இளகிய ரணிலை கண்டு மெஹ்தி ஹசன் தூக்கி தூக்கி அடித்தார் – அலி சப்ரி கொந்தளிப்பு

இளகிய ரணிலை கண்டு மெஹ்தி ஹசன் தூக்கி தூக்கி அடித்தார் – அலி சப்ரி கொந்தளிப்பு

 

அல்ஜசீராவின் மெஹ்தி ஹசனுடனான முன்னாள் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய நேர்காணலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்காக வக்காலத்துக்கு வந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி.

சப்ரி அல்ஜசீராவின் பேட்டியை ஊடக வேடமிட்டு நடத்தப்பட்டதாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் அலிசப்ரி மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ

நான் மெஹ்தி ஹசனை முன்னரும் பார்த்திருக்கின்றேன்இஅவர் எப்போதும் மோதல்போக்கை கொண்ட ஆக்ரோஷமானவராக காணப்படுவார்.

ரணில்விக்கிரமசிங்க உடனான அவரது நேர்காணால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இது பதில்களைபெறுவது பற்றியது அல்ல. இது ஊடகத்துறை தொடர்பானது இல்லை. இது நிகழ்ச்சிநிரல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பானது இது தாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு நேரடி விசாரணை.

பேட்டி வழங்குபவருக்கு எதிரியின் பகுதிக்குள் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இலங்கை எதிர்ப்பு உணர்வு கொண்ட பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மெஹ்தி பதில்கள் குறித்து கூச்சலிட்டார்இ விளக்கங்களை துண்டித்தார்இமேலும் தனது சொந்த சொல்லாடலிற்கு ஏற்றவாறு வார்த்தைகளை திரித்தார். பதில்கள் தனது விருப்பத்திற்கு ஏற்ப இல்லாவிட்டால் அவர் செவிமடுக்க மறுத்தார்.

உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்களை அவர் இவ்வாறு கையாள்வாரா என்ற கேள்வி எழுகின்றது.அவர்களின் யுத்த குற்றங்கள்இஅவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து இதேயளவு ஆக்ரோசத்துடன் விமர்சிப்பாரா? அல்லது நம்மை போன்ற சிறிய நாடுகளின் தலைவர்களிற்காக இது ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று குறிப்பிட்டுள்ளார். சப்ரியின் மன வேதனை நியாமனதாகவே படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்இ சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில்இ சனல் 4 இல் கிருஷ்ணன் குருமூர்த்தியின்இ ரணில் விக்கிரமசிங்கவுடனான நேர்காணல் போன்று மெஹ்தீனூடனான நேர்காணல் வினைத்திறனாக அமையவில்லை என தேசம் ஜெயபாலன் தெரிவிக்கின்றார். சனல் 4 இல் குருமூர்த்தியால் ரணில் அம்பலப்படுத்தப்பட்டார். அல்ஜசீராவில் ரணிலை பதிலளிக்க விடாமல் தொடர்ந்து குறுக்கிட்டமையால் இந்த நேர்காணல் இறுதியில் எதையும் சாதிக்க வில்லை. போர்க்குற்றம் தொடர்பான கேள்விகளில் ரணில் நழுவலாகவே பதிலளித்தார். உண்மையில் ரணிலிடமிருந்து இன்னும் காத்திரமான வாக்குமூலத்தை வாங்கும் சந்தர்ப்பத்தை மெஹ்தீன் தவறவிட்டுவிட்டார். செத்த பாம்பை அடித்தது தான் மிச்சம் எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *