29

29

‘மழை நதி கடல்’ கவிதைநூல் ஓர் அறிமுகம் – சாமஸ்ரீ : எஸ்.எல். மன்சூர் (கல்விமாணி) – அட்டாளைச்சேனை.

Iniyavan_Isarudeenநூலின் பெயர் : மழை நதி கடல் (கவிதை)
நூல் ஆசிரியர் : இனியவன் இஸாறுதீன்.
உரிமை : முஃப்லிஹா இஸாறுதீன்
வெளியீடு : எழுவான் வெளியீட்டகம்.
விலை : 400ரூபாய்

இயற்கையுடன் இரண்டறக்கலந்ததுதான் மனிதவாழ்க்கை. அந்த இயற்கையை மனிதன் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்திக் கொண்டேயிருக்கின்றான். இவ்வாறான இயற்கையின் இன்பதுன்பங்களை வாழ்வின் நெருக்கத்தோடு கவிஞர்கள் தங்களது ஞானதிருஷ்டியினால் செய்யுள்களாக வடிப்பர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுடன் கவிஞர்கள் தங்களது கண்ணுக்குள் தெரியும் இயற்கையின் உள்ளக்கிடங்கினை இவ்வாறு நயத்துடன் வடிக்கின்றபோது அவை மனித உள்ளங்களுக்கு சற்று ஆறுதலை அழிப்பதுடன் கவிஞனும் இயற்கைக்கு உதவுமாற்றலை பெறுகின்றான். அந்தவகையில் இலங்கையில் தென்கிழக்கு வட்டாரத்திலிலுள்ள அட்டாளைச்சேனையிலிருந்து “இனியவன் இஸாறுதீன்” என்றொரு இளைய கவிஞன் புதுக்கவிதைகளை வரைந்து “மழை நதி கடல்” என்கின்ற பெயரில் எழுவான் வெளியீட்டகத்தின் துணைகொண்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளமை நவீன இலக்கியத்தின் மீதுள்ள இயற்கையின் பற்றை பறைசாற்றி நிற்கின்றது.

‘இரசிகமானவன் நீ
என்னைத் தாங்கும் உன் வேர்கள்
எங்கெங்கு உண்டென்று என் கிளைகளுக்கும் தெரியாது
என் இலைகளுக்கும் தெரியாது’

என்றொரு கவிதையை ‘இறைவா உன்னிடம்’ எனும் தலைப்பில் இயற்கையின் அருட்கொடைக்கு ஒப்புவிப்பதானது அற்புதமானதோர் பரவசத்தை ஏற்படுத்திவிடுகின்றது. இதேபோன்று இந்நூல் வாயிலாக 91 கவிதைகளை 318 பக்கங்களில் வடித்துள்ளார் கவிஞர். தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்;ட நெழிவு சுழிவுகளையும், இயற்கையின் நடத்தைக்கோலத்தையும் நன்கு இரசித்து, புசித்து, அனுபவித்து யாத்துள்ள இக்கவி முத்துக்களை அழகுற வடிவமைத்துள்ள பாணியோ எவரையும் படிக்கத் தூண்டும் கவிதைப்புனல்களாகவே காணப்படுவதுடன், ஏட்டிக்குப் போட்டியாக ஒவ்வொரு கவிதைகளின் உள்ளார்ந்தமான கருத்துக்களை ஆழமாக அறிகிறபோது இப்படியொரு கவிஞன் எம்மத்தியில் இருக்கின்றானா? என்பதையே சிந்திக்க வைக்கின்றன.

MAZHAI_NATHI_KADAL_BookCoverவிசேடமாக கூறப்போனால் ‘மணமங்கைக்கு, காதலித்துப்பார், காமத்திடம் பேசும் காதல்’ போன்ற காதல் கவிதைகளும், உறவுகளான ‘உம்மா, தாய், தமிழாசிரியருக்கு எழுதிய கவிதைகளும்’, இயற்கையின் எழிலுக்கு மெருகூட்டக் காரணமான உயிர் ஜென்மமான ‘மண்புழுக்களே, சுமைதாங்கி, சிலந்தியுடன் ஒரு செவ்வி, எறும்புகள் ராச்சியம்’ போன்ற கவிதைகளும், ‘மரம், பூக்கள், வேர்கள், முட்கள், மூங்கில்கள், மவுனம், புல்வெளி’ போன்ற இயற்கைத் தாவரப்பகுதிகளுடனும், ‘மேகமே மேகமே, விடியல், தண்ணீர், மழை, நதி, கடல், காற்று, நட்சத்திர பயணம்’ போன்ற இயற்கையின் அருட்கொடைகளுடனும் தனது கவிநடையைப் புனைந்து யுத்தத்திற்கு சாவுமணியடிக்கும் துப்பாக்கிக்கும், சமாதானத்திற்கு சாந்தமாய் தேசத்திற்கொரு தூது விட்டு, இறுதியில் ‘ஈழம்? | என்றொரு தலைப்பில் “வளமான நிலம் – அழகான பூவனம் – அருமையான நூல்கள் – அற்புதமான பள்ளிக்கூடங்கள் – அறிவுஜீவிகள் – ஆயுதம் சுமக்கும் அராஜவாதிகள்” என்று தொடர்கின்ற கவிதை சொல்லும் பாடம் மனிதநேயத்தில் எம்மைப் புல்லரிக்க வைக்கின்றது.

“எல்லாத்தீயிலும் என் ஆன்மா” என்றொரு தலைப்பில் வருகின்ற கவிதையில் கவிஞரோ ஆத்மாவுடன் இவ்வாறு பேசுகின்றார். “ஆதிக்கத்தீயில் எரிந்தேன் அது என்னை கருகிய தகரம்போல் துருவேற்றி விட்டது, ஆணவத்தீயில் எரிந்தேன் அது என்னை உருகிய ஈயம்போல் உருக்குலைத்து விட்டது, பசித்தீயில் எரிந்தேன் அது என்னை பழுத்த இரும்புபோல் வளைத்தெடுத்து விட்டது, பொறாமைத் தீயில் எரிந்தேன் அது என்னை புகைந்த சிகரெட்போல் பொசிக்கி விட்டது, காமத்தீயில் எரிந்தேன் அது என்னை ருசியில்லாத வெறும் கறியாக்கி விட்டது” என்று இன்னும் எரிக்க என்னில் என்ன இருக்கிறது’ என்று வெற்றுடல் கேட்பதுபோல் வரும் இக்கவிதை ஒவ்வொரு மனிதனையும் ஆத்மார்த்தமாக சிந்திக்க வைக்கிறது.

‘கலீல் ஜிப்ரானே’ என்றொரு தலைப்பில் வரும் உலமகா கவிஞனின் “முறிந்த சிறகுகள்” கவிதையிலிருந்து பிறந்த ஒரு கவிதையாக “உன் முறிந்த சிறகுகளைப் படித்த பிறகுதான் எனக்குச் சிறகிருப்பதே என் சிந்தைக்கு வந்தது” என்று கூறி “பூவிதழில் பனித்துளியால் எழுதிய படிமக்காரனே” என்றும் கலீல் ஜிப்ரானை வர்ணிக்கும் கவிதைகளோ அபாரம். ‘அழைப்பு’ என்றொரு தலைப்பில் ‘மகாகவி பாரதிக்கு’ இப்படி புகழாரம் சூட்டுகின்றார் இனியவன் இஸாறுதீன். “புரட்சிப்புய மேந்தி எழுச்சிப் பாக்களால் போராடிய உயர்ந்த ஆத்மாவே, உன்னைப் பின்பற்றவும், உயர் ஜென்மம் எய்தவும் இங்கே சிலர் நாங்கள் இன்னும் உனக்காகக் காத்திருக்கிறோம், மானுடம் காக்க நீ மறுபடியும் வருவாயா?’ எனக் கேட்கிறார் நமது கவிஞர் பாரதியை பார்த்து. உண்மையில் இதுபோன்ற பல கவிதைகள் சிந்தையைத் தூண்டி படிக்க சுவைக்கவும்  மேலும் வடிவமைப்பில் பார்த்hதல் ருசிக்க வைகசவும் தூண்டுகிறது இந்த ‘மழை நதி கடல்’ கவிதைநூல்.

