11

11

அமெரிக்காவை தோற்கடிப்போம் – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !

அமெரிக்காவை தோற்கடிப்போம் – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !

இலங்கைக்கு வெளியே தமிழ் மக்கள் அதிகம் வாழும் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால் ட்ரம் கனடாவை தங்களுடைய 51வது மாநிலம் என்று குறிப்பிட்டதும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத இறக்குமதி வரியை அறிவித்ததும் தெரிந்ததே. இந்நிலையில் புதிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வர்த்தக போரில் பெறுவோம் எனச் சூளுரைத்துள்ளார்.

அமெரிக்கர்கள் எங்களை தவறாக எடைபோடக்கூடாது ஹொக்கியை போல வர்த்தகப்போரிலும் அமெரிக்காவை தோற்கடிப்போம் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, அமெரிக்காவின் வரிகளிற்கு பதில் வரிகளை விதிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2007 இல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பொருளாதார வீழ்ச்சி அலை உலகைத் தாக்கிய காலகட்டத்தில்இ மார்க் கார்னி கனடாவின் மத்திய வங்கியின் தலைவராக இருந்தவர். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் மத்திய வங்கியான பாங்க் ஒப் இங்கிலன்டின் தலைவராகவும் இருந்தவர். உலகின் இரு செல்வந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் தலைவராக இருந்த ஒரேயொருவர் மார்க் கார்னி.

இவருடைய ஆட்சியின் கீழ் கனடா பொருளாதார ரீதியில் மீட்சிபெற நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரமின் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவை எல்லை நாடாகக் கொண்ட கனடாவை மிகப் பாரிய அளவில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. மார்க் கார்னியின் ஆட்சி எவ்வாறு இதனை எதிர்கொள்ளப் போகின்றது என்பதை ஐரோப்பிய தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றார்கள்.

மார்க் கார்னி குடிவரவாளர் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை இலங்கைத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வன்னிப் பெருநிலப்பரப்பில்: கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையிலும் பார்க்க அதிகமான தமிழர்கள் ரொறன்ரோ ஸ்காபரோவில் வாழ்கின்றனர். இவர்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியவரும்.

 

சர்வதேச நாணயநிதியம் தேசிய மக்கள் சக்தி அரசை வரவேற்கின்றது! உதய கம்பன்பில கரித்துக் கொண்டுகிறார் !

சர்வதேச நாணயநிதியம் தேசிய மக்கள் சக்தி அரசை வரவேற்கின்றது! உதய கம்பன்பில கரித்துக் கொண்டுகிறார் !

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை எதிர்பார்ப்புக்கும் மேலாகக் கட்டியெழுப்புவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அடுத்த ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனால் நாட்டில் ஏற்ப்ட்டு வரும் பொருளாதார மீட்சியை தடுக்கும் வகையிலான வேலைநிறுத்தங்கள் போராட்டங்களை தவிர்க்குமாறும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐந்தரை மாதங்களில் பெற்றுள்ள கடன் தொகை 5,156 பில்லியன் ரூபாய் என்றும், இந்தப் பணத்தில் அது என்ன செய்துள்ளது என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பிவிதுர ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில கூறுகிறார்.

உதய கம்மன்பில இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த போது, நம் நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது அனைவரும் அறிந்த உண்மை. அப்படியானால், இந்த ஆண்டு பட்ஜெட் உரையை முன்வைக்கும்போது, அரசாங்கம் எவ்வளவு கடனைச் சந்தித்துள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டிற்கு வெளிப்படுத்துவார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பட்ஜெட் உரையில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. எனவே, எதுவாக இருந்தாலும், மிக உயர்ந்த மட்டத்தில் கடனை எடுத்துள்ளது என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்துவது நமது கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

ஐந்து அம்சங்கள் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை விரைவில் – கல்வி அமைச்சர் ஹரிணி !

ஐந்து அம்சங்கள் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை விரைவில் – கல்வி அமைச்சர் ஹரிணி !

 

புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும், அதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்கள் ஐந்து முக்கிய தூண்களின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பொது மக்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் சரியான மதிப்பீடு ஆகிய முக்கிய தூண்களின் கீழ் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்யுள்ளார்.

இந்த நிலையில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு 2026 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் வேலையற்ற பட்டதாரிகள் வன்னி, மலையகத்தில் பணியாற்றத் தயாரில்லையா ? தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க கோரிக்கை !

