13

13

பரீட்சைத் திணைக்களம் தனியான விசாரணை

கண்டியில் பரீட்சை எழுதவந்த தமிழ் மாணவி கை, கால் கட்டப்பட்டு, வாய்க்குள் துணி அடைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக பரீட்சை திணைக்களம் தனியான விசாரணைகளை நடத்தும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இந்த மாணவி பரீட்சை எழுத வந்த சக மாணவிகளினால் அல்லது மாணவர்களால் கட்டப்பட்டார் என்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை பரீட்சை திணைக்களம் எடுக்கும் என்றும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க கூறினார். இந்த விசாரணைகளை பரீட்சை திணைக்களத்தின் விசேட குழுவொன்று மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது

anura.jpgஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சம்மத்தப்பட்ட முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பினை, சரத் பொன்சேகாவின் வழக்கறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது ஏற்றுக்கொள்ள முடியாது என சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

‘சன்k’ கப்பல் கனேடிய கடற்பரப்பை அடைந்தது – சர்வதேச நியதிகளின் கீழ் விசாரணை

son-k.jpg200 தமிழர்களை ஏற்றிக்கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் எம்.வி.சன்k கப்பல் கனேடிய கடல்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  200 கடல் மைல் (370 கிலோ மீற்றர்) எல்லை கொண்ட கனடாவின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயப் பகுதியை அடைந்த இக்கப்பலை, அந்நாட்டு கடற்படையினர் தற்போது பிரிட்டிஷ், கொலம்பியா மாநில கரையோரத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் என கனேடிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

இக்கப்பலின் தற்போதைய வேகத்தின்படி இன்று வெள்ளி காலை கனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட 12 கடல் மைல் (22 கி.மீ) நீர் பரப்பை இக்கப்பல் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலிலுள்ள ஆண்களும் பெண்களும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

சிறார்கள் இருப்பின் அவர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாநிலத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் பராமரிப்பில் வைக்கப்படுவார்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கையர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது 500 பேர் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்னும் கப்பலில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கப்பல் தொடர்பில் கருத்துரைத்துள்ள கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக்டோவ்ஸ், கனேடிய துருப்பினர் இந்த கப்பலை கடந்த இரண்டரை மாதங்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ளார். எனவே இந்த கப்பலில் இருப்பவர்கள் யார் என்பதில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க விசாரணை செய்யப்படுவார்கள் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இக்கப்பல் ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகவும் இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் தெரிவித்த அதிகாரி, அதில் பயணம் செய்த ஒரு பயணி இறந்துள்ளார் என்றும் உறுதிப்படுத்தாத தகவலும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளை இன்னொரு கப்பலும் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனேடிய அரசாங்கம் அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கப்பலில் வருபவர்களைத் தங்க வைப்பதற்கென கனடா சிறைச்சாலைகள் தயாராக உள்ள நிலையில் விக்டோரியா பொது மருத்துவமனையில் 75 பேரைச் சேர்க்கத்தக்கமாதிரி அது மீளத் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் அவசர மருத்துவமனைகளும் இவ்வகதிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன. தாய்லாந்து கொடியுடனான சன்k கப்பல் முன்னர் ஹரின் பனிச் 19 என்ற பெயரில் இருந்தது. 24 சிப்பந்திகளுடன் செயற்படும் சன்k கப்பல் வினோத் என்ற முன்னாள் கடற்புலியின் தலைமையில் பயணஞ் செய்வதாக தெரியவருகிறது.

முன்னர் ஆயுதக் கடத்தலுக்கு பயன்பட்டு வந்த இந்த கப்பலை கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து கடற்படை ரோந்து படகுகள் கண்ணுற்றதாகவும் அப்போது முதல் அந்த கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் குடியேற்றக்காரர்களை ஏற்றிக் கொண்டு கனடா செல்லும் முதல் கப்பல் சன்k அல்ல 10 மாதங்களுக்கு முன் ஓஸியன் லேடி என்ற கப்பலில் 76 இலங்கை தமிழர்கள் கனடாவுக்கு சென்றிருந்தனர். அந்த 76 பேரின் அகதி அந்தஸ்து தற்போது பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சன்k மற்றும் ஓஸியன் லேடி ஆகிய கப்பல்கள் புலிகளுக்கு சொந்தமானவை என தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர், உலகளாவிய ரீதியில் புலிகள் இயக்கத்தினர் உட்பட 1500 தமிழர்களை கடந்த ஒன்றரை வருட காலத்தில் 36 கப்பல்கள் மூலம் கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடத்திச் சென்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கை சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் கனடாவை நோக்கிச் செல்ல தாய்லாந்தில் ஆயத்தமாவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.இந்தக் கப்பல்களில் 500 தமிழ் சட்டவிரோதக் குடியேறிகள் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டவிரோத குடியேறிகளில் தமிbழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கனடாவை நோக்கிப் பயணித்து வரும் இலங்கைச் சட்டவிரோதக் குடியேறிகளைக் கொண்ட கப்பலுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அளிக்கும் மரியாதையின் அடிப்படையில் ஏனைய இரண்டு கப்பல்களும் பயணத்தைத் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கனேடிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பீட்டர் ஹேய்ஸ் மன்னார் விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டாக்டர்.பீட்டர் ஹேய்ஸ், கடந்த 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவருடன் இணைந்து அவரது மனைவி கிரிஸ்டி ஹேய்ஸும் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

சாட்சியங்களைத் திரட்டும் 3ம் நாள்

கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மையத்தில் முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர். டி சில்வா தலைமையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சாட்சியங்களைத் திரட்டும் பணிகளின் மூன்றாம் நாள் இன்றாகும். இன்றைய தினம் எஸ்.எல். குணசேகர மற்றும் ஆனந்த சங்கரி ஆகியோர் சாட்சியமளித்தனர்.

புலிகளுக்கு சார்பான – எதிரான – அரசுக்கு நம்பகமற்றவர்களின் A to Z வரையான பெயர்ப்பட்டியல்

LTTE LOGOA முதல் Z வரையான பெயர்கள் கொண்ட பட்டியலும் அவர்களது அரசியல் நிலைப்பாடும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தற்போதைய இலங்கை அரசையும் மையப்படுத்தி அவர்கள் என்ன அரசியல் நிலைப்பாட்டில் உள்ளனர் என்ற குறிப்புகளுடன் இத்தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் அமைப்புகள் ஊடகங்கள் பற்றிய தகவல்களும் அவற்றின் அரசியல் நிலைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் இப்பட்டியலில் தெளிவாகத் தெரியக் கூடிய தவறான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து காலமான சதாசிவம் கிருஸ்ணகுமார் (கிட்டு) முதல் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சோல்கைம் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக கூறிவருகின்ற அமெரிக்க செனட்டர் புருஸ்பெயின் உட்பட பலரது பெயர்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரித்தானியாவில் ரூட் ரவி உட்பட பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகக் குறிக்கப்பட்டு உள்ளனர். கவுன்சிலர் போல் சத்தியநேசன், ஆர் ஜெயதேவன் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பலரது பெயர் விபரங்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் அடங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் புலிகள் தொடர்பான அரசியல் நிலைப்பாடும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும்  சிங்கள மக்கள் மத்தியில் அரசுக்கு மாறுபட்ட கருத்துடைய பிரயன் செனவிரரட்னே போன்றவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் காட்டப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் உள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் கே பி க்கு ஆதரவானவர்கள், கே பி க்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் குறிப்பிடப்பட்டு உள்ளனர். கே பி க்கு ஆதரவானவர்கள் என்ற வகைப்படுத்தலைத் தவிர அரச ஆதரவாளர்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஏசியன் ரிபியூன் ஆசிரியரை டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் என்றே குறிப்பிட்டு உள்ளது.

இப்பட்டியல் யாரால் என்ன நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது என்றோ ஏன் வெளியிடப்பட்டது என்றோ இதுவரை தெரியவில்லை. ஆனால் இப்பட்டியல் ஏதோ ஒரு வகையில் தற்போதைய இலங்கை அரசினால் நம்பகமற்றவர்களாக கருதுபவர்களின் பட்டியலாகவே பெரும்பாலும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள் தற்போதைய இலங்கை அரசு மீது விமர்சனம் உடையவர்களே பெரும்பாலும் இப்பட்டியலில் உள்ளனர்.

இப்பட்டியல் இலங்கைநெற்றில் இருந்து பெறப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகின்றது.

LTTE_ACTIVISTS_and_LTTE_and_GOVERNMENT_OPPONENTS

ஆகஸ்ட் 16ம் திகதி வரை விளக்கமறியல்

 vijitha-herath.jpgகாலியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள், பொலிஸாரைத் தாக்கினார்கள் ஆகிய குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவகே உட்பட 10 பேரை ஆகஸ்ட் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா குற்றவாளி என இனங்காணப்பட்டார்

sa.jpgமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்கானப்பட்டுள்ளார்.

குற்றவாளியாக இனங்காணப்பட்டமையடுத்து அவருடைய இராணுவ பதவிகளின் நிலைகளை குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுவர்களை படைக்கு சேர்ப்பதை தவிர்க்க போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எதுவும் இல்லை – கலாநிதி ஷிரந்தி விஜேமான சாட்சியம்

சிறுவர்களைக் காப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியே சிறந்த சந்தர்ப்பமாக இருந்ததென்றும் ஆனால், அந்த வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டதாகவும் கலாநிதி (திருமதி) ஷிரந்தி விஜேமான தெரிவித்தார்.

புலிகள் இயக்கம் 2009 மே 19 ஆம் திகதிவரை சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்தத ¡கவும் அதற்குப் பின்னர் சிறுவர்கள் சேர்க்கப்படவில்லையென்றும் அவர் கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க மும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முன்னிலையில் நேற்று (12) சாட்சியமளிக்கையில் கலாநிதி விஜேமான தெரிவித்தார். சிறுவர்களைப் படைக்குச் சேர்ப்பதைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கையில் எந்த வழிமுறையும் இருக்கவில்லையென்று குறிப்பிட்ட அவர், ஆக்காலப் பகுதியில் சிறுவர் நலனைக் கவனிப்பதற்கான அரச பொறிமுறை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் செயற்பட்டபோதிலும், அதனை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் இருக்கவில்லையென்று கூறினார்.

ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று (12) இரண்டாவது நாளாக கொழும்பு ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது. முன்னாள் சட்ட மாஅதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த திருமதி விஜேமான, சிறுவர் புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டபோது தமது அவதானிப்புகளை முன்வைத்தார்.

கொங்கோ, சோமாலியா உள்ளிட்ட நாடுகளின் போர் நிறுத்த உடன்படிக்கையில் சிறுவர்களின் நலன் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலும் நேபாளத்திலும்தான் சிறுவர்களைப் படைக்குச் சேர்த்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் 60% – 70% வரையில் பலவந்தமாக சேர்க்கப்பட்ட சிறுவர்களே இருந்தனர்.

புனர்வாழ்வு அளிக்கப்படும் சிறுவர்களுக்குச் சிறந்த கல்வியையும் எதிர்காலத்தையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இளைஞர்கள் கெளரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ அவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும். கல்வி கற்காதவர்களுக்கு முறைசாராக் கல்வியையும் தொழில் பயிற்சிகளையும் வழங்கி அவர்களை சமூகமயப்படுத்த வேண்டும்.

இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்குவதன் மூலமே உரிய அபிவிருத்தியை எட்ட முடியும். நாம் என்னதான் புனர்வாழ்வை அளித்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் புலி இளைஞர்கள் பற்றிய சிந்தனை வேறாகத்தான் உள்ளது. எனவே, முன்னாள் புலிகள் இயக்க இளைஞர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் பெற்றோர்களுடன் வாழவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இன்று நடைபெறும் ஆணைக்குழு விசாரணையில் எஸ்.எல். குணசேகரவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் சாட்சியமளிக்கின்றனர்.

ஜனாதிபதியின் வருகையை சீனா எதிர்பார்த்துள்ளது.

இலங்கையின் சமாதானம்,ஸ்திரத்தன்மை தொடர்பான தற்போதைய நிலைவரத்தை சீனா வரவேற்றுள்ளது. இலங்கையானது தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் உள்சார் கட்டமைப்பை வலுப்படுத்தவும் மேலும் உதவிகளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.

பெய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடனான சந்திப்பின்போது சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

கடந்த 53 வருடங்களாக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகள்,புரிந்துணர்வுகள் என்பவற்றை சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இச்சந்திப்பின்போது நினைவுகூர்ந்துள்ளார். தாய்வான்,திபெத் தொடர்பாக சீனாவின் ஒரே சீனக்கொள்கையை இலங்கை உறுதியாக ஆதரித்து வருவதை அவர் பாராட்டியுள்ளார். அக்டோபரில் ஷங்காயில் இடம்பெறும் எக்ஸ்போ2010 இறுதி வைபவத்தில் கலந்துகொள்ள வருகைதருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சீன உதவிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் வருகையை சீனா எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் பீரிஸுக்குக் கூறப்பட்டுள்ளது.