இக்கவிதைகளுக்காக அணிந்துரையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். “மவுனத்தின் காதலன்” என்ற தலைப்பில் இவருக்கும் நூலுக்கும் ஒரு பொன்னாடையாக அணிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இவ்வாறு கூறுகின்றார் கவிக்கோ. “கவிஞர்கள் மௌனத்தின் காதலர்கள் அதனால்தான் கவிஞர் இனியவன் இஸாறுதீன் மௌனத்தை பூக்கள் பேசும் பிரபஞ்ச பொதுமொழி” என்று அழகாகப் பாராட்டுகிறார். அதுமட்டுமல்ல இன்னோரிடத்தில் அவர் “இந்த இருளிலும் ஒளியின் நம்பிக்கை இவரிடம் இருக்கிறது இன்னமும் நம்பிக்கை விதையை நெஞ்சினில் விதைத்து காலத்தின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன் நான்’ என்கிற இனியவன் மட்டுமல்ல நாமும் காத்திருக்கிறோம்” என்று கூறிய அவர் ‘எனது கவிதைகள் இவரை மீட்டியிருக்கின்றன என்று தெரிகிறது இது விரலுக்பும் பெருமை வீணைக்கும் பெருமை’ என்று வாழ்த்தித் தன் பெருமிதத்தைத் தெரிவித்திருக்கிறார்.

‘இயற்கைக்கு இறக்கை கட்டிய இனியவன்’ எனும் தலைப்பில் மதிப்புரை எழுதியுள்ள ஆசுகவி அன்புடீன் அவர்கள் இக்கவிஞனை இவ்வாறாக அறிமுகம் செய்கிறாhர். அதாவது “நவீன கவிதைப் பிரவேசம் பெற்ற புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குத் தலைப்பாகையாக அடையாளம் காணப்படுபவர் இனியவன் இஸாறதீன். 1980களில் அட்டாளைச்சேனையில் உருவான தினகரன் வாசகர் வட்டம், நிலவிலே பேசுவோம், கலை கலாச்சார மேடை நிகழ்வுகளில் அறிமுகமாகியவர் இக்கவிஞர்” என்று ‘இறக்கைக்கவி’ கட்டுகிறார் ‘ஆசுகவி’ அவர்கள். அன்னாருக்கு ஒரு சபாஷ்! நூல் வெளியீட்டாளரான எழுவான் பிரதம ஆசிரியர் பௌசுர் றகுமான் “ஆன்மாவுக்குள் ஓர் ஸ்பரிச உணர்வு” எனும் தலைப்பில் “இந்நூல் மூலமாக தனது வெளியீட்டுப்பணியினை எழுவான் ஆரம்பிக்கிறது” என்கிறார் எழுவான் ஆசிரியர். மேலும், “இதயத்தின் அடிஆழத்தில்” எனும் தலைப்பில் அற்புதமானதோர் முன்னுரையை முன்வைக்கிறார்; இனியவன் இஸாறுதீன் அவர்கள்.

‘மழை நதி கடல்’ என்கிற மூன்று சொற்களுக்கும் நீண்டதோர் விளக்கம் தரும் கவிஞர் ஒரு கட்டத்தில்
‘என்தாய் மண்தான் என் கவிதைகளின் மூலம்
அந்தக்கிராமம்தான் என் கற்பனைகளின் மையம்’  என்று குறிப்பிட்டு
மனித நேயத்தையும் – மாறாத மனிதாபிமானத்தையும் – வாழ்க்கையை நேசிக்கும் வைராக்கியத்தையும் –
கலைக்கண் கொண்டு பார்க்கிறது என் கவிதைமனம்’ என்று கூறுகின்றார். மேலும் இன்னோரிடத்தில்;
‘இயற்கை என் தாய், இயற்கை என் ஆசான், இயற்கை என் சுவாசம்’ என்று இயற்கைக்கே முன்னுரிமை வழங்கியுள்ள இனியவன் அவர்கள் நூலின் தலைப்பிற்கு இவ்வாறு விளக்கம் தருகின்றார்.

“மழை என்பது வாழ்வின் தொடக்கம்
நதி என்பது வாழ்வின் ஓட்டம்:
கடல் என்பது வாழ்வின் முழுமை என்ற
வாழ்க்கை வரலாற்றுக்கு
வரைவிலக்கணம் வகுத்த பெயராய் இருப்பது என்பதே மூலகாரணம்.” என்கின்றார். உண்மையிலேயே இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் மனித வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படுகின்ற அனைத்துவிடயங்களிலும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கவிதைகளில் மனிதநேயத்தைக் காட்டிப் பின்னரான காலத்தில் நினைவுறுத்துகின்றபோது அக்கால நினைவலைகளும் எம் ஆத்மாவுக்கு நிழலாய் வரும் என்பதை இக்கவிஞர் தனக்கே உரிய இலகு மொழியில் யாவரும் வாசித்து விளங்கும் வகையில் அற்புதமாக இதைப் படைத்துள்ளார். படைப்பாளியின் கற்பனை இயற்கையின் மீது பற்றுவைத்து வாசிப்பவர் யாவரையும் பற்றுள்ளதாக்கிவிடும் இனியவனின் மழை நதி கடல் என்பது மிகையானதல்ல.

‘தாய்க்கும் தந்தைக்கும்’ அர்ப்பணம் செய்திருக்கும் இக்கவிநூல், அழகிய முறையில் அச்சிடப்பட்டு கவரிடப்பட்டும் உள்ளது.  முன் அட்டையில் மனித முகத்தின் இருகண்ணும் பின்புலத்தில் அந்திமேகமாய் உலகைப்பார்த்தும், மழைபெய்தால் அங்கே நதியாகி இறுதியில் கடலில் சங்கமிக்கின்றவாறு அற்புதமான ஒரு ஓவியத்தையும் பதிந்துள்ள ஓவியர் “அஹ்மத் அல் ஹவாரி” அவர்களின் கற்பனையோ அபாரம்;. பின் அட்டையில் கவிஞர் இனியவன் உயிர்ப்பாய் இருந்து எம்மோடு புன்னகைக்கும் நிலையில் படம்பொறித்து அருகில் கவிக்கோவின் அற்புத வரிகளும் வரையப்பட்டுள்ளன. அது இவ்வாறு செல்கிறது.

“இதோ இந்த புல்லாங்குழலோசை
இனியவன் இஸாறுதீன் உடையது
இந்த இசையின் அழகில்
இரசனையும் மானுட நேயமும் ததும்புகின்றன.

இந்த மழை நதி கடல் என்ற
மொழிப்பொழிவில்
அழகிய கவிதைகள்
ஆங்காங்கே நட்சத்திரங்களாய்ப்
பிரகாசிக்கின்றன”  என்றவாறு தொடர்ந்து செல்கின்ற இயற்கையின் வரிகளாக இனியவனின் முயற்சிக்கு பாராட்டும் தெரிவிக்கின்றார் கவிக்கோ அவர்கள். அண்மைக்காலத்தில் வெளியாகிய கவிதை நூல்களுள் மிகவும் கூடிய கனமிக்க கவிதைகளையும், பக்கங்களையும் தாங்கிக் பாத்திரமாக வெளிவந்துள்ள இக்கவிப்புனல் நாளைய உலகில் பார்ப்போரை பரவசப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்று நம்பிக்கையுடன் கூறலாம்.

சாமஸ்ரீ : S L மன்சூர் (கல்விமாணி),
அட்டாளைச்சேனை.

கிளிநொச்சியில் பாம்புக் கடியினால் சிறுவன் மரணம்!

images-snakes.jpgகிளி நொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்டு தரப்பாள் கூடாரத்தில் உறங்கிய சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டியதால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  அண்மையில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீள்குடியேற்றப்பட்ட இச்சிறுவனின் குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்ட தரப்பாள் கூடாரத்தில் வசித்து வந்தனர். கடந்த 26ம் திகதி இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளையில், கூடாரத்திற்குள் நுழைந்த பாம்பு இச்சிறுவனைத் தீண்டியுள்ளது. உருத்திரபுரம் வடக்கைச்சேர்ந்த ஞானசீலன் நிலக்சன் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு பாம்பினால் கடியுண்டு உயிரிழந்துள்ளான்.

பாம்பினால் கடியுண்ட சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு  பின்னர். யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு வைத்து மரணமானான்.

