சிற்றிசன் ஊடகவியலாளர்களான யுரீயூப்பேர்ஸ்க்கு அங்கீகாரம் !
யுரீயூப் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் . எம் மரிக்கார் கோரினார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எம்.பி மரிக்கார்,
யூடியுப் ஊடகவியலாளர்களையும் ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்வது மிக முக்கியமாகும். யூடியுப் ஊடகவியலாளர்கள் யூடியுப் ஊடாக எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு அவசர தேவையின் போது அவர்களுக்கு வங்கிகளுக்குச் சென்று கடனுதவி பெற்றுக் கொள்ள முடியாது காணப்படுகின்றது.
177 யூடியுப் சனல்கள் மூன்று வருடங்களாக மக்கள் விடுதலை முன்னணியின் திசைக்காட்டிக்காக பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக பணியாற்றின . 400 பேஸ்புக் பக்கங்கள் காணப்பட்டன . தொழில் ரீதியாக அவர்களுக்கு வரவேற்பும் நன்மதிப்பும் கிடைக்குமெனில் அவர்களுக்கு 15 வீத வரி விதிப்பதில் தவறில்லை . ஊடகவியலாளர்களையும் அதனால் யூடியுப் ஊடகவியலாளர்களாக அங்கீகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் . எம் . மரிக்கார் கோரிக்கை முன் வைத்தார்.