11

11

குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

Police_Logoயாழ். குடா நாட்டில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போது பல குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 66 பேர் சிக்கியுள்ளதாக யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இவ்வாறான அதிரடி நடவடிக்கையின் போது, நூற்றுக்கும்  மேற்பட்டோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை வைத்திருந்தமை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், ஆகியார் இவர்களில் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட அதிரடி நடவடிக்கைகள் யாழ்.குடாநாட்டிலும் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்மூலம் குற்றச்செயல்களை பெருமளவில் தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் வடபகுதி நடனக் கலைஞர்களுக்கு சென்னையில் குறுங்கால நடனப் பயிற்சி.

வடமாகாணத்திலுள்ள இளம் நடனக் கலைஞர்களுக்கு தென்னிந்தியாவில் குறுங்கால நடனப் பயிற்சி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பயிற்சி சென்னைப் பல்கலைக்கழகத்தில் மூன்று வாரங்கள் நடைபெறும் எனவும், இதற்காக 1.6 மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மேற்கொண்டுள்ளார். வடக்கில் வளர்ந்து வரும் நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், நடன நுட்பங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யவும் இப்பயிற்சி நடைபெறுவள்ளதாகவும், இதற்கென 16 ஆண், பெண் நடனக்கலைஞர்கள் வடக்கிலிருந்த தெரிவு செய்யப்பட்டுள்ளதாவும், விரைவில் அவர்கள் சென்னைக்குப் பயணமாகவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம்பெண் வடமராட்சியில் மயங்கிய நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை மீட்கப்பட்ட இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தைப் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பெண்ணின் கூக்குரல் கேட்டதாகவும் பயம் காரணமாக எவரும் அப்பகுதிக்குச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றுக் காலை நெல்லியடிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் இப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் எதற்காக துன்னாலைப் பகுதிக்குச் சென்றார்? அவரை யாரும் கடத்திச் சென்றார்களா? என்பன குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். உயர் பாதுகாப்பு வலயங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு யாழ். படைத்தலைமையிடம் யாழ். அரச அதிபர் கோரிக்கை!

Mahinda_Hathrusinge_Major_Genயாழ். உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள விவசாயக் காணிகளில் எதிர்வரும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி cவிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பிரதான தொழிலாகவும், குடாநாட்டு பொருளதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்வது விவசாயம் ஆகும்.  போரின் காரணமாக மிக நீண்டகாலமாக யாழ்.குடாநாட்டில் விவசாயம் நலிவுற்றுள்ளது. தற்போது போர் முடிவுற்ற நிலையிலும் பல விவசாயக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் சிக்கியிருக்கின்றன.

உயர்பாதுகாப்பு வலயத்தில் தங்களின் ஊர்களை இழந்தவர்கள் இன்னமும் அகதிகளாகவே அவல வாழ்க்கை வாழ்கின்றனர். போரின் பின் ஏனைய இடங்களில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையிலும் குறித்த மக்கள் மட்டுமே இன்னும் அகதிகளாக வாழ்கின்றனர். இந்த மக்களின் வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் வயற்காணிகளில் மக்கள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அத்துடன் குடாநாட்டில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவும் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபரின் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளைப் பரிசீலித்து விரைவில் நிறைவேற்றுவதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி ஹத்துருசிங்கா உறுதியளித்துள்ளார் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேர்வினின் அலுவலகம் மூடப்பட்டது

mervyn.jpgமுன்னாள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பயன்படுத்திய அலுவலகம் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

கைதிகளுக்கிடையே மோதல்: ஒருவர் பலி

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இரு போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மத்தியில் ஏற்பட்ட கைகலப்பின் தடுக்க சென்ற சக கைதியொருவர் காயமுற்ற நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

245 கிலோமீற்றர் நடக்க வேண்டும்

ஐ.நா. மனித உரிமைகள் சபையை நோக்கிய மனித நேயப் பயணத்தில் சிவந்தன் ஜெனீவாவை அடைய இன்னும் 245 கிலோமீற்றர் நடக்க வேண்டும். ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி அவர் 19 ஆவது நாளாக இன்று நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்.

நிதிச்செயலாளர் பதவிக்கு முரளி ரகுநாதன்

mano.jpgஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் பதவிக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் நியமிக்கப்பட்டார். இவரது பெயரை கட்சித் தலைவர் மனோ கணேஷன் முன்மொழிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் வழிமொழிந்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

சிறுவர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை சட்ட ரீதியான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் முறையான வேலைத் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த வசதிகளுடன் உள்ள மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் வகையில் உள்ள சிறுவர் இல்லங்களை இனங்கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்  (09) அலரி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கூறிய பணிப்புரையை விடுத்தார்.

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நலன் பேணல் பற்றி கண்டறிய சகல சிறுவர் இல்லங்களின் அருகிலும் சிவில் கமிட்டியொன்றை நியமிப்பதன் அவசியம் பற்றியும் அவ்வாறான கமிட்டியில் கிராமப்புற விஹாரையின் தேரர், பொலிஸ் அதிகாரி மற்றும் பிரதேச அரச அதிகாரியொருவரும் உள்ளடங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

வெளிநாடு செல்லும் தாய்மாரின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் தடுப்புக் காவலில் உள்ள நிலையில் அவர்களது பிள்ளைகளின் மன நிலையை கட்டியெழுப்புவதற்கான விசேட திட்டங்களை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளைப் பணித்தார்.

அதேவேளை பெண்கள் எவ்வித இம்சையும் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண்களை தைரியமூட்டும் மற்றும் அவர்களது நலன் பேணுவது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ள தாகவும் குறிப்பிட்டார். சமூகத்தில் தாய், மனைவி மற்றும் சகோதரி ஆகியோருக்கு உரிய இடத்தை வழங்குவதுடன் சிறுவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் அளிக்க வேண்டிய பொறுப்புகளை வழங்குவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அங்கு விளக்கினார்.

முன்பள்ளி சிறுவர்களுக்கு ஒரு குவளை பால் வழங்கும் திட்டத்தை செயற்படுத்துமாறும், பாடசாலை செல்லாத சிறுவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளில் சேர்க்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறும் சகல சர்வதேச பாடசாலைகளிலும் சரித்திரத்தை படிப்பிக்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார். அத்துடன், சிறுவர் குற்றவாளிகள் மற்றும் சத்தேகநபர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் தொடர்பான திட்டத்தை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேர்வின் சில்வா பதவி நீக்கம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் இடைநிறுத்தம்

mervyn.jpgகம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மேர்வின் சில்வா பிரதி அமைச்சுப் பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலர் விஜயானந்த ஹேரத் நேற்றுத் தெரிவித்தார்.

அத்துடன் மேர்வின் சில்வா எம். பியை ஸ்ரீல. சு. கட்சியிலிருந்தும் இடை நிறுத்துவதற்கு கட்சி நேற்று தீர்மானித்துள்ளது. ஸ்ரீல. சு. கட்சி அதிகாரிகள் குழுவினர் நேற்று இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

களனிப் பகுதி யில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவருடன் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கட்சி அதிகாரிகள் குழு நேற்று கூடி ஆராய்ந்தது. இக்கூட்டத்தின் முடிவிலேயே மேர்வின் சில்வா எம்.பியை கட்சி யிலிருந்து இடைநிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேர்வின் சில்வாவை பிரதி அமைச்சுப் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு முடிவு செய்ததாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்தார். களனி சமுர்த்தி உத்தியோத்தருடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக மேர்வின் சில்வா எம். பிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பமாகவுள்ளன.

பெருந்தெருக்கள் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்த மேர்வின் சில்வா எம். பி களனியில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டிப்போட்ட சம்பவ மொன்று கடந்த வாரம் நடைபெற்றது.  இதனடிப்படையிலேயே இவர் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் இடை நிறுத்தம் செய்யப்பட்டார்.