Related News:

பாம்பு கடிக்குள்ளாகி படைவீரர் உயிரிழப்பு!

வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் யாழ்ப்பாணத்தில் கடலுணவின் விலைகள் அதிகரிப்பு!

Fishing_in_Jaffnaயாழ் குடா நாட்டில் கடலுணவு வகைகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் குடாநாட்டு மக்கள் கடலுணவுகளை நுகர்வதில் பல சிரமங்களை எதி;ர்கொண்’டு வருகின்றனர். சாதாரணமாக ஒரு கிலோ 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மீனின் விலை தற்போது 600 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

தென்னிலங்கையிலிருந்து அதிகளவு சுற்றுலாப்பயணிகள் குடாநாட்டிற்கு வருகை தருவதாலேயே  கடலுணவகளின் விலை  அதிகரித்து வருதாக தெரிவிக்கப்படுகின்றது.. தெற்கிலிருந்து வரும் மக்கள் அதிகளவு யாழ்ப்பாண கடலுணவுகளை விரும்பி உண்கின்றனர். அத்துடன் அவர்கள் திரும்பிச்செல்லும் போது அதிகளவான கடலுணுவுப் பொருட்களை கொள்வனவு செய்தும் கொண்டு செல்கின்றனர்.

யாழ்ப்பாண மீனவர்கள் தற்போதும் கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படுமானால் கடலுணவுப் பொருட்களின் தொகை அதிகரிப்பதோடு அவற்றின் விலைகளும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  (வடக்கு கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்க விரைவில் அனுமதி. )

வன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்து!

LandMine_Signவன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணி வெடிகள் மிதிவெடிகள் அகற்றப்பட்டப் பின்னரே மக்கள் மீளக்குடியமாத்தபட்டு வருகின்ற போதும் சில வெடிபொருட்கள் கண்களுக்குப் புலப்படாத வகையிலுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

மரங்களிலும், நிலத்திலும் புகுந்த நிலையில் வெடிக்காத நிலையில் சில எறிகணைகள் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவை வெடிபொருட்கள் என அறியாத சிறுவர்கள் இவற்றைப் பரிசோதிக்க முயலும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன் இதனால் பெற்றோர் மிக அவதானமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில விடுகளின் சுவர்களில் பெரிய சுடுகலன்களின் தோட்டாக்கள் வெடிக்காத நிலையில் காணப்படுகின்றன. வீட்டு முற்றங்கள,; காணிகளை துப்புரவாக்கி தீமூட்டுகின்றபோது அதற்குளிளிருந்தும் வெடிபொருட்கள் வெடிக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில்  மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள தருமபுரம், கட்டைக்காடு, விசுவமடு முதலான பகுதிகளில் வீடுகளுக்கு அருகாமையிலும் பொதுமக்களால் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சிக் கிழக்கில் மக்கள் மீள்குடியமர படைத்தளபதி அனுமதி!

Mahinda_Hathrusinge_Major_Genவடமராட்சி மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர யாழ்.மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அனுமதியளித்துள்ளார். நேற்று மாலை பலாலி படைத்தளத்தில் நடைபெற்ற யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடம் இடம் பெற்ற சந்திப்பில் அவர் இவ்வனுமதியை  வழங்கினார்.

போர் நடவடிக்கைகளால் சில வருடங்களுக்கு முன்னர் டமராட்சிக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுதல் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று பலாலி படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது இம்மக்களில் வாழ்வாதார பிரச்சினைகள் உட்பட்ட அம்மக்கள் அவர்களின் காணிகளில் மீள்குடியமர்த்தப்படுவதன் அவசியம் குறித்தும் யாழ்.அரசாங்க அதிபர் படைத்தளபதிக்கு விளக்கிக் கூறினார். இதனயடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இதனடிப்படையில் முதற்கட்டமாக நாளை திங்கள் கிழமை வடமராட்சிக்கிழக்கின் அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த அம்பன் பகுதியில் 81 குடும்பங்கள்  மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன.  அத்துடன் செம்பியன்பற்று வடக்கு, தெற்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2அயிரத்து 455 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 531 பேர் மீளக்குடியமர்வதற்கான அனுமதி நேற்று படைத்தளபதியால் வழங்கப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை யாழ். மாவட்டச்செயலகம் மேற்கொள்ளவுள்ளது.

