10

10

பிரபாவின் தந்தையின் இறுதிநிகழ்வில் இரு முக்கிய கொலைகாரர்கள் தேர்தலில் நிற்பதாகக் கூறிய தர்மசிறி கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்!!! : ரி சோதிலிங்கம்

Velupillai_Funeral_TNAவே பிரபாகரனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று (டிசம்பர் 20) இடம்பெற்று அவரது பூதவுடல் ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் சகோதரர் அவருக்கு கொள்ளியிட்டார். மரணச் சடங்குகள் திரு வேலுப்பிள்ளையின் மகள் வினோதினி ராஜேந்திரனின் வீட்டில் (வேலுப்பிள்ளையின் வீட்டிலிருந்து 150 யார் தூரத்தில் உள்ளது) நடைபெற்றது. இந்த சடங்குகளுக்கு முன்பு இவரது உடல் வல்வெட்டித்துறை ரீமலில் – குமரப்பா – புலேந்திரன் தூபிகள் உள்ள  மாவீரர் சதுக்கத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

மரணச் சடங்கில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Velupillai_Funeral_PLOTE_Sitharthanதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் முதல் பரம எதிரி அமைப்பாக இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் தலைவர் சித்தார்த்தனும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு தனது அஞ்சலியைச் செலுத்தினார். 

இறுதி அஞ்சலியில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினாவின் புதிய இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சமல், பத்திரகையாளர் தர்மசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கே தர்மசிறி இலங்கையில் இரண்டு முக்கிய கொலைகாரர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்று பேசத் தொடங்கியதும் வல்வெட்டித்துறைப் பொலிசார் ஒலிபெருக்கியை நிறுத்தி தர்மசிறியை கைது செய்ததாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் பொலிசார் ஒலிபெருக்கி உரிமையாளரையும் ஓட்டோ சாரதியையும் கைது செய்ததாகவும்  தான் பொலீஸ் நிலையம் சென்று தலையிட்டதின் காரணமாக தர்மசிறி விடுவிக்கப்பட்டதாகவும் மற்றைய இருவரும்  நாளை நீதிமன்றில் ஆஜராகும்படி கேட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை ஏற்றுக்கொண்ட நேரம் முதல் திரு ஜிவாஜிலிங்கமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதிவரையில் மரணச்சடங்கில்  இருந்துள்ளனர். இன்று (டிசம்பர் 10) காலை ரிஎன்ஏ பா உ பத்மினி சிதம்பரநாதன் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார். நேற்று மாலை (டிசம்பர் 9) ரிஎன்ஏ பா உ க்களான சிறீகாந்தா, சம்பந்தர், துரைரட்ணசிங்கம்,  வில்லியம் தோமஸ், அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிறில், சுரேஸ் பிரேமச்சந்திரன், சேனாதிராஜா மற்றும் கல்முனை நகரசபை உறுப்பினர் கென்றி மகேந்திரன் போன்றோர்கள் உட்பட 15 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாகவும் அறியப்படுகிறது.

பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறைக்கு ஓடுகின்ற 751 ம் இலக்க பஸ் சேவையிலீடுபடவில்லை என்றும் அதனால் இறுதிநிகழ்வில் மக்கள் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழப்பாணத்தில் பெருமளவு பஸ்கள் மகிந்த ராஜபக்சவின் பொதுக் கூட்டத்திற்காகத் திசை திருப்ப்பட்டு இருந்ததாகவும் ஏம் கெ சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டினார்.

715 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ltte-rele.jpgபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 715 பேரை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் வலயம் 2 இல் நடைபெற்ற வைபவத்தின் போதே மேற்படி 715 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகள் இயக்கத்திலிருந்து படையினரிடம் சரணடைந்தவர்களை பெற்றோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். சரணடைந்தவர்களுள் 15 பேரை ஜனாதிபதியே அவர்களது பெற்றோரிடம் கையளித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான மிலிந்த மொரகொட, டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்கா, வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ltte-rele.jpg

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று

prabakaeans-father.jpgபிரபாக ரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

பூதவுடல் வல்வெட்டித்துறை பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினரின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பனாகொட இராணுவ முகாமில் காலமான அவரின் சடலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று வல்வெட்டித்துறைக்குக் கொண்டுவந்தார்.

இதேநேரம் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரண விசாரணைகள் நடைபெற்று மருத்துவ அறிக்கையில் இயற்கைச் சாவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான்’ – சிவாஜிலிங்கம்

Sivajilingam_M_Kஇனப் பற்றுள்ள எந்தத் தமிழனும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய எந்தத் திட்டமும் இராணுவத் தளபதியிடம் இல்லை. இறுதிவரை யுத்தம் நடத்திய ஓர் இராணுவத் தளபதியைத் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரிப்பது துர்ப்பாக்கியம் என்றும் தேசிய தொலைக்காட்சி யொன்றுக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஓர் இராணுவ அதிகாரி அரசாங்க அதிபராக இருந்தபோது, வடமாகாணத்துக்கு ஓர் இராணுவத் தளபதியை நியமித்த போது எதிர்ப்பு தெரிவித்த சம்பந்தன், நாட்டின் தலைவராகும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்கும் ஓர் இராணுவத் தளபதிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தமை மக்களைத் தவறாக வழிநடத்தும் முடிவாகும். தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் நடப்பதை மறுக்க முடியாது. இந்தத் தேர்தலில் ‘தமிழ் மக்களின் சுயத்தை வெளிப்படுத்தவே தனித்துப் போட்டியிடு கிறேன்’ என்றும் சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

சபாநாயகர் மீது இந்தியாவில் செருப்பு வீச்சு.

பாராளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டார இந்தியாவில் உள்ள வைதீஸ்வரன் ஆலயத்தை தரிசிக்க சென்றிருந்தபோது அவரது வருகையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடத்தியுள்ளதுடன் அவர் பயணம் செய்த கார் மீது செருப்புக்களையும் வீசியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிப்பதுடன் போராட்டம் நடாத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் கூறுகின்றது.

நுவரெலியா மாவட்ட எம்.பியாக அருள்சாமி

parliament.jpgநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி வர்த்தமானி அறிவித்தல் 08.01.2010 அன்று வெளியாகியுள்ளது.

சந்திரசேகரன் பெரியசாமி இறந்து போனதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இல, 06- நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

2004 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு 47,630 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டது. இதில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் மறைந்த முன்னாள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் முதலாவது இடத்தை பெற்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

திருக்கேதீஸ்வரம் ஆலயப் பகுதி புனிதப் பிரதேசமாக பிரகடனம் – மன்னாரில் ஜனாதிபதி அறிவிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்படும். அத்தோடு, இந்த ஆலயத்தில் பக்தர்கள் தினமும் வழிபாடுகளில் ஈடுபடவும் வசதி செய்துகொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மன்னாரில் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தலைமையில் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆப்பிரிக்கக் கோப்பை போட்டியில் இருந்து விலகுகிறது டோகோ

togo-team.jpgநாடுகளுக் கிடையிலான ஆப்பிரிக்கக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக டோகோ அணியினர் பயணித்த பேருந்து துப்பாக்கிதாரிகளால் வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டதை அடுத்து, அந்த சுற்றுப் போட்டியில் இருந்து விலகுவது என்று டோகோவின் தேசிய விளையாட்டு அணியின் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக அங்கோலாவில் இருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.

இதில் கொல்லப்பட்ட ஓட்டுனரை அடுத்து மேலும் காயமடைந்த ஒரு ஊடக அதிகாரியும், துணை பயிற்றுவிப்பாளரும் மரணமானதால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.

மேலும் ஆறு பேர் இதில் காயமடைந்துள்ளனர்.

காங்கோ பிரசவில்லில் இருந்து அங்கோலிய கபிந்த பகுதிக்கு பேருந்து நுழைந்தபோது துப்பாக்கிதாரிகள் அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரிவினைவாதத் தீவிரவாதிகள் தாமே இந்தத்தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.