சர்வதேச நாணயநிதியம் தேசிய மக்கள் சக்தி அரசை வரவேற்கின்றது! உதய கம்பன்பில கரித்துக் கொண்டுகிறார் !
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை எதிர்பார்ப்புக்கும் மேலாகக் கட்டியெழுப்புவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அடுத்த ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனால் நாட்டில் ஏற்ப்ட்டு வரும் பொருளாதார மீட்சியை தடுக்கும் வகையிலான வேலைநிறுத்தங்கள் போராட்டங்களை தவிர்க்குமாறும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐந்தரை மாதங்களில் பெற்றுள்ள கடன் தொகை 5,156 பில்லியன் ரூபாய் என்றும், இந்தப் பணத்தில் அது என்ன செய்துள்ளது என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பிவிதுர ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில கூறுகிறார்.
உதய கம்மன்பில இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த போது, நம் நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது அனைவரும் அறிந்த உண்மை. அப்படியானால், இந்த ஆண்டு பட்ஜெட் உரையை முன்வைக்கும்போது, அரசாங்கம் எவ்வளவு கடனைச் சந்தித்துள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டிற்கு வெளிப்படுத்துவார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பட்ஜெட் உரையில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. எனவே, எதுவாக இருந்தாலும், மிக உயர்ந்த மட்டத்தில் கடனை எடுத்துள்ளது என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்துவது நமது கடமையாகும் என தெரிவித்துள்ளார்.