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

Prof_Hooleயாழ் பல்கலைக் கழகம் தொடர்பாக தேசம்நெற்றில் இடம்பெற்று வரும் விவாதம் பல்வேறு வகையிலும் எமது சமூகத்தின் கல்விநிலை பற்றியதாகவும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

அவ்வகையில் தனது அமெரிக்க பல்கலைக்கழகத்துடனான கற்பித்தலை நிறைவுசெய்து கொண்டு இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கற்பித்தலை முன்னெடுக்கச் செல்லும் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களை தேசம்நெற் லண்டன் வரவழைத்து ஒரு சந்திப்பினை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:

நோக்கம்: வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் பற்றி விவாதிப்பதும் கலந்துரையாடுவதும். இக்கலந்துரையாடல் பேராசிரியரின் சிறப்புரையைத் தொடர்ந்து இடம்பெறும்.

சிறப்புரையிலும் கலந்துரையாடலிலும் பின்வரும் அம்சங்களை உள்ளடக்க முயற்சிக்கப்படும்.

1. இதுவரையான கல்விமுறையும் அதன் குறைபாடுகளும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்.

2. எதிர்காலத்தில் தமிழ் பேசும் சமூகங்களிடையே கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள்.

3. கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு தமிழ் பேசும் சமூகங்களிடையே உள்ள பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் எவ்வாறான மாற்றங்களை தம்முள் ஏற்படுத்த வேண்டும்.

4. சமூக மாற்றத்திற்கு கல்வியை எவ்வாறு பயன்படுத்த முடியும்.

5. தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை உறுதி செய்ய, வாழ்நிலையை மேம்படுத்த கல்வி மேம்பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம்.

காலம்: 29 ஓகஸ்ட் 2010, ஞாயிறு மாலை 15:30

இடம்:
Lord Brooke Hall
Shernhall Street
Walthamstow,
London E17 3EY

தொடர்பு :த ஜெயபாலன் : 07800 596 786 or 02082790354
த சோதிலிங்கம் : 07846322369  ரி கொன்ஸ்ரன்ரைன் : 0208 905 0452

இக்கலந்துரையாடல் விவாதம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்புபவர்கள் அல்லது பேராசிரியர் ஹூலிடம் கேள்விகளை முன்வைக்க விரும்புபவர்கள் இங்கு அவற்றினைப் பதிவிடவும். முடிந்தவரை விவாதத்தை தொகுத்தும் கேள்விகளுக்கான பதிலைப் பெற்றுத்தரவும் முயற்சிப்போம்.

கூட்டு தேசியவாத அடிப்படையில் அரசாங்கத்துக்கு மு.கா ஆதரவு

rauff.jpg“தனித் தனியான தேசியவாதங்கள் தலைதூக்கியிருக்கின்ற இன்றைய நிலையில் இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கு கூட்டுத் தேசியவாதக் கோட்பாடு அவசியம் என்ற நிலையிலேயே அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கிறது.” என மு. கா. தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பiர் சேகு தாவூத் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர்,  “இன்று நாட்டில் சிங்களத் தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், முஸ்லிம் தேசிய வாதம் என தேசியவாதம் முரண்பட்டுக் கிடக்கின்றது. இன்று வன்முறை ஒழிக்கப்பட்டிருக்கிறதேயொழிய, தேசியவாத முரண்பாடுகள் ஒழியவில்லை.

இந்த நிலையில் அனைத்து மக்களையும் சேர்த்து கூட்டுத் தேசியவாத சிந்தனையோடு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இதனைக் கருத்திற் கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் அரசை ஆதரிக்க முன்வந்திருக்கிறது” என்றார் பiர் சேகுதாவூத்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்தது. சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை ஏற் பட்டிருக்கிறது. இதனால் அவர் 13வது திருத்தத்திற்கும் மேலாகச் (13+) சென்று சிறுபான்மையினர் நலன் பேண ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்துள்ளது.  இதனையும் கருத்தில் கொண்டே நாம் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளோம் எனவும் பiர் சேகுதாவூத் சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மையினரைப் பாதிக்கும் விடயங்களுக்கு மு.கா. ஆதரவளிக்காது; நம்புகிறது தமிழ்க்கூட்டமைப்பு

அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பான விடயங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்காதென நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிப்பதென நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கூடி முடிவெடுத்திருந்தது.

இந்த நிலையில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பேச்சு களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு ஏதேனும் முட்டுக்கட்டையை ஏற்படுத்துமாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.  சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினவியபோது;

இது முஸ்லிம் காங்கிரஸின் தனிப்பட்டமுடிவு.இதனால் எம்மிடையேயான பேச்சுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுமென நினைக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரை சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.அது முஸ்லிம் மக்களாக இருந்தாலும் சரி.மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, வடக்கு,கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும் சரி பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனவே,அந்தப் பேச்சுகளுக்கு ஆபத்து இருக்காதென நினைக்கிறேன்.

தேறி வருகிறார் ஆரியவதி

ariyawathi_main.jpgஆணிகள்,  ஊசிகளை சூடுகாட்டி உடலில் ஏற்றப்பட்டிருந்த மாத்தறையைச் சேர்ந்த ஆரியவதி (49 வயது) எனும் பெண் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சத்திரசிகிச்சையின் பின்னர் குணமடைந்து வருகிறார். அவர் நேற்று பேசக்கூடிய நிலையில் இருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க நேற்று ஆரியவதியை பார்வையிட்டுள்ளார். அத்துடன் அப்பெண்ணுக்கு வீடொன்றையும் வழங்குவதாக அவர் தெரிவித்திருக்கிறார். உடலில் மீதமாக இருக்கும் 5 ஊசிகளையும் உடனடியாக அகற்ற முடியாதிருப்பதாகவும் ஏனெனில் அப்பெண்ணின் நரம்புகள் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் உடனடியாக அவற்றை அகற்றவில்லை எனவும் கம்புறுப்பிட்டிய மருத்துவமனை பணிப்பாளர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

இப்பெண்ணுக்கு 3 ஆயிரம் டொலர்களை அரசாங்கம் வழங்கும் என்று அதிகாரிகள் கூறினர். ஆஸ்பத்திரியில் வைத்து 1 இலட்ச ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதித் தொகை ஆரியவதி ஆஸ்பத்திரியை விட்டு சென்ற பின் கொடுக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் கூறினார்.

தனது குடிசையை வீடாக நிர்மாணிக்கும் நோக்கத்துடனேயே ஆரியவதி சவூதிஅரேபியாவுக்கு சென்றிருந்தார். கடந்த மார்ச்சில் அங்கு சென்றிருந்த ஆரியவதியை வேலைக்கு அமர்த்திய குடும்பம் கொடுமைப்படுத்தியுள்ளது. கணவனும் மனைவியும் தன்னை அடிப்பதாகவும் அவர்களின் ஏழு பிள்ளைகளும் தன்னை கொல்லப் போவதாக மிரட்டுவதாகவும் ஆரியவதி கூறியுள்ளார். மூன்று மாதங்கள் சித்திரவதைக்குள்ளான இவரை அவருக்கு வேலை பெற்றுக் கொடுத்த முகவரிடம் தொழில் வழங்கியவர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆரியவதியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடுமாறு முகவரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆணிகளை சூடுகாட்டி பெண் (எஜமானி) தனது கணவரிடம் கொடுக்க அவர் தனது உடலில் அவற்றை அறைந்ததாக ஆரியவதி கூறியுள்ளார். நான் வலியால் சத்தமிட்டால் அவர்களின் பிள்ளைகள் என்னை கொல்லப் போவதாக கத்தியைக் காட்டி மிரட்டுவார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

அமைச்சர் எஸ்.பி இன்று யாழ். பல்கலை விஜயம்

University_of_Jaffna_Logoஉயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்படவுள்ளது. இங்கு விஜயம் செய்யும் அமைச்சர் பல்கலைக்கழகத்தில் 30 மில். ரூபாயில் நிர்மாணிக்கப்படவுள்ள சுகாதார, விஞ்ஞான கட்டடத்திற்கு அடிக்கல்லையும் நாட்டி வைப்பார்.