24

24

வடமராட்சிக் கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

வடமராட்சிக் கிழக்கு மக்களை மீள்குடியமர்த்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 28ம் திகதி பலாலி படைத்தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. யாழ். மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவும் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு வடமராட்சிக் கிழக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது குறித்து ஆராயவுள்ளனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களிலும் வேறு பிரதேசங்களிலும் வசித்து வரும் வடமராட்சிக் கிழக்கு மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என ஏற்கனவே யாழ். புடைத்ததளபதி வாக்குறுதியளித்திருந்தார். அத்துடன் அரசாங்க அதிபரும் ஏற்கனவே படைத்தளபதியிடம் இவ்விடயம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், நடைபெறவுள்ள கலந்துரையாடலில் வடமராட்சிக் கிழக்கு  மக்களின் மீள்குடியேற்றம் குறித்து முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சிக்கழக்கு மக்கள் பெரும்பாலானவர்கள் கடற்றொலிலாளர்களாவர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழ்வதால் இவர்கள் தொழில் வாய்ப்பின்றி பாதிப்புற்ற நிலையிலுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் வருகை!

mervyn2.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். தனது குடும்பத்தினருடன் இவர் நேற்றிரவு யாழ்ப்பாணம் வருகை தந்தார். வரும் வழியில் கொடிகாமம் இராமாவில் அகதி முகாமிற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்தார். சுமார் 10 இலட்ச ரூபா பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் உபஉணவுப் பொருட்களையும் அம்மக்களுக்கு வழங்கி அம்மக்கள் மத்தியில உரைநிகழ்த்தினார். பின்னர் மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் சென்ற அவர் இரவுப் பொழுதை யாழ்.நகரில் கழித்தார். மேர்வின் சில்வாவுடன் கண்டி காலதன்னவில சிறீ மகாபத்திரகாளி ஆலய பூசகர் நயம்பதி ஆராச்சிலாகே காமினி ஆனந்தவும் வருகைதந்திருந்தார்.

சமுர்த்தி உத்தியோத்தர் ஒருவரை மரத்துடன் கட்டியதால் பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மேர்வின் சில்வா சனிமாற்றம் காரணமாகவே தனக்கு இந்நிலை ஏற்பட்டது என தெரிவித்திருந்தார். தற்போது யாழ்ப்பாணத்திற்கு பூசகர் ஒருவருடன் வருகை தந்திருக்கும் அவர் ஏதேனும் நேர்த்திகடனுக்காக வந்திருக்கலாம் என தென்னிலங்கை அரசியல் வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகாம்களிலுள்ள 50 ஆயிரம் மக்களை விரைவில் மீள்குடியமர்த்துமாறு ஆயர்கள் குழு ஜனாதிபதியிடம் வலியுத்தல்.

Bishops_Meet_PresidentMRஇன்னும் அகதி முகாம்களில் தங்கியுள்ள 50 ஆயிரம் மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கத்தோலிக்க ஆயர்கள் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே மீள்குடியமர்த்தபட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை தாமதமின்றி வழங்குவது குறித்தும் இக்குழு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

Bishops_Meet_PresidentMRகொழும்பில் நடைபெறும் ஆயர்களின் வருடாந்தக் கூட்டத்திற்காக நாடு முழுவதிலுமிருந்து வந்து ஒன்று கூடியிருக்கும் கத்தோலிக்க ஆயர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயம் குறித்து வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீள்குடியமாத்தப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதிக்கு பாராட்டுக்களையும் இக்குழவினர் தெரிவித்தனர். இன்னுமும் மீள்குடியமர்த்தப்படாமல் அகதிமுகாம்களில் தங்கியுள்ள மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தல், மீள்குடியமத்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ளல், சிறுவர்கள் பாடசாலை மாணவர்களின் நலன்களை பேணுதல் என்பன தொடர்பாகவும் உரையாடப்பட்டதோடு, ஆயர்கள் குழவினர் வருடக்கணக்காக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். ஆலயச்சூழலில் நடமாடும் திருடர்கள் குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Nallur_Thiruvillaயாழ்.குடாநாட்டில் நல்லார் கந்தசாமி அலயம் உட்பட பல ஆலயங்களில் திருவிழா உற்சவங்கள் நடைபற்று வரும் நிலையில பெருந்திரளாக கூடும் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. பல்வேறு வேடங்களில் நடமாடித் திரியும் இக் கள்வர்களிடமிருந்து தங்கள் நகைகளைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா எச்சரித்துள்ளார்.

Nallur_Thiruvillaகுறிப்பாக நல்லூர் ஆலயத் திருவிழாவில் மிக அதிகளவான பக்தர்கள் தினமும் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், அவ்வாலய சுற்றாடல்களில் திருடர்களின் நடமாட்டமும் அதரித்துள்ளதாக சுடடிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்க நகைகளைத் தவிர்த்து ‘கவரிங்’ நகைகளை அணிந்து வருமாறும் பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சாத்திரம் கூறுபவர்கள் போல் நடித்து பொதுமக்களின் தங்க நகைகளை அபகரித்த 12 பேரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தாக்கதாகும்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரச- எதிரணி தலைவர்கள் ஆராய்வு

imp.jpgஅரச எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று திங்கட்கிழமை மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றதாகவும் அதன்போது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சுமார் ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்றஉறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் எதிர்க்கட்சித் தரப்பில் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பங்கேற்றனர்.

விரைவில் அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கான துரித ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் அரசாங்கம் அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி தலைமையிலான குழு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிரணிக் குழுவுடன் நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளது.

நேற்று மாலை 3.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பு மாலை 5 மணிவரை இடம்பெற்றதாகவும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆராயும் குழுவினால் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் அரசியலமைப்புத் திருத்தம் ஆரம்பகட்ட ஏற்பாடுகள் அடுத்த மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவான இணக்கப்பாடு நேற்று எட்டப்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரம் தெரிவித்தது.

புகழேந்தியின் – போர் முகங்கள்

pukal.jpgமுள்ளி வாய்க்கால் துயரங்களை சித்தரிக்கும், ஓவியங்களை போர் முகங்கள் என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தமிழகமெங்கும் காட்சிப்படுத்தி வருகின்றார். முதன் முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து வருகின்றது.

சென்னை பிரஞ்சு கலாச்சார நிறுவனமான அலயன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்தில் இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

பிரகாஷ்ராஜ் – போனி வர்மா திருமணம்.

prakash-marriage.jpgநடிகர் பிரகாஷ்ராஜ் – போனி வர்மா திருமணம்  இன்று மும்பையில் நடந்தது.

தமிழ், தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். காஞ்சீவரம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். பிரகாஷ்ராஜூம் அவரது முதல் மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர். பின்னர் இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர். போனியைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார் பிரகாஷ் ராஜ்.

இந்த நிலையில் பிரகாஷ் ராஜூக்கும் போனிவர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. அங்குள்ள மலாடு விளையாட்டு மைதான அரங்கில் திருமணம் நடந்தன.  வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய திரையுலக பிரமுகர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து பிரகாஷ் ராஜுக்கு நெருக்கமான இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

உள்ளூர் தயாரிப்பு பி.ரி.ஐ.பக்றீரியாவை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தம்

images.jpgஉள் நாட்டில் தயாரிக்கப்பட்ட பி.ரி.ஐ. பக்றீரியாவை நேற்று திங்கட்கிழமை குறிப்பிட்ட இப்பகுதிகளில் வெளியிடவிருந்த போதும் அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இதனை வெளியிடுவதாக இருந்தபோதும் அது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சுகாதார பிரதியமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தால் இந்த பக்றீரியாவானது ஏதாவது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக பரிசோதனை செய்யவேண்டியிருப்பதாகவும் பிரதியமைச்சர்
அமரவீர கூறியுள்ளார். அவர்கள் பூரண அறிக்கையொன்றை சமர்ப்பித்த பின்னரே பி.ரி.ஐ. பக்றீரியாவை வெளியிடமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பை அழிப்பதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பி.ரி.ஐ. பக்றீரியாவை கொழும்பில் மூன்று இடங்களில் நேற்று வெளியிடத்திட்டமிடப்பட்டிருந்தது.நாளை புதன்கிழமையும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும் அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பசில் தலைமையில் தூதுக்குழு இந்தியாவுக்கு இன்று பயணம்

இந்திய பிரதமரின் விசேட தூதுவரது விஜயம் தொடர்பாக புதுடில்லி இன்னமும் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை எனத் தெரிவித்த அரசாங்கம், இதேவேளை இலங்கையின் மூவரடங்கிய தூதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பெற்றோலிய,பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரின் விசேட தூதுவர் இவ்வாரத்தில் கொழும்பு வரவிருப்பதாகவும் அதிகாரி மட்டத்தில் ஒருவர் அனுப்பப்படலாமென முன்னர் கூறப்பட்டாலும் இப்போது அரசியல் மட்டத்திலான ஒருவரே அனுப்பப்படலாமெனவும் அதில் சிதம்பரம், பாலு ஆகிய இருவரது பெயர்களும் அடிபடுவதாக வார இறுதிப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருப்பதாக செய்தியாளர் சுட்டிக்காட்டியபோது பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியதாவது; இந்தியப் பிரதமர் தனது விசேட தூதுவரை அனுப்ப விருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் அறிவித்திருப்பது மட்டுமே எமக்குத் தெரியும். யார் அனுப்பப்படுகின்றார். எப்போது அவர் வருவார் என்பது பற்றிய எந்த விபரமும் புதுடில்லியிடமிருந்து எமக்கு உத்தியோக பூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்திய பிரதமரின் விசேட தூதுவர் எப்போது வந்தாலும் அவரை வரவேற்பதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.அவருக்கு வடக்கு, கிழக்கு உட்பட எங்கு வேண்டுமானாலும் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படும் சுதந்திரமாக சென்று வர இடமளிக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரமே ஜயந்த தெரிவித்தார்.

ஐ.சி.சி. துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் இடத்தில் சங்ககர

sangakkara.jpgஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை அணி தலைவர் சங்ககராவும் 2வது இடத்தில் சேவாக்வும் உள்ளனர். 3வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் கிளார்க்கும் உள்ளனர்.