருப்பி இப்பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் தகவல், தொழில்நுட்ப கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்யப்படும். ஏற்கனவே யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும். இதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.

அன்று தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். நானும் எனது தமிழ் நண்பர்களுடன் யாழ் தேவி ரயிலில் இங்கு வந்து சென்றிருக்கிறேன். அந்த யாழ் தேவி ரயில் மீண்டும் சேவையில் ஈடுபடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நாம் ஒரு தாய் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சகலரும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும்.

எல்லா மக்களையும் பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்புமாகும். இங்கு இன ரீதியான அரசியல் இனித் தேவையில்லை. இன, மத, குல, மாகாண பேதங்களும் நமக்கு அவசியமில்லை. சேர் பொன்னம்பலம் ராமநாதன், சேர் பொன்னம் பலம் அருணாச்சலம் போன்ற அரசியல் தலைவர்கள் இப்பூமியில் உருவாக வேண்டும். நான் உங்கள் சகோதரன், உங்கள் நண்பன், நான் உங்களை நம்புகிறேன் என்றார்.

பொன்சேகாவின் 10 அம்சத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வருகை – ஜே.வி.பி.

jvp.jpgஜெனரல் சரத் பொன்சேகாவின் பத்து அம்ச வேலைத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததாக தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க, சம்பந்தனுக்கும் ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையில் எந்தவிதமான இரகசிய உடன்படிக்கையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குவதாக ஜெனரல் பொன்சேகா அறிவித்த போது கூச்சல் போட்ட விமல் வீரவன்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே அறிவிப்பை செய்திருப்பதையிட்டு என்ன செய்யப் போகிறார்? எனவும் ஜே.வி.பி.கேள்வி எழுப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் ஜெனரல் பொன்சேகாவின் இணைஊடகப் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா பத்து அம்சத்திட்டத்தின் அடிப்படையிலேயே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றார். அதனடிப்படையிலேயே சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறார்.

ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் இதே 10 அம்ச வேலைத்திட்டத்தினை முன்வைத்தே பேசினார். இந்த வேலைத்திட்டத்தின் மீது திருப்தி கண்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்தது. இது தவிர சம்பந்தனுடனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ ஜெனரல் பொன்சேகாவோ, அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளோ எந்தவிதமான உடன்படிக்கைகளையோ, இரகசியப் பேச்சுகளையோ நடத்தவில்லை.

சில ஊடகங்கள் தெரிவிக்கும் விதத்தில் எந்த இரகசிய ஒப்பந்தங்களும் எவருடனும் ஜெனரல் பொன்சேகா செய்து கொள்ளவில்லை. அதேசமயம் ஒரு சிங்கள வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் வடக்கு,கிழக்கு இணைப்புக்கு ஜெனரல் இணங்கியதாகவும் அதனாலேயே அவரை ஆதரிக்க முன்வந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கின்றது. அவ்வாறான எந்தத் தகவலையும் தான் கூறவில்லை என சம்பந்தன் மறுத்திருக்கிறார். சில ஊடகங்கள் மீது அரச தரப்பு தமது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஊடகங்களும் அதற்குத் துணைபோகும் நிலை காணப்படுகின்றது. எந்தவொரு ஊடகத்தையும் நாம் கட்டாயப்படுத்த முற்படவில்லை. ஊடகங்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்பதையே நாம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம் – 4,01118 பேர் தகுதி; 57036 நிராகரிப்பு

election_box.jpgஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தபால்மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. 4 இலட்சத்து ஆயிரத்து 118 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 15 ஆயிரம் அரச நிறுவனங்களில் இம்முறை தபால்மூல வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு சமுகமளிக்க முடியாத 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் பல்வேறு காரணங்கள் காரணமாக 57 ஆயிரத்து 36 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தபால்மூல வாக்களிப்பு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தெரிவத்தாட்சி அலவலகர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.

12 ஆம் 13 ஆம் திகதிகளில் தவிர்க்க முடியாத காரணமொன்றினால் வாக்களிக்க முடியாத போதும் தபால்மூல வாக்காளரொருவருக்கு 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரை அந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இருப்பினும், அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் குறிப்பிட்ட மாவட்டத் தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கிடைக்க வேண்டுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறும் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக் காட்டினார்.

அத்தாட்சிப்படுத்தும் அலுவலரொருவரின் அலுவலகத்தில் அஞ்சல் வாக்குகளை அடையாளமிடும் சந்தர்ப்பத்தில் வேட்பாளரொருவர் சார்பாக முகவரொருவரும் ஒரு கண்காணிப்பு நிறுவனம் சார்பாக கண்காணிப்பாளரொருவரும் நியமனஞ் செய்யப்படலாம். இப்பணியை கண்காணிப்பதற்கு பெப்பரல், சி.எம்.இ.வி. ஆகிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விசேட பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தபாலகங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிறைவுபெறுமெனவும் 10 ஆம் திகதியாகிய நேற்று விசேட தபால் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தபால்மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க நேற்றுக் கூறினார்.

விமானத்தை தகர்ப்பதாக மிரட்டல்: லண்டனில் மூன்று பயணிகள் கைது

heathrow-airport.jpgலண்டனில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தை தகர்க்கப் போவதாக, அந்த விமானத்தில் பயணித்த மூவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி, அமெரிக்க விமானத்தை நைஜீரியாவைச் சேர்ந்தவர் தகர்க்க முயன்றதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 331 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்தவர்களில் 58, 48 மற்றும் 36 வயது மதிக்கத்தக்க மூவர் விமானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, விமான பணியாளர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். விமானம் மேலே எழுவதும் நிறுத்தப்பட்டது. உடன் பொலிஸார் விரைந்து வந்தனர். விமானத்தை சுற்றிலும் ஒன்பது பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. விமானத்திற்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸ் அதிகாரிகள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மூவரையும் கைவிலங்கிட்டு, வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர், விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் உள்ளனவா என மோப்ப நாய்கள் மூலமும் பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமானம் புறப்படுவது மூன்று மணி நேரம் தாமதமானது.

இதேபோல, அட்லாண்டாவிலிருந்து சான்பிரான்ஸிஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில், போதையில் பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்று உள்ளே பூட்டிக் கொண்டார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கொலராடோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. பின் அந்நாட்டு பொலிஸார் விமானத்துக்குள் புகுந்து போதை நபரைக் கைது செய்தனர்.

இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற்றம்

catak.jpgமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்றைய 5வது லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் உள்ள மிர்புரில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சங்கக்கார (68), ரன்திவ் (56), தில்ஷான் (33), துஷாரா (28) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இலங்கை அணி 46.1 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜாகீர் கான், அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் (48), கவுதம் காம்பீர் (71) ஜோடி சிறப்பாக ஆடியது. பின்னர் இணைந்த விராத் கோஹ்லி (71), யுவராஜ் சிங் (8) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 32.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் துஷாரா, பெரேரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலிடத்தில் இலங்கை அணி (12 புள்ளி) உள்ளது. எதிர்வரும் 13ம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

அரசாங்க ஊழியர்களுக்கு ரூ. 2500 சம்பள உயர்வு

அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது கிடைக்கும் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் புறம்பாக 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் அரசாங்கத் துறை அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்து வருகிறது.