எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ் முஸ்லிம் சிவில் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு !

எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ் முஸ்லிம் சிவில் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு !

 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு எதிராக தனது முறைப்பாட்டை பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்துள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் தாஹா ஐன்ஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த திங்கள் சபாநாயகரை சந்தித்து அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்று அளித்திருந்தோம். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் முஸ்லிம் சமூகம் குறித்து அவர் சில கருத்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது அத்தோடு காவல்துறை திணைக்களம் இது தொடர்பில் நடவடிக்கை என நாம் நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *