22

22

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அன்னக் காவடி : எஸ் ஜெயராஜா (பிரான்ஸ்)

voteஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரை பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. இதில் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் அவர்களுடன் வாக்குகளை பிரிக்க என்றுமாக, 22 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.

ஜனாதிபதி எந்தக் கட்சியாக இருந்தாலும் அல்லது கட்சியற்ற பொன்சேகா பதவிக்கு வந்தாலும் தன்னந் தனியனாக நிர்வாகம் நடத்துவதில்லை. தனது கட்சி உறுப்பினர்கள், அல்லது தனக்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர்கள் என்று அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை வைத்தே நிர்வாகம் செய்யப்படும்.

இதில் மூன்றாம் நபராக உள்ள விக்கிரமபாகு கதைக்கின்ற சுயநிர்ணயம் கேட்க நல்லாகத்தான் இருக்கிறது.  சாத்தியமா என்பதற்கான விளக்கம் இல்லை. அத்தோடு இவர் சார்ந்த கட்சி ஒரு பலமான கட்டமைப்பை கொண்ட கட்சியுமல்ல. இவருக்கு வாக்களித்து எமது மக்களின் அடிப்படை, அத்தியாவசியமான பிரச்சினைகளை இவரால் தீர்க்க முடியாது.

இரண்டாம் நபர் சரத் பொன்சேகா. இவருக்கு கட்சி இல்லை. இவரை ஆதரிக்கின்ற இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. தங்களுடைய இன்றைய தேவைகளுக்கே இவரை ஆதரிக்கின்றனர். இவரோ ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்கிறார். கட்சியும் இல்லை, ஜனாதிபதியும் இல்லை என்றால் என்ன நிர்வாகம் செய்யப் போகிறார். அன்னப்பறவையில் அன்னக் காவடியா?

மற்றையது இவர் ஒரு இராணுவ உயர் அதிகாரி. சீருடையைக் கழட்டியதால் மட்டும் இவரிடம் உள்ள இராணுவமாயை அகன்று விட்டது என்பது அல்ல.

இந்திய இராணுவம் வந்தபோதும் எமது மக்கள் கும்பம் வைத்து ஆலாத்தி எடுத்து தான் வரவேற்றார்கள். அதற்காக அவர்கள் கங்கையில் குளித்து விட்டு வந்த காந்திகள் அல்ல. அவர்களின் இயல்பான குணாம்சம் தானாகவே வந்து சேரும். பாக்கிஸ்தானைப் பார்த்த பின்புமா நாங்கள் திருந்தவில்லை. மகிந்தாவிற்கு சவாலாக ஒருவரை உருவாக்க சரத் என்ற தெரிவு விஷப்பரீட்சை. புலி ஆதரவாளர்கள், புலி ஊடகங்கள் ஏன் சரத்தை ஆதரிக்க வேண்டும். இவர்தானே அவர்களின் அழிவிலும் பங்காற்றியவர். மீண்டும் இலங்கையில் அமைதியின்மையை உருவாக்கி அதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் கடைவிரிக்க ஆதரிக்கிறார்கள். மகிந்த கட்சிக்கு சவாலாக எதிர்க்கட்சி உருவாகலாம். அது ஆரோக்கியமானது. மீண்டும் ஒரு குண்டு வெடிப்போ ஆயுதக்கலாச்சாரமோ எங்கள் சந்ததிக்கு வேண்டவே வேண்டாம்.

இன்று உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை முகாம்களில் உள்ள மக்கள் வெளியே வரவேண்டியதும், வெளியே வந்தவர்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தலுமாகும். இது ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிற விடயம். இதை யாருமே குழப்பக் கூடாது. இன்று வட கிழக்கில் சிறுசிறு அசம்பாவிதங்கள் நடந்தாலும் ஒரு இயல்பு நிலை தோன்றியுள்ளது. கடந்த முப்பது வருடங்களைப் பின்னோக்கிப் பாருங்கள். 2008 2007 2006 …….. இப்படியே பின்னோக்கிப் போய் ஒவ்வொரு ஜனவரியிலும் நடந்த கொலைகளைப் பாருங்கள். இந்த ஜனவரியில் அவ்வாறு எத்தனை நடந்தள்ளது? குண்டு வெடிப்புகளும் இல்லை. குண்டுத் தாக்குதல்களும் இல்லை. செல் வீச்சுகளும் இல்லை. வெள்ளை வான் கடத்துவதில்லை. பொட்டு வைக்க பொட்டர் இல்லாததால் ஒரு ஜயரோ, பேராசிரியரோ, பல்கலைக்கழக மாணவனோ தனது சொந்தக் கருத்தை முன்வைக்கக் கூடிய நிலைமையுள்ளது.

அதற்காக நிபந்தனை அற்ற ஆதரவு என்கிற பதத்தை நாம் தவிர்க்க வேண்டும். மக்களுடன் சேர்ந்து இயங்கும் தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தில் மகிந்தவின் முன் நிபந்தனைகளை வைத்து ஆதரவளிக்க வேண்டும். அதற்காக மதகு கட்டவும், வோட்டு போடவும் தான் நாங்கள் போராடப் புறப்பட்டோம் என்பதல்ல. 36 வருடமாக நன்றாக இருந்த மதகுக்கு குண்டுவைத்தும், ஒழுங்காக இருந்த ரோட்டில் கண்ணி வெடி வைத்தும் நாங்கள் கண்டதென்ன? அன்று நவீன சந்தை கட்டிய துரையப்பாவை போட்டுத்தள்ளாமல் இருந்திருந்தால் இன்று சீனப்பெருஞ்சுவரே கட்டியிருக்கலாம்.
பிரச்சினையும் தீர்வும் அந்த மக்களுக்கு தான். இங்கு ரிவி க்கு முன் கோட்டு போட்டு வந்து ஆய்வு செய்பவர்களுக்கோ, வெள்ளவத்தையிலும் பம்பலப்பிட்டியிலும் சொகுசாக வாழ்ந்து கொண்டு பிரபல பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பவர்களுக்கோ அல்ல. எல்லாவற்றையும் தொலைத்துப்போட்டு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்குத்தான் தீர்வு.

அந்த மக்களுக்கு இன்று செய்ய வேண்டியது என்ன?. வன்னியிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை ஓடி முகாம்களில் இருந்து சொல்லொணாத் துன்பங்களை தாங்கி நின்ற போது, அவர்களைக் காப்பாற்றாமல் புலிகளைக் காப்பாற்ற பாடுபட்ட கூட்டமைப்பு – தங்கள் தலைவர்களை கொன்றவர்களுடன் கை கோர்த்த கூட்டமைப்பு – மூன்று மாதமாக முடிவு எடுக்கத் தெரியாத கூட்டமைப்பு – இலங்கைத் தேர்தலில் லண்டன் வந்து விளக்கம் சொல்லும் கூட்டமைப்பு – எந்த முகத்துடன் வோட்டு கேட்க முடியும். இவர்களுடன் ஒப்பிட்டால் சிறீதரனும் சித்தார்த்தனும் எவ்வளவோ மேல்.

எனவே வடக்கிலும் கிழக்கிலும் மக்களோடு நின்று தங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் தலைமைகள் யாருக்கு வோட்டு போடச் சொல்லுகிறார்களோ, அவர்களுக்கே வோட்டுப்போட்டு இந்த ஆறு மாதம் போல் இன்னும் 6 வருடம் கழிந்தால் அவர்களும் அத்தியாவசியப் பிரச்சினையிலிருந்து நீங்கி கொஞ்சம் நிமிர்ந்து வாழ்வார்களே! அதுதான் இன்றைய தேவை!!.

சந்தர்ப்பத்திற்கேற்றவாறு முடிவெடுக்கத் தெரியாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திண்டாடுகிறது

வட,கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கிருந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்குமே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதனைப் பேரம் பேசும் சக்தியாக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் கட்டிக்காத்தார். எனினும் இப்போது அது திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பத்திற்கேற்ப முடிவெடுக்கத் தெரியாத நிலையில், அக்கட்சி திண்டாடுகின்றது. மர்ஹும் அஷ்ரப்பின் தலைமைத்துவத்திற்குப் பின் அதன் போக்கே மாறியுள்ளது.

இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் வீடமைப்பு அமைச்சருமான பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். மக்கள் தோட்ட முகாமைத்துவப் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.எம்.அம்ஜித் தலைமையில் மருதமுனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வீடமைப்பு அமைச்சரின் இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.உவைஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய ஆலோசகர் இசட், ஏ.எச்.ரஹ்மான், முன்னாள் எம்.பி. அலிசாஹிர் மௌலானா, முன்னாள் பிரதிமேயர் அசாத்சாலி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பேரியல்; யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரமான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திய பின்னரும் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சமூகத்தைக் காட்டிக் கொடுத்து சுயநலம் கருதிய நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

79 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று விடுதலை; அடுத்த வாரம் மேலும் 200 பேர் விடுதலையாவர்

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரத்திற்குள் மேலும் 200 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 பேரில் 17 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளதுடன் 13 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேர் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக 200 பேரை அடுத்த வாரத்திற்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சும், சட்டமா அதிபர் திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் வவுனியா, தெல்லிப்பழை, வெலிக்கந்த ஆகிய இடங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 11 ஆயிரம் பேரில் 700 பேர் அண்மையில் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றங்கள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் படிப்படியாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை தொடர்பாக ஆராயவென சட்டமா அதிபர் திணைக்களம் 10 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கைது செய்யப்பட்ட பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்குவது என்றாலும் கூட நன்கு ஆராய்ந்தே விடுதலைப் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். யுத்த காலப் பகுதிகளில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டார்கள். இவ்விடயத்தில் அமைச்சு மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறது. யுத்தம் முடிந்த பின்னரும் கூட வெறுமனே தடுத்து வைத்திருப்பதில் பலனில்லை. எவ்விதத்திலேயேனும் அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சரணடைந்தவர்கள் தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை வெறுமனே வெளி யில் விடாமல் அவர்களது பெற்றோருடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்கவும், சுயதொழில் செய்வதற்கு தேவையான உதவிகளையும் பெற்றோரிடம் கலந்தா லோசித்து பெற்றுக் கொடுக்கவுள்ளோம். எனவே இவ்விடயத்தில் எவரும் அரசியல் இலாபம் தேடக்கூடாது. அரசாங்கமும் அமைச்சும் இளைஞர்களின் விடுதலை தொடர்பான தேவையான சகல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க ஏற்பாடு

தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொது நலவாய நாடுகளின் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் சபை மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பன இந்தத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

பொதுநலவாய நாடுகளின் சபையின் கண்காணிப்புக் குழுக்கள், அந்த நிறுவனங்களினாலேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் காண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் ஒன்றியம் தேர்தல்கள் திணை க்களத்தின் அனுசரணையுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.

இடம்பெயர்ந்தவர்கள் உட்பட சகலருக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பு -தபால் மாஅதிபர் அறிவிப்பு

election_box.jpgஇடம் பெயர்ந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நேற்று (21) வரை 93% நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தபால் மாஅதிபர் எம். கே. பி. திசாநாயக்க தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு ள்ளதாகக் கூறிய தபால் மா அதிபர், முகவரி தவறின் காரணமாக வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், அருகிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று தபால் மாஅதிபர் கூறினார்.

2008ஆம் ஆண்டில் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறவில்லையாயின் அதற்கு தபால் திணைக்களம் பொறுப்பல்ல. அது வாக்காளர்களின் தவறாகும். வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு கிடைக்கப்பெற்ற அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படும் என்றும் தபால் மாஅதிபர் கூறினார்.

அதேவேளை வட மாகாணத்திற்கு வாக்காளர் அட்டைகள் தாமதமாகக் கிடைக்கப்பெற்றதால், அவற்றை விநியோகிக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக வட மாகாண பிரதித் தபால் மாஅதிபர் வி. குமரகுரு தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளன. நிவாரணக் கிராமங்களில் தபாலகங்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு நேரடியாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாகவும் குமரகுரு தெரிவித்தார். அதேநேரம் மக்கள் மீளக்குடியேறியுள்ள பகுதிகளிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கிறிஸ்மஸ்தீவில் 11 இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமான கிறிஸ்மஸ் தீவில் குழப்பம் விளைவித்ததாக 11 இலங்கை அகதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் மொத்தமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் 21க்கும் 36க்கும் இடைப்பட்ட வயதை கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆயுத கையாளல், குழப்பம் விளைவித்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு அகதிகள் பராமரிப்பு குழுமத்தின் உறுப்பினரான இயன் ரின்டோல் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த மோதலில் முகாமுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 07- புன்னியாமீன்

sri-lanka-election-07.jpgதொடர்ச்சி…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த  ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையில் 3வது ஜனாதிபதித் தேர்தல் 1994.11.09ஆந் திகதி நடைபெற்றது.  இத்தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்கவின் பதவிக்காலம் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆந் திகதி முடிவடைவதற்கு இருந்தது.  இந்நிலையில்தான் 4வது ஜனாதிபதித் தேர்தலை 1999.12.21ஆந் திகதி தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அரசியல் அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கிணங்க முன்கூட்டியே நடத்தினார். இத்தேர்தலிலும் வெற்றியீட்டிய சந்திரிக்கா குமாரதுங்க 199.12.22ஆந் திகதி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

2005ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் சந்திரிக்கா குமாரதுங்க 4வது ஜனாதிபதித் தேர்தலின்போது முன்கூட்டி தேர்தலை நடாத்தியதால் தமது எஞ்சிய பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதன்படி சந்திரிக்கா குமாரதுங்கவின் முதலாவது பதவிக்காலம் 6 ஆண்டுகாலம் முடிவடையும் நேரத்திலும் (2000 நவம்பர்) அவர் மீளவும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக வெளிக்கிளம்பிய ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் 2006 இல் தேர்தல் என்ற எதிர்பார்ப்பை முறியடித்துக் கொண்டு 2005 இலேயே இடம்பெற வேண்டியதாயிற்று. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் கீழான கட்டளைத் தேர்தல்கள் ஆணையாளரால் 2005.09.19 ஆம் திகதிய 1411/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

21.11.1999 இல் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 21.11.2005 இல் முடிவடையவிருந்ததால் அரசியலமைப்பின் உறுப்புரை 31(3) இற்கு அமைய வேட்பு மனுக்களைக் கையேற்றல், 07.10.2005 இல் மேற்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு 17.11.2005 இல் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

சந்திரிக்கா குமாரதுங்க இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்ததினால் அரசியலமைப்பு விதிகளின்படி அவருக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் பிரதான அரசாங்கக் கட்சியின் சார்பில் பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலும் பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் களமிறங்கினர். இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தமான சுனாமிப் பேரலை ஏற்பட்ட பின் ஓராண்டுக்குள் நடைபெற்ற தேர்தலாக இது அமைந்திருந்தது. இத்தேர்தல் சூழ்நிலையில் 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பற்ற பகுதிகளின் வாக்கெடுப்பு மாவட்டங்கள் சார்பாக பாதுகாப்பான பகுதிகளில் நிறுவப்பட்ட 294 மொத்த வாக்கெடுப்பு நிலையங்களில் 102 வாக்கெடுப்பு நிலையங்கள் முகமாலையிலும் 88 வாக்கெடுப்பு நிலையங்கள் ஓமந்தையிலும் நிறுவப்பட்டன. அவ்வாக்கெடுப்பு நிலையங்களில் 1,89,918 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் அவர்களில் ஒரு வாக்காளர் மாத்திரமே வாக்களித்தார் என்பது ஒரு வரலாற்றுத் தகவலாகும். இத்தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருசதவீதமான வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.

இத்தேர்தலின்போது வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகமாகக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாண வாக்காளர்கள் குறிப்பாக வட மாகாண வாக்காளர் இத்தேர்தலில் வாக்களிக்காத நிலையானது மஹிந்தவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. மொத்தமாக நாடெங்கிலும் அமைக்கப் பெற்றிருந்த 10,486 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பின்போது 98,26,908 பேர் வாக்களித்திருந்தனர். 10,9,869 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 73.77% வீதமானோர் வாக்குகளைப் பிரயோகித்திருந்தனர். இதன்படி செல்லுபடியான தொண்ணூற்றி ஏழு இலட்சத்து பதினேழாயிரத்து முப்பத்தொன்பது வாக்குகளும் மகிந்த ராஜபக்ஸ  பெற்றுக்கொண்ட வாக்குகள் 48,87,152. அதற்கிணங்க மொத்த செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேலதிகமாக 28,632 வாக்குகளைப் பெற்ற மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக 1419/11 ஆம் இலக்க 2005.11.18 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரமானது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆந் திகதி பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதுடன் இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்றது. பலவிதமான சர்வதேச நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும்கூட, மஹிந்த ராஜபக்ஸ விடாப்பிடியாக யுத்தத்தை இடைநிறுத்தாது வெற்றிகொண்டு இந்த யுத்தத்தின் வெற்றி நாயகனாக வரலாற்றில் பதிவானார். சிலநேரங்களில் 2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குரிமை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் தற்போதைய நிலைமையில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கலாம். இந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த ஒரு தேர்தலாகவே இத்தேர்தல் அமைகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் 2005 –

மாவட்டத் தேர்தல் முடிவுகள்

மேல்மாகாணம்

கொழும்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
534,431     (47.96%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   569,627(54.12%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,624  (0.21%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  2,057  (0.18 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.  2,174  (0.20 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 775  (0.07%)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  519  (0.05%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 422 (0.04%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   601  (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  398  (0.14%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P   410 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F    131     (0.01%)
திரு. எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U.N.A.F  74    (0.01%)

செல்லுபடியான வாக்குகள்  1,114,250 (96.86 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  12,879  (1.14 %)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,127,129 (76.75%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,468,537

கம்பஹா மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  596,698   (51.78%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 481,764  (44.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  2,790 (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   2,371  (0.22 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.   1,983  (0.18 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 856 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   631  (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  570 (0.05%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   609 (0.06 %)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A). 418   (0.04%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   343  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)  157    (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )   8 (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  1,089,277  (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  11,724  (1.06%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,101,001  (80.71%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,364,180

களுத்துறை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  341,693 (55.48%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 266,013 (43.00 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,623  (0.43%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   1,921  (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.          865  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 614  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  468 (0.08%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  422  (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   424  (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  D.U.A.  339  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  215  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  165   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  68    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  615,860  (98.95%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  6,517   (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 622,377  (81.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 764,305 

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
315,672 (44.30%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  387,150  (54.33%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,775  (0.39%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2,589  (0.36 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  1091 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  717  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  487 (0.07%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  584 (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   529 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  372  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   307  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )   219  (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   228   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  712,620  (98.64%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  9,817  (1.36%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 722,437  (79.65%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 907,038  

மாத்தளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
120,533 (48.09%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 125,937 (50.25%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1212 (0.48%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1217 (0.49 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) .     342  (0.14%)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 360  (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  224  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  228 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   208  (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  141  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   95  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  76   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   51  (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  250,620 (98.51%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  3,785  (1.49%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 254,405  (79.04%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 311,876 

நுவரெலியா மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
99,550 (27.97%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   250,428  (70.37%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,622  (0.74%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,465  (0.41 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  376  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  202  (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  199 (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   215  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  164  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P   146  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F   137     (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   84   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  355,825  (98.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,410   (1.50%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 361,285  (80.78%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 447,225

தென்மாகாணம்

காலி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  317,233  (58.11%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 239,320 (40.26%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2244  (0.38%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  173  (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  892 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524  (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 517  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 469(0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   388 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  305  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P  ) 221  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  136   (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  65   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  594,468  (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,540    (0.92%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 600,008  (81.94%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 732,289

மாத்தறை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)   279,411   (61.85%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 165,837  (36.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1687 (0.37%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1877 (0.42 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   554  (0.12 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  451  (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   451  (0.10%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   207  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A).    320  (0.07%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  140  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   119     (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   74   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  451,722  (99.11%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,077  (0.89%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 455,799  (80.96%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 562,987

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  202,918 (63.43%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 112,712  (35.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1066  (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1217  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  430  (0.13 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 370 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  352  (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  290  (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   162  (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  D.U.A.  196  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   84  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  100   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   28   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  319,925  (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,928   (0.91%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 322,853  (81.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396,595

வடமாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
1967  (25.00%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  5523  (70.20 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 72  (0.92%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  34  (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   120  (1.53 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 24  (0.31 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  12  (0.15%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   15  (0.19%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   21  (0.27%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A). 
31  (0.39%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   29  (0.37%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  16    (0.20 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   4   (0.05 %)

செல்லுபடியான வாக்குகள்  7,868   (92.30%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  656   (7.70%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,524  (1.21%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 701,968

வன்னி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
17,197  (20.36%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   65,798   (77.89%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 520  (0.62%)
அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  286  (0.34 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).          115  (0.14 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)
133  (0.16 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  71  (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   68  (0.08%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி  (U.L.F)   62  (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A. ) 107  (0.13%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   69  (0.08%)
திரு. நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  27     (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  23    (0.03 %)

செல்லுபடியான வாக்குகள்  84,476   (98.37%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1,388   (1.63%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 85,874  (34.30%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 250,386

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
28,836  (18.87%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   121,514  (79.51%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 892  (0.58%)
அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 578  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   225  (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 149  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  124  (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  43  (0.03%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   142  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  153  (0.10%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  104  (0.07%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  59  (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  18   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  152,837  (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1,778   (1.15%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 145,615  (48.51%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 348,728 