யாழ் வேலையற்ற பட்டதாரிகள் வன்னி, மலையகத்தில் பணியாற்றத் தயாரில்லையா ? தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க கோரிக்கை !

வடக்கு – கிழக்கில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தங்களுக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று காத்திருக்கின்றனர். ஆனால் வன்னியில், மலையகத்தில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நிரப்ப தென்னிந்தியாவில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வாருங்கள் என்கிறார் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன். இதே கருத்தை பத்து ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வந்து பெருந்தோட்டப் பாடசாலைகளில் தமிழ் மொழியில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“தோட்டத்துறை பாடசாலைகளில் கற்பிக்க இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வருவதற்கான திட்டத்தை நான் முன்வைத்தேன். அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன். ஆனால் அந்த நேரத்தில் ஜே.வி.பி இந்த நடவடிக்கையை எதிர்த்தது. தற்போதைய அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன். தோட்டத் துறை பள்ளிகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மொழி பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக செயலாற்றிய எம்.பிய இராதாகிருஷ்ணன் இந்தியாவில் இருந்து தமிழ்மொழி ஆசிரியர்களை கொண்டு வாருங்கள் என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருப்பதானது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகின்றது.

யாழ்ப்பாணத்தில் போராடும் வேலையில்லாப் பட்டதாரிகள் ஏன் வன்னியில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தைக் கூட முடியாதவர்களாக உள்ளனர். இவர்கள் ஏன் மலையகம் சென்று பணியாற்றத் தயாராக இல்லை என்ற கேள்விகள் எழுகின்றது. மேலும் இந்த வேலையற்ற பட்டதாரிகள் பெரும்பாலும் கலைப்பாடங்களை மட்டுமே கற்பிக்கக் கூடியவர்களாகவும் ஏனைய அடிப்படைப் பாடங்களான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் பாடங்களை கற்பிக்கக்கூடியவர்கள் இல்லை என்றும் தெரியவருகின்றது.

அது மட்டுமல்ல கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மலையகத்துக்கு கற்பிக்கச் சென்றவர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பிரதி அமைச்சர் வி ராதாகிருஷ்ணன் தென்னிந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவேற்க முனைகின்றாரா என்பதும் கவனிக்கப்பட வேண்டும். அண்மையில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை எழுத்தறவற்றவர் கைநாட்டு கள்ளத் தோணி என்றெல்லாம் இழிவுபடுத்தி இருந்தார். அதேபோல் மற்றுமொரு பா உ எஸ் சிறிதரன் மலையகத் தமிழர்களை வடக்கத்தையான் என விழித்திருந்தார். இவ்வாறான தொடர்ச்சியான இழிவுபடுத்தல்கள் தமிழ் சமூகங்களை தொடர்ந்தும் கூறுபடுத்தி வருகின்றது.

மேலும் இந்த வேலையற்ற பட்டதாரிகளும் அரச வேலை கிடைத்ததும் தாங்கள் செல்கின்ற இடங்களில் மனப்பூர்வமாக பணியாற்றுவது இல்லை என்ற கருத்துக்களும் மேலோங்கியுள்ளது. மலையகத்தில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலும் வைத்திருப்பார்கள். திங்கள் கிழமை மதியத்திற்கு மேல் பாடசாலைக்குச் சென்று வெள்ளிக்கிழமை மதியத்தோடு யாழ்ப்பாணம் திரும்பிவிடுவார்கள். இவர்கள் தாங்கள் கற்பிக்கின்ற மாணவர்களை முன்னேற்றுவதில் அவ்வளவு அக்கறைகொள்வதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் இன்றும் உள்ளது.

அனுர ஒரு வர்க்கப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை ! : சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

அனுர ஒரு வர்க்கப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை ! : சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

 

அனுரகுமார திசநாயக்க அதிகாரத்திற்கு வந்ததை தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதை ஒரு அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றமாக கருத முடியாது என சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கத்தின் மாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நூல் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. அனுரகுமார திசநாயக்க ஆட்சிக்கு வந்துள்ளதால் ஒரு வர்க்க மாற்றம் ஏற்படும் என்ற அனுமானத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது. இடதுசாரி நட்சத்திரம் என ஏகேடியை குறிப்பிட்டுள்ளார்கள்.மாவோ குறித்து ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் சீன வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் என குறிப்பிட்டிருந்தார். அனுரகுமார திசநாயக்க ஒரு வர்க்கரீதியான புரட்சி மூலம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றவில்லை.

அரகலயவின் போது பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும், காணாமல்போனோர் விவகாரம் உட்பட பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன் ஊடாக ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்தது, அந்த சமூக மாற்றத்தை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.

அனுரகுமாரதிசநாயக்க தன்னை ஒரு இடதுசாரியாக எந்த மேடையிலும் அறிமுகப்படுத்தவில்லை, தேசிய மக்கள் சக்தி ஒரு இடதுசாரி கட்சி என எந்த மேடையிலும் அறிவிக்கப்படவில்லை எனவும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டினார்.

யூடியூப்பர் SK கிருஷ்ணாவுக்கு சிறை !

யூடியூப்பர் SK கிருஷ்ணாவுக்கு சிறை !

 

யூடியூப்பர் SK கிருஷ்ணா அவருடன் உதவி செய்வது போன்றதான வீடியோ உருவாக்கத்தில் ஈடுபட்ட நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசம்நெற்றில் கடந்த சில தினங்களாகவே சுட்டிக்காட்டப்பட்டு வரும் யூடியூப்பர் கிருஷ்ணாவின் உதவி செய்யும் காணொளிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தயிருந்தமை தெரிந்ததே. கிருஷ்ணா ஒரு வீட்டிற்கு சென்று உயர்தர வகுப்பு பரீட்சையில் ஏ, 2பி எடுத்த இளம் மாணவியை அநாகரீகமாக நடத்திய காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறான பின்னணியில் அவர் உட்பட நால்வர் ஞாயிற்றுக்கிழமை (March 09) அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து மார்ச் 10இல் எஸ் கே கிருஷ்ணா மல்லாகம் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

கேள்விச் செவியன் அர்ச்சுனா, ஊரைக் குழப்பிய தருணங்கள் – கூகிள் அறிவாளியின் அதிக பிரசங்கித்தனம் !

கேள்விச் செவியன் அர்ச்சுனா, ஊரைக் குழப்பிய தருணங்கள் – கூகிள் அறிவாளியின் அதிக பிரசங்கித்தனம் !
கடந்த வாரம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா ஆர்வக்கோளாறினால் முஸ்லீம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் முஸ்லீம் மக்களுக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மார்ச் 8 இல் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது 1951 ஆண்டு முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அர்ச்சுனாவும் அழையா விருந்தாளியாக தனது கருத்தை திணித்துள்ளார்.
முஸ்லீம் விவாக விகாரத்துச் சட்டத்தை நுனிப்புல் மேய்ந்த எம்பி அர்ச்சுனா முஸ்லீம்களிடையே 12 வயதிலேயே சிறுவயது திருமணம் இடம் பெறுவதாகவும் அதேநேரம் திருமணம் முடிக்கும் போது மணப் பெண்ணின் சுய சம்மதம் மட்டுமே கருத்தில் எடுக்க வேண்டும் எனவும், விவாகரத்தின் போது ஆணும் பெண்ணும் வெவ்வேறாக கையாளப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அர்ச்சுனாவின் கருத்துக்களை முஸ்லீம் சமூகம் முற்றாகவே நிராகரிக்கின்றது. முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாமல் எம்பி அர்ச்சுனா தமது தனித்துவமான சட்டத்தில் கருத்து வெளியிட்டமையை கண்டிக்கின்றனர்.
அர்ச்சுனா முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு தெரிவித்த கருத்துக்கள் ஏற்கனவே பல கடந்த கால கசப்பான அனுபவங்களால் சிதைந்து போய் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான உறவுவை மேலும் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக இனங்களுக்கான நல்லிணக்கத்திற்காக பாடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லீம் எம்பிக்கள் யாழ்ப்பாண தேச வழமைச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிப்பது எப்படி பொருத்தமற்றதோ அப்படியே எம்பி அர்ச்சுனாவின் கருத்தும் எடுத்துக் கொள்ளப்படும். இதனையே பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சி முஸ்லீம் எம்பிக்களும் அர்ச்சுனாவின் கூற்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கு பாராளுமன்றம் இடமளிக்கக்கூடாது என எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் சபையில் வலிறுயுத்தினர். அதேநேரம் ஆளும் கட்சி என்பிபி முஸ்லீம் எம்பியும் பிரதியமைச்சருமான முனீர் முளப்பரும் அர்ச்சுனா உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அர்ச்சுனாவை குறுக்கிட்டு, தெரியாத விடயங்களை கதைக்க வேண்டாம்” எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் மகளிர் விவகார அமைச்சர் போல்ராஜ் தெரிவித்த கருத்துக்களும் முஸ்லீம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் ஆராய மல்டி செக்டோரியல் கொமிட்டி ஒன்று உருவாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை நிராகரிக்கும் சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக், ஏன் பல துறை பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். நாங்கள் முஸ்லீம்கள். தனித்துவமான இனம். எங்களுடைய முஸ்லீம் பிரதிநிகளை உள்ளடக்கியே இந்த விடயம் கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார்.
முஸ்லீம் பெண்கள் சார்பில் குரல்கொடுத்த சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக் எம்பி அர்ச்சுனா யுஎன்டிபி அறிக்கையை சுட்டிக் காட்டி தெரிவித்த கருத்தை நிராகரிக்கின்றார். நாங்கள் யுஎன்டிபி அறிக்கையை பின்பற்றுபவர்கள் அல்ல. நாங்கள் அல்-குரான்ஜயும் ஹதீஸ்யையும் பின்பற்றுபவர்கள். ஆகவே யாரும் யாருடனும் இருக்கலாம் , விரும்பினால் திருமணம் செய்யலாம், இல்லை பிரியலாம் என்பது எங்களுக்கு பொருந்தாதவைகள் என்கிறார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட எம்.பி மொகமட் தாஹிர், மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எம்பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்பி சலீம் நளீம் ஆகியோரும் எம்பி அர்ச்சுனா மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
எம்பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எமது மார்க்க விடயங்களில் அர்ச்சுனா எம்பி மூக்கை நுழைக்க கூடாது. அவர் சமூக வலைத்தளங்களில் தான் பெயர் ,புகழ் பெற வேண்டும் என்பதற்காக எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நிலையை நாம் காண்கின்றோம். இவர் தனது பைத்தியத்தை போக்க நல்ல வைத்தியத்தை பெற வேண்டும். அவரை சபாநாயகர் புத்தி சொல்லி வழிநடத்த வேண்டும் என்றார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட எம்பி அர்ச்சுனா
இதற்கு பதிலளிக்கையில், பொதுவான மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை மட்டுமே நான் இங்கு பெண்கள் சார்பாக கூறினேன் .இங்கு முஸ்லிம் எம்.பி.க்கள் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன்.முஸ்லிம் மதம் என்பது நாங்கள் நினைப்பதுபோன்று சிறிய மதம் அல்ல.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் மதம். அந்த மதத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்கு நாங்கள் யாரும் முயற்சிக்கவில்லை. எமது ரத்தம் அவர்கள். நான் சொன்ன விடயம் சிறுபிள்ளைகளையும் பெண்களையும் மட்டுமே கருதியது. மதத்தை நிந்திப்பதற்காக நான் கூறவில்லை என்று கூறி ஒருவாறு சமாளித்தார். முஸ்லீம் பெண்களுக்கு நீலிக் கண்ணீர் இதே எம்பி அர்ச்சுனா தான் யாழ்ப்பாண என்பிபி எம்பிகள் மூவரையும் பெண் எம்பிக்கள் என கூறியிருந்தார். அவரைப் பொறுத்தவரை பெண்மை என்பது மலினமானது எ‌‌ன்ற ஆணாதிக்க மனோபாவ கருத்தியலாக தான் அக் கூற்று இருந்தது. தன்னை மேதாவியாக காட்டிக் கொள்ளும் வைத்திய கலாநிதிக்கு எல்லா விடயத்திலும் தனக்கிருக்கும் குறையறிவை உணராதவராகவே இருந்து வருகிறார்.
முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் முஸ்லீம் மக்களின் கருத்தும் முஸ்லீம் பெண்களின் கருத்துக்குமே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் ஒரு பிரத்தியேக தனிநபர் சட்டம். அச்சட்டத்தின் வரையறைக்குள் வருபவர்கள் அது தொடர்பில் தமது உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ள முடியும். உலகெங்கும் சமூக வலைத்தளங்களினூடாக பரப்பப்பட்டு வரும் “ இஸ்லாமிய போபியா” தொடர்பில் இலங்கை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.