பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !
ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்
பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !
ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்
இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் ஏழை – நாடாளுமன்றத்தில் அமைச்சர் உபாலி !
இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் உள்ளதாகக் கிராமிய அபிவிருத்தி , சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவித்தபோது, கிராமிய வறுமை இந்த நாட்டிற்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. நம் நாட்டில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் இருக்கிறார் . அவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் வசிக்கின்றனர் . கிராமப்புற வறுமையை ஒழிப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முக்கியமாகக் கவனம் செலுத்தியுள்ளது. கிராமப்புற, அரை நகர்ப்புறம், மலையகம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்படுகின்றனர். மேலிருந்து கீழாகப் பாய்ந்து செல்லும் அபிவிருத்திக்குப் பதிலாக, கிராம மக்களின் தேவைகளை ஆராய்ந்து, கிராமப்புற அபிவிருத்தி திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்த மக்களுக்கு வசதிகளை வழங்குவோம் என்று அமைச்சர் கூறினார் .
சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !’
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைக்கப்பட்டது தமக்கு எந்த ஏமாற்றத்தை தரவில்லையெனவும் தமிழரசுக் கட்சியை கீழ்நிலைக்கு கொண்டுச் செல்ல எவராலும் முடியாது எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பிய பதில் கடிதம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் நலன் குறித்து சிந்திக்க வேண்டுமென தாம் ஏற்கனவே தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளியில் கூறப்படுவது போல தமது கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் தாம் ஒற்றுமையாகவே உள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாதது மட்டும் தான் குறை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் ! பா உ ரவிகரன் – அமைச்சர் பீமல் ரத்நாயக்கா
வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தவில்லை எனில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் எச்சரித்துள்ளார்.
அண்மையில் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் போதைப் பொருட்களையும் கொண்டுவரும் இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிறிதரன் யாழ் சிறையில் கென்று சந்தித்து வந்தார். வவுனியாவில் உள்ள சிறைக்கும் சென்று இ;ந்திய மீனவர்களைப் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் பாதிக்கப்படும் வடக்கு மீனவர்கள் விடயத்தில் பா உ சிறிதரனோ தமிழ் தேசிய பா உ க்களோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.
மாறாக தற்போது தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ தேசிய மக்கள் சக்தியின் வழியில் மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அத்துமீறும் இந்திய மீனவர்கள் கட்டுப்படுத்தப்படா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். பாராளுமன்ற சபைத் தலைவர் பீமல் ரத்நாயக்காவும் இதே கருத்தை நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய நடுவன் அரசும் தமிழக அரசும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவதைத்தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போராட்டத்தில் குதித் வடக்கு மீனவர்கள் இதே கோரிக்கையை யாழில் உள்ள இந்திய துணைத்தூதுரகத்திடம் கையளித்தள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் வடக்கு மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போதும் இதே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கூறுகையில், “இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும்.அதேபோல், இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர். கடற்றொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் கடற்றொழிலாளர்கள் வீதியில் இறங்கிப்போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு தமிழ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் சபையில் உரையாற்றிய பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த கால அரசாங்கத்தை போலே நீங்களும் இலங்கை கடற்றொழிலாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம். வடக்கு, கிழக்கை பொறுத்த வரையில் கடற்றொழில் என்பது பொருளாதாரத்தின் மையம். அதனை திட்டமிட்டு அழிப்பதற்கு முன்னைய அரசாங்கம் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கின்றோம். எனவே, தற்போதைய கடற்றொழில் அமைச்சர் அதைக்கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் உள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தங்கள் நாட்டு கடற்றொழிலாளர்கள் மீது இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்போது பதிலளித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தரும் போது, இலங்கை அரசு இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !
வடபகுதியில் அதிகரிந்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒருதொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாகவும் எனவே சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொதுமக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மார்ச் 4 பாராளுமன்ற அமர்வின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பா உ ரஜீவன் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் தனிநபர் பிரேரணையை நேற்று கொண்டு வருவதை முன்மொழிவது போன்று தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ துரைராசா ரவிகரனின் உரை அமைந்தது.
அங்கு மேலும் பேசிய பா.உ ரவிகரன், போதையால் நாடுமட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கின்றது. இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன். இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்றார் பா உ துரைராசா ரவிகரன்.
இதற்கிடையே முல்லைத்தீவில் பள்ளி மாணவி கொண்டு சென்ற நீரை அருந்திய பள்ளி மாணவிகள் வாந்தி எடுத்து நோய்வாய்ப்பட்ட சம்பவம் மார்ச் 4ம் திகதி நடைபெற்றுள்ளது. இதனை விசாரிப்பதை விடுத்து மாணவி கசிப்பு கொண்டுவந்துவிட்டார் என்று எண்ணி ஆசிரியர் பள்ளி மாணவியைத் அடித்துள்ளார். தன்னுடைய மகளைத் தாக்கிய ஆசிரியரை அம்மாணவியின் தந்தை போய்த் தாக்கியுள்ளார். இப்பொதுழுது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
: ‘கட்டிப் போடுங்கள்’, ‘தன் வாந்தியை உண்ணும் நாய்கள்’ பா உ அர்ச்சுனா மீது அமைச்சர் சந்திரசேகர் பாய்ச்சல் !
பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீது பாய்ந்தார் அமைச்சர் சந்திரசேகர். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் நேற்று மார்ச் 5இல் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த கொண்டுவந்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அமைச்சர் சந்திரசேகர் பொறுமையை இழந்து மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பா உ அர்ச்சுனா எழுந்து குறுக்கிட்டு குறுக்கிட்டு கத்தியதைத் தொடர்ந்தே அமைச்சர் சந்திரசேகர் கொதித்தெழுந்தார்.
வடக்கில் போதைப்பொருட்கள் மிக முக்கியமான பிரச்சினையாகி பல்வேறு சமூகப் பிறள்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு சமூகக் கலாச்சாரச் சீரழிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றது. இது பற்றி இதுவரை மௌனமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் தனிநபர் பிரேரணை விவாதத்திற்கு வந்ததும் அது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தன்னுடைய தனிநபர் பிரேரணையில் பா உ ரஜீவன் போதைப் பொருட்களே வன்முறைகளுக்கும் வாள் வெட்டுகளுக்கும் இட்டுச்செல்வதைச் சுட்டிக்காட்டினார். சமூகப் பிலதிநிதிககள் அடங்கிய குழக்களை அமைத்து முப்படையினரும் சேர்ந்து இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய பா உ அர்ச்சுனா ஐந்து மாதத்திற்கு முன்னர் ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியே வடக்கில் உள்ள போதைப் பொருட் பாவனைக்கு பொறுப்பு என்ற வகையில் எழுந்தமானமாக குற்றச்சாட்டுக்களை கத்திக் கத்தி முன்வைத்தார். அதன்போது யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரச்சினையில் குறிப்பிட்ட மருதுவர் கேதீஸ்வரன் மருந்தகம் ஊடாக போதைப்பொருள் விற்பனை செய்ததாகவும், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் அவரின் மகன் ஊழலில் ஈடுபட்டதாகவும் வல்வெட்டித்துறையில் வன்முறையில் ஈடுபட்டவர் தேசிய மக்கள் சக்தியில் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அதற்கு தேசிய மக்கள் சக்தியே பொறுப்பு என்றும் குற்றம்சாட்டினார். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி இளம்செழியனை அவர் ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பொறுப்பான பதவிகள் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
யாழ் மாவட்டத்தையும் வடக்கு கிழக்கையும் பாதிக்கின்ற முக்கியமான விவாதத்தில் பா உ அர்ச்சுனா ஆரோக்கியமாக விவாதத்தை நகர்த்தாமல் காழ்ப்புணர்வைக் கொட்டி தன்னுடைய சமூக வலைப்பதிளை கிளு கிளுப்பாக வைத்திருக்கும் வகையில் நடந்து கொண்டமை பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் கிணற்றுத் தவளைபோல் தொடர்ந்தும் ஓரெ விடயத்தை கத்திக் கத்தி வருகின்றாரேயொழிய ஒரு ஆரோக்கியமான விவாதத்தை மேற்கொள்கின்றார் இல்லை என பாராளுமன்ற விவாதங்களை உன்னிப்பாக பார்ப்பவர்கள் கருதுகின்றனர். மேலும் விவாதங்கள் நடக்கின்ற போது கத்திக் குளறுவது பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகின்ற போது ஆரோக்கியமான விவாதங்களுடாக தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும் தெருப்பொறுக்கி போல் பாராளுமன்றத்தில் அர்ச்சுனா நடந்துகொள்கின்றார் என்ற அபிப்பிராயம் ஏனை சமூக பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏற்பட்டுள்ளது.