நாட்டு மக்களின் பாதுகாப்பு மீது சஜித் பிரேமதாச திடீர் கரிசனம் !
நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் இதுவரையில் இனங்காணப்படாத நிலையில் நாட்டில் மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று சமூகம் குரூரமான கொலை கலாசாரத்திற்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் இரையாக்கப்பட்டுள்ளன. நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரியவில்லை. நாட்டில் சட்டம் அமுலில் இல்லை. கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரைக் கூட இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் புலனாய்வுத் துறையின் இயலுமை எங்கனம் என்பதை இவ்வாறானதொரு சூழ்நிலையை வைத்து ஊகிக்க முடிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.