தன்னுடைய ஆசிரியர் வழங்கிய குற்றச்சாட்டை வைத்து சபையை பிழையாக வழிநடத்துகின்றார் அர்ச்சுனா மின்சாரசபை அதிகாரி குற்றச்சாட்டு !
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மின்சார சபை அதிகாரி ஒருவர் பா உ அர்ச்சுனாவுக்கு முகத்தில் அறைந்தது போன்று சில பதில்களையும் வைத்தார். தன்னுடைய முகத்தை மிக இறுக்கமாக வைத்திருந்த அந்த அதிகாரி , ஊசி அர்ச்சுனாவுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் அவருக்கு வழங்கிய குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு ஊசி அர்ச்சுனா இந்த சபையையும் நாட்டையும் தவறாக வழிநடத்துவதாக அர்ச்சுனாவின் முகத்தில் அறைந்தாற் போல் குற்றம்சாட்டினார்.
அரசியல் விடயங்கள் கதைக்க வேண்டாம் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தாண்டி யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பற்றி விவாதிக்க வேண்டிய இடத்தில் அதிகாரிகளை கூப்பிட்டு வைத்து அவமானம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டினார். மேலும் இதனை கண்டித்து ஆக்க பூர்வமாக நடக்காத கூட்டத்தை விட்டு தான் வெளியேறுவதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடையில் வெளியேறி ஸ்ரன்ட் அடிக்க வேண்டும். எம்பி சிவஞானம் சிறிதரன் அரசாங்க அதிகாரிகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று கொந்தளித்தன் பின்னணியில் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்பே காரணமாக கூறப்படுகிறது.
கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள விடயத்துக்கு வெளியேறினால் அது தன்னுடைய பெயரைப் பாதிக்கும் என்பதால் இந்த விடயத்தில் அரச அதிகாரிகளுக்காக பா உ சிறிதரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் தான் ஊசி அர்ச்சனா தமிழ் பெண்கள் சிலரை விபச்சாரிகள் என்று விமர்சித்ததற்கு பாராளுமன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பா உ சிறிதரன் அதனைக் கண்டித்து தமிழ் பெண்களை விபச்சாரிகள் என்று ஊசி அர்ச்சுனா சுட்டிக்காட்டியதை கணக்கெடுக்காது, சபாநாயகர் அர்ச்சுனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைக் கண்டித்திருந்தார். நாங்கள் தமிழ் தேசியத்தின் தூண்கள் என்றார். இப்ப மீண்டும் மல்லுக்கட்டுகின்றனர்.