என்பிபி அரசாங்கமும் தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகிறது – அருட்தந்தை மா. சக்திவேல் ! 

என்பிபி அரசாங்கமும் தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகிறது – அருட்தந்தை மா. சக்திவேல் !

 

சட்ட விரோத தையிட்டி விகாரைக்கு மேலதிகமாக புதிய மடாலயமும் அமைக்கப்பட்டுள்ளமையானது விகாரை விடயம் மீண்டும் தமிழர்களின் நீதிக் குரலை இராணுவத்தின் சப்பாத்துக்காலால் மிதித்து சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் தேசிய மக்கள் சக்தியும் அடக்கும் என்பதை நிரூபித்துள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அருட்தந்தை மா.சத்திவேல் , இது தமிழர்களை மீண்டும் போராட்ட வன்முறைக்கு தூண்டி பயங்கரவாதிகளாக்கும் அரச பயங்கரவாதத்தின் வன்முறையை கண்டிப்பதோடு அண்மித்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் இதற்கு தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *