தமிழ்கட்சிகளுடன் ஒரு தோணியில் பயணிக்க ஈபிடிபியும் பச்சைக்கொடி !

தமிழ்கட்சிகளுடன் ஒரு தோணியில் பயணிக்க ஈபிடிபியும் பச்சைக்கொடி !

 

தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தயாராக உள்ளதாக அதன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இவ்வேளையில் பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என்று கூறிய பன்னீர்செல்வம். கடந்த காலங்களைப்போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் இருந்தும் தமது கட்சி பின்வாங்க வில்லை என்ற கருத்துப்பட தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *