09

09

MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

MoU+Meeting_08Aug10Whilst the Sri Lankan Opposition parties have on 8 August 2010 called on the Government (GOSL) to release the draft constitutional and electoral reforms that are to be amended and how they will be amended in the proposed new Sri Lanka Constitution, an important milestone in uniting the Tamil diaspora in London was achieved on the same day.

A representative gathering of over 50 members of Tamil and Muslim political parties, independent researchers and general public gathered at Walthamstow, East London unanimously endorsed a Memorandum of Understanding of all Tamils and Muslim communities in London to implement at the earliest opportunity the guidelines consisting of Nine (9) Minimum Aspirations of All Tamils and Muslims for circulation among the wider diaspora around the world and in Sri Lanka.

MoU_Meeting_08Aug10These Minimum Aspirations – the Walthamstow Guidelines – are not demands on the Government (GOSL) for the settlement of the Tamil problem, but are the accepted minimum conditions to be recommended to all elected Tamil and Muslim political parties and their representatives in Sri Lanka and all Tamil & Muslim diaspora  for co-operation with the Government (GOSL) to alleviate the suffering of the Tamil speaking peoples, as well as to lend support to the Government (GOSL) to amend the Constitution of Sri Lanka speedily.

The Walthamstow Guidelines are practical and pragmatic principles within a set timeframe for requesting implementation by the Government (GOSL) for good governance, reconciliation and enduring peace in Sri Lanka. The Guidelines were formulated by an all party Tamil and Muslim sub-committee consisting of political activists, adversaries, independent researchers and think tank who studied the Tamil intransigence and political naivety over one year and made these guidelines in a Consultation Paper to the larger diaspora and which was unanimously accepted by the Tamil and Muslim representatives at yesterday’s ,meeting.

The list of the Nine Minimum “Walthamstow Guidelines”  will be published soon.

Victor Cherubim
8 August 2010.

ஓகஸ்ட் 08 ஞாயிறு : தமிழர்களிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவதற்கான சந்திப்பு : தேசம்

தமிழ் அரசியல் தலைமைகளிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டவும் அப்புரிந்துணர்வை தொடர்ந்தும் தக்க வைப்பது பற்றியுமான கலந்துரையாடல் ஓகஸ்ட் 8 2010 இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பல்வேறு அரசியல் பிரிவுகளினின்றும் ஆர்வலர்கள் கலந்தகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பின் முதலாவது அம்சமாக அண்மையில் இலங்கை சென்று ஓகஸ்ட் 6 2010ல் லண்டன் திரும்பியுள்ள வாசுதேவன் இலங்கையின் தற்கால யாதார்த்த நிலவரம் பற்றி தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து ஒரு குறுகிய கலந்துரையாடல் இடம்பெறும்.

அதனை அடுத்து கலந்துரையாடலின் முக்கிய அம்சமான குறைந்தபட்ச புரிந்துணர்வு மற்றும் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் பற்றிய விடயம் கலந்துரையாடப்படும். குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவது அதற்கான வரையறைகள் பற்றி கடந்த ஓராண்டு காலமாக இடம்பெற்ற விவாதங்களை ரவி சுந்தரலிங்கம் வி சிவலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.

அவர்களுடைய தொகுப்புகளைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும். கலந்துரையாடலின் முடிவில் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் எது என்பதனை கூடி உள்ளவர்களின் ஒப்புதலுடன் தீர்மானிமாக்கப்படும்.

இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகள் பின் பொதுத்தளத்தில் வெளியிடப்படும். அது தொடர்பான மேலதிக விவாதங்கள் பல்வேறு மட்டங்களிலும் இடம்பெற்று அவை பரவலாக்கப்படும்.

இக்கலந்தரையாடல் தேசம் கூட்டங்கள் வழமையாக இடம்பெறும் குவார்கஸ் ஹவுசில் இடம்பெறாது. வோல்தம்ஸ்ரோவில் கீழுள்ள புதிய முகவரியில் இடம்பெறும்.

சந்திப்பு விபரம்:

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு

காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30

இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)

._._._._._.

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு – ஓகஸ்ட் 08,  2010ல் : தேசம்

Thesam Logoஇலங்கைத் தமிழ் மக்களுடைய வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயம் மே 18 2009ல் முடிவுக்கு வந்து புதிய அத்தியாயம் ஆரம்பித்தது. முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழலில் முற்றிலும் மாறுபட்ட அரசியல் சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். பல்வேறு முரண்பாடுகளும் பல்வேறு குறைபாடுகளும் இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளிடமே உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் பல்வேறு கூறுகளாகி நிற்பதனால் தமிழ் சமூகம் பலவினமான நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழர்களை ஆயுத பலம்கொண்டு பலாத்காரமாக ஓரணியல் நிறுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலாலும் அத்தலைமைகளை ஓரணியில் கொண்டு வரமுடியவில்லை. அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் வந்தவர்களும் உண்மையான முழுமையான புரிதலுடன் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மே 18 2009ற்குப் பின்னான அவர்களின் அரசியல் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளிடையே ஒரு புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்விற்கு வரவேண்டும் என்பது அவசியமானதாக இருந்தது. இப்புரிந்துணர்வு வெளி அழுத்தங்களால் உருவாவதைக் காட்டிலும் அவர்களின் சுயவிருப்பில் இருந்து அவர்களின் சிந்தனையில் இருந்து உருவாவது அந்தப் புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும்.

02Aug09_Audienceஇப்புரிந்துணர்வை எட்டுவதை அடிப்படையாகக்கொண்டு யூன் 21 2009இல் ‘அடுத்த நகர்வை நோக்கிய ஒரு பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் தேசம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

Constantine_T_and_Srithunga_Jதமிழ் மக்களைப் பாதிக்கின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடந்த 13 ஆண்டுகளாக தேசம் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றது. 2002ல் மலேசியத் தமிழ் அறிஞர்களை வரவழைத்து மலேசிய தமிழ் இலக்கியம் – நூல் கண்காட்சியும் கலந்துரையாடலும், 2006இல் கலாபூஷணம் பி எம் புன்னியாமீன் அவர்களை வரவழைத்து தமிழ் – முஸ்லீம் இனஉறவுகள், 2007ல் கொன்ஸ்ரன்ரைன் தலைமையில் லண்டன் வந்திருந்த ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கை: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல், 2008இல் 13வது திருத்தச்சட்டம் பற்றிய சந்திப்பு இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் தேசம் கலந்துரையாடல்களை மேற்கொண்டது. 

இவ்வாறு சமகால விடயங்களை கலந்துரையாடி விவாதிக்கும் தேசம் யூன் 21 ஏற்படுத்திய சந்திப்பில் பல்வேறு முரண்பட்ட அரசியல் கருத்துக்களையும் அரசியல் பின்னணியையும் உடையவர்கள் கலந்துகொண்டு  பல்வேறு அரசியல் கருத்துக்களையும் முரண்பாடுகளையும் உடையவர்கள் மத்தியில் புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் அதற்கான உரையாடல் அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இச்சந்திப்பில் இலங்கையில் செயற்படுகின்ற பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Shanmugaratnam Nஅதன் அடிப்படையில் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பில் ஓகஸ்ட் 2ல் மற்றுமொரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பில் பேராசிரியர் என் சண்முகரட்ணம், வியூகம் ஆசிரியர் ரகுமான் ஜான் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் இறுதியில் கீழுள்ள எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்று  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

02Aug09_Audienceஇந்த எட்டு விடயங்களிலும் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறை என்ன என்பது பற்றி ஆராய்ந்து உடன்பாடு எட்டுவதற்கு 15 பேர் கொண்ட செயற்குழு உருவாக்கப்பட்டது. இவர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் 12 சந்திப்புக்களை மேற்கொண்டு தற்போது குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் இதுவே இறுதியானது அல்ல. இந்த வரையறையை நிர்ணயம் செய்ய கேட்டுக்கொண்ட யூன் 21 2009, ஓகஸ்ட் 02 2009 பொதுக் கூட்டத்தளத்தைக் மீண்டும் கூடி அவர்களின் கருத்துக்களையும் பெற்று இந்தக் குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இது பற்றிய விவாதம் ஆரம்பிக்கப்பட்ட போது அன்றைய நிலைமைகள் புரிந்துணர்வு எட்டப்படுவதற்கான தேவையை வலியுறுத்திய போதும் கட்சிகள் தேர்தல்களை எதிர்நோக்கி இருந்த அப்போதைய சூழல் புரிந்துணர்விற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Tamil_PP_28July10யூன் 24 2010இல் முதலில் சந்தித்த தமிழ் கட்சிகள் தற்போது தொடர்ச்சியாக 3 சந்திப்புக்களை மேற்கோண்டு தமக்கிடையே புரிந்துணர்வை எட்டுவதற்கும் தமிழ் மக்களுடைய நலனை முன்னிலைப்படுத்தும் பொது வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படவும் முன் வந்துள்ளன. மேலும் சந்திப்புக்கள் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியின் பணிமனையிலோ என்றில்லாமல் பரஸ்பர உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தமிழ் கட்சிகளின் அடுத்த சந்திப்பை கிழக்கு மாகாணத்தில் நடாத்த முதலமைச்சர் சந்திரகாந்தன் அழைப்புவிடுத்துள்ளார். அதன்படி அச்சந்திப்பு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இத்தமிழ் கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டிற்கு வரும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மௌனமாகவே உள்ளது. தமிழ் மக்களின் கூடிய பிரதிநிதித்துவத்தை வைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பொது இணக்கப்பாடு ஏற்படுத்தப்படுவது அவசியம் என்பதனை ஏனைய கட்சிகள் அறிந்தே தமது அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!

தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஒவ்வொருவருமே பொறுப்புடையன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் கூடிய பொறுப்புடையது. பெரும்பாலும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதன் தலைமைகளை உருவாக்கியது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலே. அந்த வகையில் வி ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, ஆர் சம்பந்தன் ஆகியோர் தாங்கள் பெற்றெடுத்த அரசியல் வாரிசுகளுடன் ஒரு புரிந்துணர்விற்கு வந்து தமிழ் மக்களுடைய நலன்கள் மேலும் பாதிக்கப்படாமல் தடுப்பதுடன் தமிழ் மக்களுடைய அரசியல் சமூக பொருளாதார வாழ்நிலையின் தரத்தை உயர்த்துவதற்கு முன்வர வேண்டும்.

தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் தமக்கிடையேயான முரண்பாடுகளுடன் முட்டிமோதி காலத்தையும் நேரத்தையும் விணடிப்பது தமிழ் மக்களின் வாழ்நிலையையே கீழ்நிலைக்கு இட்டுச்செல்ல காரணமாகிறது. அதனால் தமிழ் கட்சிகளிடையே ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அழுத்தங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களாலும் வழங்கப்பட வேண்டும்.

சந்திப்பு விபரம்:

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு

காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30

இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)

இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறையைச் செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஆன சந்திப்பு ஓகஸ்ட் 08 2010ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்னைய சந்திப்புக்கள் பற்றிய விபரமும் இணைக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறையை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்னையை சந்திப்புக்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம்.

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளார்கள் உள்ளதாக  தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரக் கல்விப்பணியகம் வெளியிட்டுள்ள இத்தகவலில், தனிப்பட்ட முறையிலும் பாலியல் மையங்களிலும் இரகசியமாக இவர்கள் செயற்பட்டு வருவதால் துல்லியமான கணக்கெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமலுள்ளதாக சுகாதாரக்கல்விப்பணியகத்தின் ஊடக இணைப்பாளர் டொக்ரர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும், எயிட்ஸ் கட்டப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் நாடு முழுவதும் 30 ஆயிரம் தொடக்கம் 40ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘மசாஜ்’ நிலையங்கள், நடமாடும் பாலியல் மையங்கள் ஊடாகவும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம். இருவரின் நிலை கவலைக்கிடம்!

இன்று (Aug 08 2010) மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரம்புக்கணையை சொந்த இடமாகக் கொண்ட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  பயணம் செய்து கொண்டிருந்த இவர்களின் முச்சக்கரவண்டி எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.  படுகாயமடைந்துள்ளவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலைகளில் யாழ்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

SriLanka_MAS_Factoryதென் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 70 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ். செயலகத்தில் நடைபெற்ற பயிற்சி நெறியொன்றின் மூலம தொழில்உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இவ்வேலைவாய்ப்ப வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27, 28, 29ம் திகதிகளில் மாவட்ட திட்டமிடல் செயலகத்தினால் 145 மாணவர்களுக்கு ஆடைத் தொழிற்சாலைத்துறை சம்பந்தமான செயலமர்வு நடத்தப்பட்டது.  இவர்களில் 70 பேருக்கே தற்போது இவ்வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான உணவு, தங்குமிடவசதிகள் என்பன குறித்த நிறுவனங்களால் வழங்கப்படும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்!

IDP_Camp வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த 4ம் திகதி ஆரம்பமான இந்நடவடிக்கைகள் இம்மாதம் 30 திகதி வரை நடைபெறும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகள் என்ற அடிப்படையில் இம்மீள்குடியேற்ற நடவடிக்கைககள் நடைபெற்று வருகின்றன.  இறுதிக்கட்ட போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வவுனியா அகதிமுகாம்களில் இருந்து பின்னர் வெளி மாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

IDP_Campவெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களுக்கான இறுதிக்கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கை இதுவென அறிவிக்கப்பட்டள்ளதால் பெருமளவிலான மக்கள் தற்போது கிளிநொச்சியிலுள்ள தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியமரும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளநொச்சி மத்திய கல்லூரியில் அமைந்துள்ள இடைக்கால முகாமில் வைத்து கிளிநொச்சிப் பகுதி மக்களுக்கான இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை 9 மணியிலிருந்து மாலை வரை இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் கிராமசேவையாளரின் பதிவுகள், பின்னர் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரின் பதிவுகள் மற்றும், அவர்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் பதிவுகளும் பின்னர் அவர்களாலும் புகைப்படம் பிடிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அவ்வப்பகுதி சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவுள்ள இராணுவத்தினர் பதவுகளுக்குற்படுத்தப்பட்ட மக்களை அவர்களின் காணிகளில் கொண்டு சென்று விடுகின்றனர். முன்னர் இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 12 கூரைத் தகரங்கள் கொடுக்கப்பட்டன. பின்னர் தறப்பாள்கள் கொடுக்கப்பட்டன. தற்போது எதுவும் கொடுக்கப்படாத நிலையில் தங்கள் வீடுகள் அழிவடைந்த, சேதமுற்ற நிலையில் மிகவும் வசதியற்ற நிலையில் மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியமர்ந்து வருகின்றனர்.

இதே வேளை, படைத்தரப்பின் பதிவுகள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வுகளின் போது மக்கள் நீண்ட நேரங்கள் வரிசைகளில் காத்திருந்து பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வன்னியில் மீண்டும் குண்டுச்சத்தங்கள்!

Control_Explosionவன்னிப் பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் குண்டுச்சத்தங்களின் அதிர்வுகளை பல சந்தர்ப்பங்களில் கேட்க முடிகிறது. இன்றும் (08-08-2010) கிளிநொச்சிப் பகுதிகளில் இச்சத்தங்களை கேட்க முடிந்தது. படையினரால் மீட்கப்படும் வெடிபொருட்கள் சில சமயங்களில் வெடிக்கவைக்கும் போது இச்சத்தங்களை  மக்களால் உணரமுடிகின்றது. எனினும் கடந்தகால போரின் கொடுமைகளில் சிக்கியிருந்த மக்கள் இவ்வாறான ஒலிகளை கேட்கும் போது அச்சமடைகின்றனர். போரின் நினைவுகள் அவர்கள் மனங்களில் மீண்டும் எதிரொலிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, யாழ்.குடாநாட்டிலுள்ள மக்கள் வன்னி நிலமைகள் தொடர்பாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். வன்னியில் சில இடங்களில் சண்டை நடைபெறுவதாகவும், விமானக்குண்டு வீச்சுக்கள் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தங்களுக்குள்  வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் வன்னிப்பகுதிகளில் சில சமயங்களில் கேட்கும் வெடிகுண்டு சத்தங்கள் படையினரால் மீட்கப்படும் அல்லது, அவர்களால் செயலிழிக்கச் செய்யப்படும் குண்டுகளின் ஒலி என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்பு: – 15 பேர் கொண்ட இலங்கை மருத்துவக் குழு பாக். பயணம்

doctor.jpgபாகிஸ் தானின் பல பிரதேசங்களில் அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 12 இலட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களிடையே தொற்று நோய்கள் பரவக் கூடும் என்பதால் அதற்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள இலங்கையிலிருந்து விசேட மருத்துவ குழுவொன்றை அனுப்பிவைக்க சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கேற்ப 15 பேரைக் கொண்ட விசேட மருத்துவ குழுவை எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 6 இலங்கையர்கள் கைது

தமிழ்நாடு கன்னியாகுமரி விடுதியொன்றில் தங்கியிருந்த 6 இலங்கையர்களை தமிழக பொலீஸார் வௌ்ளியிரவு கைது செய்துள்ளனர். தமிழக பொலிஸ் உயர் அதிகாரி பி.சக்திவேலின் தகவலின் படி இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜொன்ஸன் (20), அருள் பிரதாப் (24), ஜீவா (30), சதீஷ் (22), விமல் ராஜ் (25), ஜெயச்சந்திரன் (26) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்

5800 இலங்கையருக்கு இம்முறை ஹஜ்ஜை நிறைவேற்ற வாய்ப்பு பெளசிக்கு சவூதி அமைச்சர் அறிவிப்பு

haji.jpgஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை 5800 இலங்கையருக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச்.எம். பெளசி தெரிவித்தார்.

கோட்டா அடிப்படையில் இலங்கையர் 2800 பேருக்கே புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சவூதி அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இலங்கையிலிருந்து ஹஜ் நிறைவேற்ற செல்வோரின் தொகையை அதிகரித்துத் தருமாறு அமைச்சர் ஏ. எச். எம். பெளசி சவூதி அரசிடம் விடுத்த

வேண்டுகோளுக்கமையவே இவ்வதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெளஸி தலைமையிலான குழுவினர் அண்மையில் சவூதி அரேபியா சென்று சவூதி மன்னர், ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சவூதி அரேபியாவின் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் புசூட் பின் அப்துல் கலாம் அல் பாரிஸ் இத்தகவலை அமைச்சர் ஏ. எச். எம். பெளசிக்கு அறிவித்துள்ளார்.  ஹஜ்ஜாஜிகளின் தொகையை அதிகரித்து தந்ததற்காக அமைச்சர் பெளஸி, சவூதி மன்னர் மற்றும் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர், அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 1000 வீடமைப்பு திட்டம்; முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இன்று இந்தியாவிடம் கையளிப்பு

வடக்கில் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்திய அரசின் உதவியின் முதற்கட்டமாக கட்டிக்கொடுக்கப்படவுள்ள 1000 மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இன்று இந்திய அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றத்துக்கான செயலணி இந்த அறிக்கையை இந்திய அரசிடம் கையளிக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதேச பிரிவுகளில் 150 வீடுகளும் வவுனியா வடக்கில் மூன்று பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், மன்னாரில் மடு மற்றும் மாந்தை பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், கிளிநொச்சியில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250 வீடுகளும் இந்தியா முதற் கட்டமாக கட்டிக்கொடுக்கவுள்ளது.

மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான இடங்கள் மற்றும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய மக்கள் யார் யார் என்பது பற்றிய சகல விபரங்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்தியா இலங்கையில் உள்ள வடபகுதி மக்களுக்கு 51000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளது. இதில் முதற் கட்டமாக 1000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளதால் அதற்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த கட்டமாக இந்தியா கட்டிக்கொடுக்கவுள்ள 50,000 வீடுகளுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளையும் ஜனாதிபதி செயலணி ஆரம்பித்துள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.

இதே போன்று மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்தியா வழங்கும் வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.