26

26

என்பிபி அரசாங்கமும் தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகிறது – அருட்தந்தை மா. சக்திவேல் ! 

என்பிபி அரசாங்கமும் தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகிறது – அருட்தந்தை மா. சக்திவேல் !

 

சட்ட விரோத தையிட்டி விகாரைக்கு மேலதிகமாக புதிய மடாலயமும் அமைக்கப்பட்டுள்ளமையானது விகாரை விடயம் மீண்டும் தமிழர்களின் நீதிக் குரலை இராணுவத்தின் சப்பாத்துக்காலால் மிதித்து சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் தேசிய மக்கள் சக்தியும் அடக்கும் என்பதை நிரூபித்துள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அருட்தந்தை மா.சத்திவேல் , இது தமிழர்களை மீண்டும் போராட்ட வன்முறைக்கு தூண்டி பயங்கரவாதிகளாக்கும் அரச பயங்கரவாதத்தின் வன்முறையை கண்டிப்பதோடு அண்மித்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் இதற்கு தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ் முஸ்லிம் சிவில் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு !

எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ் முஸ்லிம் சிவில் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு !

 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு எதிராக தனது முறைப்பாட்டை பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்துள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் தாஹா ஐன்ஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த திங்கள் சபாநாயகரை சந்தித்து அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்று அளித்திருந்தோம். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் முஸ்லிம் சமூகம் குறித்து அவர் சில கருத்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது அத்தோடு காவல்துறை திணைக்களம் இது தொடர்பில் நடவடிக்கை என நாம் நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டம் காணும் “ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” 

ஆட்டம் காணும் “ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”

மும்மூர்த்திகளாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என சோடி சேர்ந்த பிள்ளையான் , வியாழேந்திரன் மற்றும் கருணா அணிக்கு அடுத்தடுத்து அடி விழுந்து வருகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் வியேழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இலக்கு வைத்து முன்னாள் அமைச்சர்களான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் ஓர் புதிய கூட்டணியை அறிவித்திருந்தனர். இவர்களுடன் இறுதியில் முன்னாள் பா.உ கருணா அம்மானும் இணைந்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் கருணா அம்மானுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளதுடன் வியாழேந்திரனும் கைதாகி குறித்த கூட்டணியில் பிள்ளையான் தனிக்கட்டையாக்கப்பட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு மீது சஜித் பிரேமதாச திடீர் கரிசனம் !

நாட்டு மக்களின் பாதுகாப்பு மீது சஜித் பிரேமதாச திடீர் கரிசனம் !

 

நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் இதுவரையில் இனங்காணப்படாத நிலையில் நாட்டில் மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று சமூகம் குரூரமான கொலை கலாசாரத்திற்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் இரையாக்கப்பட்டுள்ளன. நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரியவில்லை. நாட்டில் சட்டம் அமுலில் இல்லை. கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரைக் கூட இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் புலனாய்வுத் துறையின் இயலுமை எங்கனம் என்பதை இவ்வாறானதொரு சூழ்நிலையை வைத்து ஊகிக்க முடிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம் !

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம் !

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை (STF) பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு வருவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களை தெரிந்து வாக்களிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களை தெரிந்து வாக்களிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு, சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன். யாழ். மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். நீட்சியாக இந்தமுறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிட உள்ளோம். எதிர்வரும் காலங்களில் கடந்த காலத்தை போல மன்னார் மாவட்டத்தில் அனைத்து சபைகளிலும் போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு! 

சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு!

 

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோர் மீது பிரித்தானியா விதித்த தடை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ஐக்கிய இராச்சியத்தின் இந்த தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக LTTE ஆதரவாளர்களின் தொடர்ச்சியான செல்வாக்கின் விளைவாகும்.

இது நீதியல்ல, சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தியும் சலுகைகளை அனுபவித்தும் நமது தேசத்தின் நல்லிணக்கத்தை கண்காணிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடினமான முடிவுகளால் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

போர்க் குற்றவாளிகள் மீது பிரித்தானியா விதித்த தடையை வரவேற்கும் எம்பி சிறிதரன் ! வருத்தப்படும் முன்னாள் எம்பி அலிசப்ரி !

