இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் ! பா உ ரவிகரன் – அமைச்சர் பீமல் ரத்நாயக்கா

இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் ! பா உ ரவிகரன் – அமைச்சர் பீமல் ரத்நாயக்கா

 

வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தவில்லை எனில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் எச்சரித்துள்ளார்.

அண்மையில் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் போதைப் பொருட்களையும் கொண்டுவரும் இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிறிதரன் யாழ் சிறையில் கென்று சந்தித்து வந்தார். வவுனியாவில் உள்ள சிறைக்கும் சென்று இ;ந்திய மீனவர்களைப் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் பாதிக்கப்படும் வடக்கு மீனவர்கள் விடயத்தில் பா உ சிறிதரனோ தமிழ் தேசிய பா உ க்களோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

மாறாக தற்போது தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ தேசிய மக்கள் சக்தியின் வழியில் மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அத்துமீறும் இந்திய மீனவர்கள் கட்டுப்படுத்தப்படா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். பாராளுமன்ற சபைத் தலைவர் பீமல் ரத்நாயக்காவும் இதே கருத்தை நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய நடுவன் அரசும் தமிழக அரசும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவதைத்தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போராட்டத்தில் குதித் வடக்கு மீனவர்கள் இதே கோரிக்கையை யாழில் உள்ள இந்திய துணைத்தூதுரகத்திடம் கையளித்தள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் வடக்கு மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போதும் இதே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கூறுகையில், “இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும்.அதேபோல், இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர். கடற்றொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் கடற்றொழிலாளர்கள் வீதியில் இறங்கிப்போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு தமிழ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் சபையில் உரையாற்றிய பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த கால அரசாங்கத்தை போலே நீங்களும் இலங்கை கடற்றொழிலாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம். வடக்கு, கிழக்கை பொறுத்த வரையில் கடற்றொழில் என்பது பொருளாதாரத்தின் மையம். அதனை திட்டமிட்டு அழிப்பதற்கு முன்னைய அரசாங்கம் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கின்றோம். எனவே, தற்போதைய கடற்றொழில் அமைச்சர் அதைக்கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தங்கள் நாட்டு கடற்றொழிலாளர்கள் மீது இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்போது பதிலளித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தரும் போது, இலங்கை அரசு இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *