பாகிஸ் தானின் பல பிரதேசங்களில் அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 12 இலட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களிடையே தொற்று நோய்கள் பரவக் கூடும் என்பதால் அதற்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள இலங்கையிலிருந்து விசேட மருத்துவ குழுவொன்றை அனுப்பிவைக்க சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கேற்ப 15 பேரைக் கொண்ட விசேட மருத்துவ குழுவை எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.