அல்ஜசீராவுடன் மோதியது ஃபெராரி கார் – ரணிலுக்கு என்.பி.பி பதிலடி!

அல்ஜசீராவுடன் மோதியது ஃபெராரி கார் – ரணிலுக்கு என்.பி.பி பதிலடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஊடகங்களை சந்தித்த வேளையில், நீங்கள் மீண்டும் பாராளுமன்றம் செல்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த போது ”பெராரி உரிமம் உள்ள ஒருவர், ‘எல்’ போட் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அல்ஜசீரா ஊடகத்துக்கு ரணில் வழங்கிய நேர்காணலில் பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கும் முகம்கொடுத்திருந்த நிலையில், இது தொடர்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, கவலையான செய்தி ஒன்றை தெரிவிப்பதாக குறிப்பிட்டு அல்ஜசீராவுடன் ஃபெராரி கார் ஒன்று மோதியதாக பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறாம் திகதி 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் போக்குவரத்து அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்ற முற்பட்டபோது, மிகவும் கவலையான செய்தியுடனேயே விவாதத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பேச ஆரம்பித்த போது, சபையில் இருந்த சகல எம்.பிக்களும் ஏதோவொரு கவலையான செய்தியொன்றையே அவர் கூறப் போகின்றார் என்று அதிர்ச்சியுடன் அவர் கூறுவதை உன்னிப்பாக கேட்டனர்.

இதன்போது அவர், அண்மையில் இடம்பெற்ற பெரிய வாகன விபத்தொன்று தொடர்பில் இங்கே அறிவிக்க வேண்டியுள்ளது. பெராரி வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரின் மூளைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவர் இந்த தினங்களில் பல்வேறு கதைகளை கூறுகின்றார். போக்குவரத்து அமைச்சு மீதான விவாதம் நடக்கும் இந்த நேரத்தில் பெராரி வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவருக்கு எங்களின் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார். அவர் கூறியதை கேட்டு எம்.பிக்கள் சிரித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *