இலங்கையின் எதிர்கால செயல் திட்டங்களுக்கென இந்தியா 1250 மில். அமெரிக்க டொலர் நிதியுதவி

g.jpgஇலங்கை யின் எதிர்கால செயற்திட்டங்களுக்கென இந்தியா 1250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்குக் கிடைத்த பிரதிபலனாக இதனைக் குறிப்பிட்ட அமைச்சர்; ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் வடக்கில் ரயில் பாதைகள் நிர்மாணம் மற்றும் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளுக்கும் இந்நிதி உபயோகப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்க மளித்த அமைச்சர்; 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான செயற்திட்டத்தை மேற்கொள்வது டன் 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஓமந்தை-பளை, மடு-மதவாச்சி, மடு-பளை ஆகிய ரயில் பாதைகளே இந்நிதியில் நிர்மாணிக்கப்பட வுள்ளன. அத்துடன் சம்பூர் மின்சார நிலைய நிர்மாணிப்புக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் இந்தியா இலங்கைக்கு எதுவித அழுத்தத்தையும் வழங்கவில்லையெனவும் இலங்கை தனித்து தீர்மானமெடுப்பதையே இந்தியா விரும்புகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதேவேளை; இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியின் பயன் ஏனைய அயல்நாடுகளுக்கும் உபயோகமாக வேண்டும் என்பதே இந்தியப் பிரதமரின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *