தேறி வருகிறார் ஆரியவதி

ariyawathi_main.jpgஆணிகள்,  ஊசிகளை சூடுகாட்டி உடலில் ஏற்றப்பட்டிருந்த மாத்தறையைச் சேர்ந்த ஆரியவதி (49 வயது) எனும் பெண் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சத்திரசிகிச்சையின் பின்னர் குணமடைந்து வருகிறார். அவர் நேற்று பேசக்கூடிய நிலையில் இருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க நேற்று ஆரியவதியை பார்வையிட்டுள்ளார். அத்துடன் அப்பெண்ணுக்கு வீடொன்றையும் வழங்குவதாக அவர் தெரிவித்திருக்கிறார். உடலில் மீதமாக இருக்கும் 5 ஊசிகளையும் உடனடியாக அகற்ற முடியாதிருப்பதாகவும் ஏனெனில் அப்பெண்ணின் நரம்புகள் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் உடனடியாக அவற்றை அகற்றவில்லை எனவும் கம்புறுப்பிட்டிய மருத்துவமனை பணிப்பாளர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

இப்பெண்ணுக்கு 3 ஆயிரம் டொலர்களை அரசாங்கம் வழங்கும் என்று அதிகாரிகள் கூறினர். ஆஸ்பத்திரியில் வைத்து 1 இலட்ச ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதித் தொகை ஆரியவதி ஆஸ்பத்திரியை விட்டு சென்ற பின் கொடுக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் கூறினார்.

தனது குடிசையை வீடாக நிர்மாணிக்கும் நோக்கத்துடனேயே ஆரியவதி சவூதிஅரேபியாவுக்கு சென்றிருந்தார். கடந்த மார்ச்சில் அங்கு சென்றிருந்த ஆரியவதியை வேலைக்கு அமர்த்திய குடும்பம் கொடுமைப்படுத்தியுள்ளது. கணவனும் மனைவியும் தன்னை அடிப்பதாகவும் அவர்களின் ஏழு பிள்ளைகளும் தன்னை கொல்லப் போவதாக மிரட்டுவதாகவும் ஆரியவதி கூறியுள்ளார். மூன்று மாதங்கள் சித்திரவதைக்குள்ளான இவரை அவருக்கு வேலை பெற்றுக் கொடுத்த முகவரிடம் தொழில் வழங்கியவர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆரியவதியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடுமாறு முகவரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆணிகளை சூடுகாட்டி பெண் (எஜமானி) தனது கணவரிடம் கொடுக்க அவர் தனது உடலில் அவற்றை அறைந்ததாக ஆரியவதி கூறியுள்ளார். நான் வலியால் சத்தமிட்டால் அவர்களின் பிள்ளைகள் என்னை கொல்லப் போவதாக கத்தியைக் காட்டி மிரட்டுவார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *