ஆட்டம் காணும் “ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” 

ஆட்டம் காணும் “ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”

மும்மூர்த்திகளாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என சோடி சேர்ந்த பிள்ளையான் , வியாழேந்திரன் மற்றும் கருணா அணிக்கு அடுத்தடுத்து அடி விழுந்து வருகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் வியேழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இலக்கு வைத்து முன்னாள் அமைச்சர்களான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் ஓர் புதிய கூட்டணியை அறிவித்திருந்தனர். இவர்களுடன் இறுதியில் முன்னாள் பா.உ கருணா அம்மானும் இணைந்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் கருணா அம்மானுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளதுடன் வியாழேந்திரனும் கைதாகி குறித்த கூட்டணியில் பிள்ளையான் தனிக்கட்டையாக்கப்பட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *