இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளார்கள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரக் கல்விப்பணியகம் வெளியிட்டுள்ள இத்தகவலில், தனிப்பட்ட முறையிலும் பாலியல் மையங்களிலும் இரகசியமாக இவர்கள் செயற்பட்டு வருவதால் துல்லியமான கணக்கெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமலுள்ளதாக சுகாதாரக்கல்விப்பணியகத்தின் ஊடக இணைப்பாளர் டொக்ரர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும், எயிட்ஸ் கட்டப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் நாடு முழுவதும் 30 ஆயிரம் தொடக்கம் 40ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
‘மசாஜ்’ நிலையங்கள், நடமாடும் பாலியல் மையங்கள் ஊடாகவும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.