போர்க் குற்றவாளிகள் மீது பிரித்தானியா விதித்த தடையை வரவேற்கும் எம்பி சிறிதரன் ! வருத்தப்படும் முன்னாள் எம்பி அலிசப்ரி !

இலங்கையில் இறுதி உள்நாட்டு போர் முனைப்படைந்த காலங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா, புலிகளில் இருந்து விலகிய விநாயகமூர்த்தி முரளீதரன், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா ஆகியோர் மீது அண்மையில் பிரித்தானியா தடை விதித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி எம்.பி சிறிதரன், இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னணி தலைவர்கள் மற்றும் கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடை, ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று என்றார். அத்துடன் அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துகிறது. உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் வலிகளை உணராத கோமாளியின் பன்னாடைத் தனமான கிளுகிளுப்புப் பேச்சுக்கள் !

போராட்டத்தின் வலிகளை உணராத கோமாளியின் பன்னாடைத் தனமான கிளுகிளுப்புப் பேச்சுக்கள் !

 

எண்பதுக்களில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 வரையான நீண்ட நெடிய பாதையைக் கொண்டது. அப்போராட்டம் பற்றிய விமர்சனங்கள் பல இருந்தாலும் அதில் செய்யப்பட்ட அர்ப்பணிப்புக்களை யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது. போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் மக்களையும் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டும், மக்களைப் போராட்டத்தின் பங்குதாரர்களாக்க வேண்டும் என்பது எந்த வகையான போராட்டத்தினதும் அத்திவாரமாக இருந்தது. அதற்காக மக்களுடன் நெருங்கிப் பழகுவது, மக்களோடு மக்களாக வாழ்வது, அவர்களிடமே வாங்கி உண்பது இதுவெல்லாம் விடுதலைப் போராட்டங்களின் முக்கிய இயல்புகள்.

ஆனால் போராட்டத்தையே கூகுளில் தேடிக் கற்றுக்கொண்ட ஒரு உதவாக்கரைக் கூட்டம் தற்போது உருவாகி வருகின்றது. இதனையெல்லாம் கேவலமானதாக சித்தரிக்கின்றனர். ஊசி அர்ச்சுனா யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பா உ இளங்குமரனைக் குத்திப் பேசும் போது நீ வீடு வீடாகப் போய் கொடிவித்து எம்பி யான மாதிரியோ மாதிரியோ. நான் எம்பிபிஎஸ் என்று தன்னுடைய வர்க்க குணாம்சத்தை வக்கிரமாக வெளிப்படுத்தினார்.

மக்களோடு மக்களாக பணியாற்றாததாலேயே தமிழ் தேசியம் தனது கடைசி மூச்சில் உள்ளது. ஆனால் ஊசி அர்ச்சுனாவோ மக்களோடு மக்களாக பணியாற்றுவதை கேவலமாக சித்தரிக்கின்ற தனது மனநிலையைப் பொது வெளியில் கூச்சமின்றிச் சொல்கின்றார். அர்ச்சுனா போன்ற குறைவருத்தியுடையவர்களால் தமிழ் தேசியம் தலைமை தாங்கப்படுவதால் சாதாரண மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். கொழுத்துகின்ற வெய்யிலில் வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போன அடிமைத்தனத்தின் குறியீடான ரையைக் கட்டிக்கொண்டு குரைப்பதால் தான் தமிழ் மக்கள் இதுகள் தங்களைக் கடித்துவிடும் என்ற அச்சத்தில் தள்ளியே நிற்கின்றனர்.

இதற்குள் ஊசி அர்ச்சுனா விடும் இன்னுமொரு உல்டா என்ன வென்றால் நான் அரசியலை விட்டுவிட்டுப் போனால் டொக்டர் தொழில் இருக்கு, இலங்கையில் இல்லாவிட்டால் வெளிநாட்டுக்கு சென்று சொகுசாக செற்றிலாகி விடுவேன் என்பதாகும். ஊசி அர்ச்சுனா நீங்கள் வெளிநாடுகளில் வந்து வேலை செய்வதற்கு உங்களுடைய முன்னைய வேலையிடத்திலிருந்து நற்சான்றிதழ் இருக்க வேண்டும். அதை எந்த மருத்துவமனை உங்களுக்கு வழங்கும். தற்போது உங்களுடைய பரீட்சையிலும் நீங்கள் பெயிலாகிவிட்டீர்கள்.

மருத்துவருக்கு நல்ல பண்புகள் இருக்க வேண்டும். உங்கள் மீது வழக்குகள் மட்டும் தான் இருக்கின்றது. அதில் அரைவாசி வழக்குகள் மருத்துவர்களால் போடப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சுனா வெளிநாட்டுக்கு வந்தால் சில தொழில் பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நோயாளிகள், சக ஊழியர்கள் அவர்கள் கக்கூஸ் கழுவுவர்களாக இருந்தாலும் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். நீ என்ன படிச்சனி, எம்பிபிஎஸ் படிச்ச என்னிலும் பார்க்க உனக்கு கனக்கத் தெரியுமோ என்றெல்லாம் கேட்க முடியாது.

அர்ச்சுனா தன்னுடைய யூரியூப்பை நம்பி மக்கள் விரோதியாகாமல் தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவரைக்கும் தன்னுடைய அரசியலுக்கு இன்னொருவரை வென்றெடுக்க வக்கற்ற ஒருவராகவே அர்ச்சுனா இருக்கின்றார். அவரோடு பயணிப்பார் என்று நம்பப்பட்ட கௌசல்யா நரேந்திரன் தற்போது வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உண்மையில் என்ன நடந்தது. ஒரு சட்டத்தரணியாக கௌசல்யா நரேந்திரன் மக்களிடம் வந்து பேச வேண்டும்.

தன்னுடைய ஆசிரியர் வழங்கிய குற்றச்சாட்டை வைத்து சபையை பிழையாக வழிநடத்துகின்றார் அர்ச்சுனா மின்சாரசபை அதிகாரி குற்றச்சாட்டு !

தன்னுடைய ஆசிரியர் வழங்கிய குற்றச்சாட்டை வைத்து சபையை பிழையாக வழிநடத்துகின்றார் அர்ச்சுனா மின்சாரசபை அதிகாரி குற்றச்சாட்டு !

 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மின்சார சபை அதிகாரி ஒருவர் பா உ அர்ச்சுனாவுக்கு முகத்தில் அறைந்தது போன்று சில பதில்களையும் வைத்தார். தன்னுடைய முகத்தை மிக இறுக்கமாக வைத்திருந்த அந்த அதிகாரி , ஊசி அர்ச்சுனாவுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் அவருக்கு வழங்கிய குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு ஊசி அர்ச்சுனா இந்த சபையையும் நாட்டையும் தவறாக வழிநடத்துவதாக அர்ச்சுனாவின் முகத்தில் அறைந்தாற் போல் குற்றம்சாட்டினார்.

அரசியல் விடயங்கள் கதைக்க வேண்டாம் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தாண்டி யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பற்றி விவாதிக்க வேண்டிய இடத்தில் அதிகாரிகளை கூப்பிட்டு வைத்து அவமானம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டினார். மேலும் இதனை கண்டித்து ஆக்க பூர்வமாக நடக்காத கூட்டத்தை விட்டு தான் வெளியேறுவதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடையில் வெளியேறி ஸ்ரன்ட் அடிக்க வேண்டும். எம்பி சிவஞானம் சிறிதரன் அரசாங்க அதிகாரிகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று கொந்தளித்தன் பின்னணியில் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்பே காரணமாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள விடயத்துக்கு வெளியேறினால் அது தன்னுடைய பெயரைப் பாதிக்கும் என்பதால் இந்த விடயத்தில் அரச அதிகாரிகளுக்காக பா உ சிறிதரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தான் ஊசி அர்ச்சனா தமிழ் பெண்கள் சிலரை விபச்சாரிகள் என்று விமர்சித்ததற்கு பாராளுமன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பா உ சிறிதரன் அதனைக் கண்டித்து தமிழ் பெண்களை விபச்சாரிகள் என்று ஊசி அர்ச்சுனா சுட்டிக்காட்டியதை கணக்கெடுக்காது, சபாநாயகர் அர்ச்சுனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைக் கண்டித்திருந்தார். நாங்கள் தமிழ் தேசியத்தின் தூண்கள் என்றார். இப்ப மீண்டும் மல்லுக்கட்டுகின்றனர்.