யாழ் வளிமண்டலம் மாசடைகின்றது – மேன்முறையிட்டு நீதிமன்றில் முறைப்பாடு !

யாழ் வளிமண்டலம் மாசடைகின்றது – மேன்முறையிட்டு நீதிமன்றில் முறைப்பாடு !

யாழ் வளிமண்டலம் மாசடைவதைக் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் பணித்துள்ளார். முன்னர் யாழ் மாவட்டத்தில் குடியிருந்த டொக்டர் உமா சுகி நடராஜா மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைத்த முறைப்பாடு தொடர்பிoooooல் சட்டமா அதிபர் மார்ச் 6 இல் மாசடைகலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் இருந்து வருகின்ற மாசும் சேர்ந்து யாழ் மாவட்டத்தின் வளிமண்டலத்தை மேலும் மாசடைய வைப்பதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையை அடுத்து யாழ் மாவட்டத்தின் வளிமண்டலம் தொடர்ச்சியாக ஒரு மாதகாலம் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான ரவீந்திரநாத் டாபரே, யாழ் விளிமண்டலத்தில் மாசுப்பொருட்கள் அதீத அளவில் காணப்படுவதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த துணைப் பொதுச் சட்டத்தரணி, அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் வளிமண்டல மாசடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரிவு படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். அதற்குள் யாழ் மாவட்டமும் அடக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு கணிசமான நிதி தேவைப்படுவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *