சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு! 

சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு!

 

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோர் மீது பிரித்தானியா விதித்த தடை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ஐக்கிய இராச்சியத்தின் இந்த தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக LTTE ஆதரவாளர்களின் தொடர்ச்சியான செல்வாக்கின் விளைவாகும்.

இது நீதியல்ல, சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தியும் சலுகைகளை அனுபவித்தும் நமது தேசத்தின் நல்லிணக்கத்தை கண்காணிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடினமான முடிவுகளால் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *