வடக்கில் தொழில் துறைகளை துரிதமாக வளர்த்தெடுக்க அமைச்சுக் குழு யாழ் விஜயம் !
யுத்தத்தால் கைவிடப்பட்ட தொழில்துறைகளை மீண்டும் இயக்குவதில் தேசிய மக்கள் சக்தி அரசு தீவிரம் காட்டி வருகின்றது. நான்கு தசாப்தங்களுக்கு முன் கைவிட்ப்பட்ட யாழ் சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயணத் தொழிற்சாலைகளை, அச்சுவேலி கைத்தொழில் பேட்டை என்பவற்றை மீளக் கட்டியெழுப்புவது பற்றி ஆராய கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் கொண்ட குழுவினர் யாழ் வந்திருந்தனர். இவர்களோடு வடக்கு ஆளுநர் நா. வேதநாயகன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீ பவானந்தராஜா, க. இளங்குமரன் மற்றும் மாவட்ட அரச அதிபர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.