தொடரும் தையிட்டி விவகாரம் சிறிதரனோடு கை கோர்க்கின்றார் மகிந்தவின் மதனவாசன் !
யாழ்-தையிட்டி பகுதியில் விகாரை கட்டவென காணிகள் சுவீகரிக்கப்படவில்லை. ஆகவே அங்கு விகாரை கட்டியிருப்பது சட்ட விரோதமானது. இதனை புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் ஏற்றுக் கொள்வாரா?. காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன? என பாராளுமன்றில் எம்பி சிறிதரன் கேள்வி எழுப்பினார்.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இவ் விடயம் தொடர்பில் காணி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தகவல்கள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்பின்னர் முழுமையான பதிலை வழங்குகின்றேன் என்று பதிலழித்தார்.
இதேவேளை இன நல்லிணத்திற்காக யாழ் தையிட்டி விகாரையை அகற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஆதரவு என்கிறார் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன்.