திகாமடுல்லை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
122,329 (42.88%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  159,198  (55.81 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,091  (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1,072  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   331  (0.38 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 188  (0.07 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   297  (0.07%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  134  (0.05%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)  203  (0.03%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  215  (0.08%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   82  (0.03%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   89      (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   38    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  285,267  (98.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,941   (1.02%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 288,208  (72.70%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396453

திருகோணமலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
55,680  (37.04%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  92,197  (61.33 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 792  (0.53%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  588  (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   276  (0.18 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 157  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  157 (0.10%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  71 (0.05%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   132  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  165  (0.11%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   67  (0.04%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    56      (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F  ) 26    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  150,334  (98.63%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,094   (1.37%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 152,428  (63.84%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 238,755

வடமேல் மாகாணம்

குருநாகல் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  468,597  (52.26%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 418,809 (46.72 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2357  (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2369  (0.26 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   1142  (0.13 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 695  (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  613  (0.07%)
திரு. விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   566(0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)    524 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  363  (0.04%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   255  (0.03%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   187      (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)  110    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  896,497   (99.07%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  8,458    (1.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 904,955  (80.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,124,076

புத்தளம் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
160,686 (48.14%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 169,264 (50.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1063  (0.32%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 811  (0.02 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   502  (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287  (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   292  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  203 (0.06%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   214  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  183  (0.05%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  175  (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    72    (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   31    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  333,883  (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  3,536  (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 337,319  (71.68%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 470,604

வடமத்திய மாகாணம்

அநுராதபுரம் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  231,040 (55.08%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 182,956 (43.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,378  (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,448  (0.35 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  478  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 569  (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 128  (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  367 (0.09%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   261 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A. )207  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   115  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   115   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   72    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  419,434  (98.92%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,563  (1.08%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 423,997  (78.98%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 536,808

பொலநறுவை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  110,499 (52.61%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  97,142  (46.25 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  589  (0.28%) அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  683  (0.33 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   226  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  226 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  221 (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   119  (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   141 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  81  (0.04%)   
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   31  (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )   48    (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  24   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  210,030  (99.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,002  (0.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 21,232  (80.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 263,609

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
192,734  (45.18%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   226,582  (53.11%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)
2,327  (0.55%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,990  (0.47 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) 614  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 468 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  101 (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  322  (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   363  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A).  239 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  224  (0.05%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி  (S.P.F )  217     (0.05 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  118   (0.03 %)

செல்லுபடியான வாக்குகள்  426,599  (98.43%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  6,825   (1.57%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 433,424  981.29%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 533,163

மொனராகலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  126,094 (56.94%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  92,244  (41.65 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 673  (0.30%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  943  (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   239  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 295  (0.13 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  286 (0.13%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  200 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   133 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  124  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   102  (0.05%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   73   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  44   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  241,450  (98.82%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,636  (1.18%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 224,086  (81.46%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 276,109 

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  294,260 (53.01%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 252,838 (45.55 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  2220  (0.10%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   2122  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  795  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  645  (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  557 (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  496 (0.09%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   393 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 
330  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   334  (0.02%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    206 (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   78  (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  555,074  (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,510   (0.98%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 560,584  (83.89%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 668,217

கேகாலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  293,184 (51.02%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 223,483 (47.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  1804  (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1457  (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  707  (0.15 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  437 (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  375 (0.08%)
விமல் கீகனகே ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  400 (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   355  (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 231   (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   152     (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    117  (0.07 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   71    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  468,773  (98.99%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,795   (1.01%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 473,564  (81.19%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 583,282

ஜனாதிபதித் தேர்தல் 2005

இறுதித் தேர்தல் முடிவுகள்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  4,887,152     (50.29%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 4,706,366 (48.43 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 35,425   (0.36%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  31,238    (0.32 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) 14,458   (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  9,296   (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  7,685   (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 6,639    (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   6,357   (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  5,082  (0.05%) விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  3,500   (0.04%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   2,525 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   1,316    (0.01%)

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 13,327,160 
அளிக்கப்பட்ட வாக்குகள் 9,826,778
செல்லுபடியான வாக்குகள் 9,717,039
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 109,739

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   4,858,520

குறைந்தபட்ச வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    
28,632

இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட மஹிந்த ராஜபக்ஸ  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
180,786