வாள்வெட்டுக்குழுக்கள் வடக்கு கிழக்கின் அடையாளமாகி வருகிறது !

வாள்வெட்டுக்குழுக்கள் வடக்கு கிழக்கின் அடையாளமாகி வருகிறது !

மட்டக்களப்பில் திட்டமிட்ட வகையில் வாள்வெட்டு குழு உருவாக்கப்படுவதாகவும் இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், சமீபத்தில்

மட்டக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் இது தொடர்பில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என வலியுறுத்தினார். மறைமுகமாக இவ்வாறான குழுக்களை இராணுவத்தினரே உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.

இந்த விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் நேரடியாகவே இராணுவத்தை குற்றம் சாட்டினார். போதைப்பொருள் வியாபாரம் , வாள்வெட்டு என சமூக சீரழிவுகளில் ஈடுபடுபவர்கள் இராணுவ முகாம்களிலேயே தஞ்சம் அடைகின்றனர் என்று சாடினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *