08

08

யாழ் வளிமண்டலம் மாசடைகின்றது – மேன்முறையிட்டு நீதிமன்றில் முறைப்பாடு !

யாழ் வளிமண்டலம் மாசடைகின்றது – மேன்முறையிட்டு நீதிமன்றில் முறைப்பாடு !

யாழ் வளிமண்டலம் மாசடைவதைக் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் பணித்துள்ளார். முன்னர் யாழ் மாவட்டத்தில் குடியிருந்த டொக்டர் உமா சுகி நடராஜா மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைத்த முறைப்பாடு தொடர்பிoooooல் சட்டமா அதிபர் மார்ச் 6 இல் மாசடைகலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் இருந்து வருகின்ற மாசும் சேர்ந்து யாழ் மாவட்டத்தின் வளிமண்டலத்தை மேலும் மாசடைய வைப்பதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையை அடுத்து யாழ் மாவட்டத்தின் வளிமண்டலம் தொடர்ச்சியாக ஒரு மாதகாலம் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான ரவீந்திரநாத் டாபரே, யாழ் விளிமண்டலத்தில் மாசுப்பொருட்கள் அதீத அளவில் காணப்படுவதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த துணைப் பொதுச் சட்டத்தரணி, அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் வளிமண்டல மாசடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரிவு படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். அதற்குள் யாழ் மாவட்டமும் அடக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு கணிசமான நிதி தேவைப்படுவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

ஆண்டுக்கு 2 சத வீதமான குழந்தைகள் பாதிப்போடு பிறக்கின்றனர் !

ஆண்டுக்கு 2 சத வீதமான குழந்தைகள் பாதிப்போடு பிறக்கின்றனர் !

இலங்கையில் பிறக்கின்ற 50 குழந்தைகளில் ஒரு குழந்தை பாதிப்போடு பிறக்கின்றது என்கிறார் சமூக மருத்து நிபுணர்களின் அமைப்பின் தலைவர் மருத்துவ கலாநிதி கபில ஜெயரட்னே. ஆண்டுக்கு இரண்டு வீதமான 4,000 முதல் 5,000 குழந்தைகள் பாதிப்போடு பிறப்பதாக மருத்துவ கலாநிதி ஜெயரட்னே தெரிவிக்கின்றார். இலங்கையில் ஆண்டுக்கு 247,000 குழந்தைகள் பிறக்கின்றனர். பாதிப்போடு பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இதய சம்பந்தமான பிரச்சினைகளோடே பிறக்கின்றனர். உலக பிறப்புக் குறைபாட்டு தினத்தை நினைவுகூரும் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மருத்துவ கலாநிதி ஜெயரட்னே இத்தகவல்களை வெளியிட்டார்.

வடக்கில் தொழில் துறைகளை துரிதமாக வளர்த்தெடுக்க அமைச்சுக் குழு யாழ் விஜயம் !

வடக்கில் தொழில் துறைகளை துரிதமாக வளர்த்தெடுக்க அமைச்சுக் குழு யாழ் விஜயம் !

யுத்தத்தால் கைவிடப்பட்ட தொழில்துறைகளை மீண்டும் இயக்குவதில் தேசிய மக்கள் சக்தி அரசு தீவிரம் காட்டி வருகின்றது. நான்கு தசாப்தங்களுக்கு முன் கைவிட்ப்பட்ட யாழ் சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயணத் தொழிற்சாலைகளை, அச்சுவேலி கைத்தொழில் பேட்டை என்பவற்றை மீளக் கட்டியெழுப்புவது பற்றி ஆராய கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் கொண்ட குழுவினர் யாழ் வந்திருந்தனர். இவர்களோடு வடக்கு ஆளுநர் நா. வேதநாயகன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீ பவானந்தராஜா, க. இளங்குமரன் மற்றும் மாவட்ட அரச அதிபர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

பாலியல் வன்கொடுமை புரிந்த ஆசிரியர் கைது !

பாலியல் வன்கொடுமை புரிந்த ஆசிரியர் கைது !

 

பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் எட்டு பாடசாலை மாணவிகளை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் அரலகங்வில பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைதாகியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இதேமாதிரியான ஒரு சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலும் பதிவாகியிருந்தது. அம் மாவட்டத்தின் பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியர் தச்துதன் தன்னுடைய தனியார் வகுப்பிற்கு மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகி கைது செய்யப்பட்டார். இதனை தேசம்நெற் அப்போது பகிரங்கப்படுத்தியிருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஓர் சில மாதங்களிலேயே தன்னுடைய பின்னணி மற்றும் செல்வாக்கினை பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பி விடுதலையாகி விட்டார். இப்போது மீண்டும் ஆசிரியர் சேவையில் உள்ளார். அவருடைய தனியார் வகுப்புகளுக்கு பெண் பிள்ளைகளை பெற்றோர் தொடர்ந்தும் அனுப்பிக் கொண்டு தான் உள்ளனர். இந்த விடயத்தில் கூட பாதிக்கப்பட்ட பெண் மாணவிகளின் நடத்தையே விமர்சிக்கப்பட்டது.

பாடசாலை ஆசிரியர்கள் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வரை பல இடங்களில் சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகார துஸ்பிரயோகம் செய்து தம்மிடம் கற்கும் மாணவிகள் மீது பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சமூகத்தின் பார்வை மற்றும் மனப்பாங்கும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது .

பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழியை சுமத்தும் நிலை தான் இன்றுவரை காணப்படுகிறது.

இதேவேளை நேற்றைய தினம் சாவகச்சேரியில் மகளிர் தின நிகழ்வில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் பாலியல் சுரண்டல்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் குறைவில்லாமல் தொடரும் வாள்வெட்டு ! 

வட்டுக்கோட்டையில் குறைவில்லாமல் தொடரும் வாள்வெட்டு !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மைய வருடங்களில் வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.,வாள்வெட்டு குழுக்கள் பொலிஸாரின் துணையுடன் தைரியமாக உலா வருவதாகவும் மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் பொலிசாரால் தாக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்திருந்தார். இதேவேளை கடந்த ஆண்டு வாள்வெட்டு குழுவின் தாக்குதலுக்கு அஞ்சி கடற்படை முகாமில் தஞ்சமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதிக்கு அருகில் வைத்து இராணுவத்தினரின் கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கிளீன் சிறிலங்கா திட்டத்திற்குள் கிளீன் வட்டுக்கோட்டையையும் உள்ளடக்க வேண்டும் என வட்டுக்கோட்டை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வவுனியாவில் இரட்டை கொலை சந்தேகநபர்களுக்கு பிணை ! 

வவுனியாவில் இரட்டை கொலை சந்தேகநபர்களுக்கு பிணை !

வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த காரணங்கள் இல்லை என்று பிணை வழங்க வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலின் போது பெற்றோல் ஊற்றி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் எரித்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள் முன்வைக்கப்பட வில்லை. அதனால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதவில்லை என்று கூறி குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது குற்றவாளிகள் தப்பிக்கின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது குற்றவாளிகள் தப்பிக்கின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை !

 

பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கு ஒவ்வொருவரும் தயாராகினால் சமூக மாற்றம் தானாகவே ஏற்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது எனவும் அப்போது அவர் கவலை தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும் ஓரணியில் கைகோர்த்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் ஆளுநர் அறைகூவல் விடுத்தார். பெண்களின் உரிமைகள் இன்றும் மறுக்கப்படுவதனால்தான் மகளிர் தினத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் என்று கூறிய ஆளுநர் இன்று பெண்கள் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் குறிப்பாக வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகள் என எங்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். சமூக மாற்றம் என்பது நாம் அனைவரும் பெண்களை மதிக்கும் போது தானாக வரும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இணக்க அரசியல் சாபக்கேடு இல்லை என்கிறார் மகிந்தவின் கிளி அமைப்பாளர் மதனவாசன்

இணக்க அரசியல் சாபக்கேடு இல்லை என்கிறார் மகிந்தவின் கிளி அமைப்பாளர் மதனவாசன்

பேரம்பேசும் சக்தியாக இல்லாமல் ஆட்சியில் பங்களராக தமிழர்கள் இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கிளி அமைப்பாளராக பொறுப்பேற்ற மதனவாசன் தமிழ்மக்களுக்கு ஆலோசனை. இளையோர் தங்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியல் மட்டுமே எமது அரசியல் என்பதை கைவிட்டு இணக்க அரசியலில் இணைய வேண்டும் என்று மேலும் கூறினார். ப. மதனவாசன் அண்மையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

தொடரும் தையிட்டி விவகாரம் சிறிதரனோடு கை கோர்க்கின்றார் மகிந்தவின் மதனவாசன் !

தொடரும் தையிட்டி விவகாரம் சிறிதரனோடு கை கோர்க்கின்றார் மகிந்தவின் மதனவாசன் !

யாழ்-தையிட்டி பகுதியில் விகாரை கட்டவென காணிகள் சுவீகரிக்கப்படவில்லை. ஆகவே அங்கு விகாரை கட்டியிருப்பது சட்ட விரோதமானது. இதனை புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் ஏற்றுக் கொள்வாரா?. காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன? என பாராளுமன்றில் எம்பி சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இவ் விடயம் தொடர்பில் காணி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தகவல்கள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்பின்னர் முழுமையான பதிலை வழங்குகின்றேன் என்று பதிலழித்தார்.

இதேவேளை இன நல்லிணத்திற்காக யாழ் தையிட்டி விகாரையை அகற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஆதரவு என்கிறார் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன்.

இளகிய ரணிலை கண்டு மெஹ்தி ஹசன் தூக்கி தூக்கி அடித்தார் – அலி சப்ரி கொந்தளிப்பு

இளகிய ரணிலை கண்டு மெஹ்தி ஹசன் தூக்கி தூக்கி அடித்தார் – அலி சப்ரி கொந்தளிப்பு

 

அல்ஜசீராவின் மெஹ்தி ஹசனுடனான முன்னாள் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய நேர்காணலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்காக வக்காலத்துக்கு வந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி.

சப்ரி அல்ஜசீராவின் பேட்டியை ஊடக வேடமிட்டு நடத்தப்பட்டதாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் அலிசப்ரி மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ

நான் மெஹ்தி ஹசனை முன்னரும் பார்த்திருக்கின்றேன்இஅவர் எப்போதும் மோதல்போக்கை கொண்ட ஆக்ரோஷமானவராக காணப்படுவார்.

ரணில்விக்கிரமசிங்க உடனான அவரது நேர்காணால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இது பதில்களைபெறுவது பற்றியது அல்ல. இது ஊடகத்துறை தொடர்பானது இல்லை. இது நிகழ்ச்சிநிரல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பானது இது தாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு நேரடி விசாரணை.

பேட்டி வழங்குபவருக்கு எதிரியின் பகுதிக்குள் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இலங்கை எதிர்ப்பு உணர்வு கொண்ட பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மெஹ்தி பதில்கள் குறித்து கூச்சலிட்டார்இ விளக்கங்களை துண்டித்தார்இமேலும் தனது சொந்த சொல்லாடலிற்கு ஏற்றவாறு வார்த்தைகளை திரித்தார். பதில்கள் தனது விருப்பத்திற்கு ஏற்ப இல்லாவிட்டால் அவர் செவிமடுக்க மறுத்தார்.

உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்களை அவர் இவ்வாறு கையாள்வாரா என்ற கேள்வி எழுகின்றது.அவர்களின் யுத்த குற்றங்கள்இஅவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து இதேயளவு ஆக்ரோசத்துடன் விமர்சிப்பாரா? அல்லது நம்மை போன்ற சிறிய நாடுகளின் தலைவர்களிற்காக இது ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று குறிப்பிட்டுள்ளார். சப்ரியின் மன வேதனை நியாமனதாகவே படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்இ சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில்இ சனல் 4 இல் கிருஷ்ணன் குருமூர்த்தியின்இ ரணில் விக்கிரமசிங்கவுடனான நேர்காணல் போன்று மெஹ்தீனூடனான நேர்காணல் வினைத்திறனாக அமையவில்லை என தேசம் ஜெயபாலன் தெரிவிக்கின்றார். சனல் 4 இல் குருமூர்த்தியால் ரணில் அம்பலப்படுத்தப்பட்டார். அல்ஜசீராவில் ரணிலை பதிலளிக்க விடாமல் தொடர்ந்து குறுக்கிட்டமையால் இந்த நேர்காணல் இறுதியில் எதையும் சாதிக்க வில்லை. போர்க்குற்றம் தொடர்பான கேள்விகளில் ரணில் நழுவலாகவே பதிலளித்தார். உண்மையில் ரணிலிடமிருந்து இன்னும் காத்திரமான வாக்குமூலத்தை வாங்கும் சந்தர்ப்பத்தை மெஹ்தீன் தவறவிட்டுவிட்டார். செத்த பாம்பை அடித்தது தான் மிச்சம் எனவும் அவர் தெரிவித்தார்.