தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான நூல்களின் வரவானது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக அமையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் எழுத்தாள ர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் சாகித்திய நூல்கள் நேற்று ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டன. அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல்களைக் கையேற்று உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
மக்களின் மொழியூடான அறிவு வளர்ச்சியானது இனங்களுக்கிடையில் அன்னியோன்ய புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதுடன் அதன் மூலம் அமைதியான அபிவிருத்தி நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தமிழ், சிங்கள மொழி மூலமான 17 நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும, லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார ஆகியோர் கலந்து கொண்டதுடன் எழுத்தாளர்களான தெனகம சிறிவர்தன தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, திக்குவல்லை கமால், ஏ.கே.ஏ. ரஸாக், பத்மா சோமகாந்தன், ரவி ரத்னவேல், மொகமட் ராசிக், எஸ்.அரியநாதன், எல்.டீ.எஸ். உபயரத்ன, வஜிர பிரபாத் விஜேசிங்க, டெனிசன் பெரேரா, அமரசிங்க குடகல்ஆர, மடுளுகிரிய விஜேரத்ன, உபாலி லீலாரத்ன, எம்.எல்.விதான பதிரண, சிறிசுமன கொடகே, கமல் பெரேரா ஆகியோர் தம்படைப்புகளை ஜனாதிபதிக்கு கையளித்தனர்.