ஆண்டுக்கு 2 சத வீதமான குழந்தைகள் பாதிப்போடு பிறக்கின்றனர் !
இலங்கையில் பிறக்கின்ற 50 குழந்தைகளில் ஒரு குழந்தை பாதிப்போடு பிறக்கின்றது என்கிறார் சமூக மருத்து நிபுணர்களின் அமைப்பின் தலைவர் மருத்துவ கலாநிதி கபில ஜெயரட்னே. ஆண்டுக்கு இரண்டு வீதமான 4,000 முதல் 5,000 குழந்தைகள் பாதிப்போடு பிறப்பதாக மருத்துவ கலாநிதி ஜெயரட்னே தெரிவிக்கின்றார். இலங்கையில் ஆண்டுக்கு 247,000 குழந்தைகள் பிறக்கின்றனர். பாதிப்போடு பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இதய சம்பந்தமான பிரச்சினைகளோடே பிறக்கின்றனர். உலக பிறப்புக் குறைபாட்டு தினத்தை நினைவுகூரும் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மருத்துவ கலாநிதி ஜெயரட்னே இத்தகவல்களை வெளியிட்டார்.